செய்தி வட அமெரிக்கா

இந்தியா உடனான ஜெட் என்ஜின் ஒப்பந்தம் புரட்சிகரமானது – அமெரிக்க பாதுகாப்பு செயலாளர்

இந்திய விமானப்படைக்கு போர் ஜெட் என்ஜின்களை கூட்டாக தயாரிக்கும் இந்தியா-அமெரிக்கா ஒப்பந்தம் புரட்சிகரமானது என்று அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் லாயிட் ஆஸ்டின் சட்டமியற்றுபவர்களிடம் தெரிவித்தார்.

கடந்த ஜூன் மாதம் பிரதமர் நரேந்திர மோடியின் வரலாற்று சிறப்புமிக்க அரசு முறை பயணத்தின் போது இந்த முக்கிய ஒப்பந்தம் அறிவிக்கப்பட்டது.

ஜெனரல் எலக்ட்ரிக் நிறுவனம் ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்துடன் இந்திய விமானப்படைக்கு போர் விமான இயந்திரங்களை உருவாக்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.

ஆஸ்டின் ஹவுஸ் அப்ராபிரியேஷன்ஸ் துணைக்குழுவிடம், இந்தியாவுடன் அமெரிக்கா “சிறந்த உறவை” கொண்டுள்ளது என்று கூறினார்.

“நாங்கள் சமீபத்தில் இந்தியாவில் ஒரு ஜெட் ஆயுதம், ஒரு ஜெட் என்ஜின் தயாரிக்க இந்தியாவுக்கு உதவினோம். அதுவும் ஒருவகையில் புரட்சிகரமானது. அது அவர்களுக்கு ஒரு சிறந்த திறனை வழங்கும். இந்தியாவுடன் இணைந்து கவச வாகனத்தையும் தயாரித்து வருகிறோம்,” என்றார்.

(Visited 2 times, 1 visits today)

Prasu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி

You cannot copy content of this page

Skip to content