வட அமெரிக்கா

ஆளில்லா தீவில் 3 நாட்களாக சிக்கித் தவித்த நபர் – மீட்ட அமெரிக்க கடலோர காவல் படை

அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்திற்கு கிழக்கு பகுதியில் பஹாமாஸ் உள்ளது . தீவு நாடான பஹாமாசின் கட்டுப்பாட்டில் உள்ள கேசால் என்ற ஆள்நடமாட்டம் இல்லாத சிறிய தீவில் மூன்று நாட்களாக சிக்கித்தவித்த நபரை அமெரிக்க கடலோர காவல் படையினர் பத்திரமாக மீட்டுள்ளனர்.

64 வயது நிரம்பிய அந்த நபர் பஹாமாசைச் சேர்ந்தவர். அவர் பாய்மரப் படகில் கடற்பயணம் மேற்கொண்டபோது படகு பழுதடைந்து கேசால் தீவில் தரைதட்டி நின்றுவிட்டது. அங்கிருந்து வெளியேற வழி தெரியாமல் தவித்தார். அத்துடன், அவசரகால சூழ்நிலைகளில் உதவிக்கு அழைப்பதற்காக பயன்படுத்தப்படும் சாதனமான சுடரை அவ்வப்போது எரியவிட்டார்.

இவ்வாறு மூன்று நாட்கள் ஆன நிலையில் அந்த வழியாக அமெரிக்க கடலோர காவல் படையினர் ஹெலிகாப்டரில் ரோந்து சென்றனர். அப்போது, படகில் இருந்து வெளிப்பட்ட சிவப்புநிற ஒளியை பார்த்து, யாரோ உதவிக்கு அழைப்பதை அறிந்தனர். உடனடியாக தகவல் தொடர்பை ஏற்படுத்துவதற்காக ரேடியோ கருவி மற்றும் படகில் உள்ள நபருக்கு உணவு, தண்ணீர் பாட்டில் ஆகியவற்றை கீழே போட்டனர்.

பின்னர் அந்த நபர், ரேடியோ முலம் கடலோர காவல்படையை தொடர்புகொண்டு மூன்று நாட்களாக தீவில் தவிப்பதாக கூறியிருக்கிறார். இதையடுத்து கடலோர காவல் படையினர் அந்த நபரை மீட்டு ராயல் பஹாமாஸ் பாதுகாப்பு படையினரிடம் ஒப்படைத்தனர். அவரது உடல்நிலை சீராக இருந்ததாக அதிகாரிகள் கூறி உள்ளனர்.

(Visited 6 times, 1 visits today)

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி வட அமெரிக்கா

கனடாவில் வீட்டில் இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை!

கனடாவில் ஆயுத உற்பத்தியில் ஈடுபட்ட நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். நோவா ஸ்கோட்டியாவின் மீகர்ஸ் கிரான்ட் என்னும் பகுதியின் வீடொன்றில் இந்த இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை
செய்தி வட அமெரிக்கா

அறுவைசிகிச்சை முடித்த பின் தெரிய வந்த உண்மை… கதறி அழுத தந்தை!

அமெரிக்காவைச் சேர்ந்த இளம்பெண் தன் தந்தைக்கே தெரியாமல், ரகசியமாக அவருக்குச் சிறுநீரக தானம் செய்துள்ள சம்பவத்தால், நெகிழ்ந்து போன தந்தையின் வீடியோ இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. அமெரிக்காவின்

You cannot copy content of this page

Skip to content