செய்தி

இலங்கையில் இளைஞனின் உயிரை பறித்த மதுபானம்

குருணாகல் – பிங்கிரிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திகன்வெல பகுதியில் மதுபானம் அருந்திகொண்டிருந்த ஒருவர் திடீரென உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து விசாரணை இடம்பெற்றுள்ளதாக பிங்கிரிய பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இவ்வாறு உயிரிழந்தவர் குருணாகல், வெல்லவ பிரதேசத்தைச் சேர்ந்த 21 வயதுடைய இளைஞர் ஆவார்.

இவர் சக நண்பர்களுடன் மது அருந்திகொண்டிருந்த போது திடீர் சுகயீனம் காரணமாக பிங்கிரிய ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த மரணம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பிங்கிரிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

SR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி