உலகம் செய்தி முக்கிய செய்திகள்

மாலத்தீவில் 2007க்குப் பிறகு பிறந்தவர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை

ஜனவரி 2007க்குப் பிறகு பிறந்த அனைவருக்கும் புகையிலை புகைப்பதைத் தடைசெய்துள்ள மாலத்தீவு(Maldives), நாடு தழுவிய தலைமுறை புகையிலை தடையை அமல்படுத்திய உலகின் ஒரே நாடாக மாறியுள்ளது.

இந்த ஆண்டு தொடக்கத்தில் ஜனாதிபதி முகமது முய்சுவால்(Mohamed Muizzu) தொடங்கப்பட்ட இந்த நடவடிக்கை நவம்பர் 1 முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.

“பொது சுகாதாரத்தைப் பாதுகாத்தல் மற்றும் புகையிலை இல்லாத தலைமுறையை ஊக்குவிப்பதே இதன் முதன்மை நோக்கம்” என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.

“புதிய விதியின் கீழ், ஜனவரி 1, 2007 அன்று அல்லது அதற்குப் பிறகு பிறந்த நபர்கள் மாலத்தீவுகளுக்குள் புகையிலை பொருட்களை வாங்குவது, பயன்படுத்துவது தடைசெய்யப்பட்டுள்ளது” என்று அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.

மேலும், மாலத்தீவுக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளுக்கும் இந்த தடை பொருந்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், குறித்த தடையை மீறி புகையிலை பொருட்களை விற்பனை செய்தால் 50,000 ரூஃபியா ($3,200) அபராதம் விதிக்கப்படும், அதே நேரத்தில் வேப்(vape) சாதனங்களைப் பயன்படுத்தினால் 5,000 ரூஃபியா ($320) அபராதம் விதிக்கப்படும்.

பிரிட்டனில்(Britain) முன்மொழியப்பட்ட இதேபோன்ற தலைமுறை தடை இன்னும் சட்டமன்றச் செயல்பாட்டில் உள்ளது, அதே நேரத்தில் இத்தகைய சட்டத்தை இயற்றிய முதல் நாடான நியூசிலாந்து(New Zealand), அது அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு வருடத்திற்கும் குறைவான காலத்திற்குள், நவம்பர் 2023ல் ரத்து செய்தது குறிப்பிடத்தக்கது.

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி