புதுக்கடை நீதவான் நீதிமன்ற வளாகத்தி சுட்டுக்கொலை செய்யப்பட்ட கனேமுல்ல சஞ்சீவ

புதுக்கடை நீதவான் நீதிமன்ற வளாகத்தில் இன்று முற்பகல் கனேமுல்ல சஞ்சீவ எனப்படும் சஞ்சீவ குமார சமரரத்ன சிகிச்சை சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார்.
இன்று நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்தவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
வழக்கு ஒன்றுக்காகப் புதுக்கடை நீதவான் நீதிமன்றத்திற்கு அவர் அழைத்துவரப்பட்ட நிலையில் இந்த துப்பாக்கிச்சூட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இதன்போது பலத்த காயமடைந்த அவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக வைத்தியசாலையின் பிரதி பணிப்பாளர் ருக்ஷான் பெல்லன எமது செய்தி சேவைக்கு உறுதிப்படுத்தினார்.
அதேநேரம் துப்பாக்கிச்சூட்டுக்குப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் கைத்துப்பாக்கி நீதிமன்ற வளாகத்திலிருந்து மீட்கப்பட்டதாக காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
(Visited 10 times, 1 visits today)