பொழுதுபோக்கு

ஆபாச மெசேஜ் அனுப்பிய இளைஞன் கொலை! பிரபல நடிகர் கைது

கன்னட திரையுலகில் முன்னணி மாஸ் நடிகராக வலம் வரும் தர்ஷன், கொலை வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டுள்ளார்.

கன்னட திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தர்ஷன். கர்நாடக மாநிலத்தில் அவருக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இவர் எந்த அளவு பேமஸ் ஆக இருக்கிறாரோ அதே அளவு சர்ச்சைகளிலும் சிக்கி இருக்கிறார்.

இவர் நடிகர் நிக்கி துக்ரல் உடன் தகாத உறவில் இருந்ததாகவும் அதை தட்டிக்கேட்ட தன்னை அடித்து துன்புறுத்தியதாகவும் அவரது மனைவி விஜயலட்சுமி அளித்த புகாரின் பேரில் தர்ஷன் ஏற்கனவே தர்ஷன் கைதாகி பின்னர் விடுதலை ஆனார்.

இந்த நிலையில் மெடிக்கலில் வேலை பார்த்து வந்த சித்ரதுர்காவை சேர்ந்த ரேணுகா சுவாமி என்பவர் கடந்த ஜூன் 9ந் தேதி மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு காமல்ஷில்பாயா என்கிற பகுதியில் உள்ள ஒரு கால்வாயில் அவரது உடல் கண்டெடுக்கப்பட்டது.

பின்னர் ரேணுகா சுவாமியின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுமதிக்கப்பட்டது. பின்னர் பிரேத பரிசோதனை முடிவில் ரேணுகா சுவாமி அடித்து துன்புறுத்தி கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. பின்னர் ரேணுகா சுவாமி கொலை வழக்கில் இருவர் சரண்டர் ஆகி, தாங்கள் தான் கொலை செய்ததாக கூறி இருக்கின்றனர். பணப்பிரச்சனை காரணமாக அவரை கொன்றதாக அவர்கள் தெரிவித்திருக்கின்றனர்.

ஆனால் போலீசாருக்கு இதில் ஏதோ மர்மம் இருக்கிறது என தெரியவர, கொலை செய்தது யார் என்பதை கண்டறிய தீவிர விசாரணையில் இறங்கியதில், ரேணுகா சுவாமி ஆன்லைன் வாயிலாக நடிகை பவித்ரா கெளடாவுக்கு ஆபாச மெசேஜ் அனுப்பி வந்தது தெரியவந்தது.

இதையடுத்து நடிகை பவித்ரா கெளடாவும் விசாரணை வளையத்துக்குள் சிக்கினார். பின்னர் தான் ஆன்லைனின் மெசேஜ் அனுப்பி டார்ச்சர் கொடுத்ததால் அவரை ஆள் வைத்து கொலை செய்தது கண்டறியப்பட்டு உள்ளது.

இந்த வழக்கில் பவித்ரா கெளடா உள்பட 9 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், நடிகர் தர்ஷனுக்கும் இதில் தொடர்பு இருப்பதாக தெரியவந்ததால் அவரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

தர்ஷன் நடிகை பவித்ராவுக்கு நெருக்கமானவர் ஆவார். மைசூரில் உள்ள பண்ணைவீட்டில் இருந்த நடிகர் தர்ஷனை கைது செய்த போலீசார் அவரை பெங்களூரு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின்னர் சிறையில் அடைத்தனர். இந்த விவகாரம் கன்னட திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

(Visited 4 times, 1 visits today)
Avatar

MP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்

You cannot copy content of this page

Skip to content