மத்திய கிழக்கு

அல்-ஜசீரா அலுவலகத்தில் திடீர் சோதனை நடத்திய இஸ்ரேல் பொலிஸார்

நாசரேத் ஊரில் உள்ள அல்-ஜசீரா செய்தி நிறுவனத்தின் அலுவலகத்தில் இஸ்ரேல் பொலிஸார் இன்று (09) சோதனையில் ஈடுபட்டத்துடன் அல்-ஜசீராவுக்கு சொந்தமான கருவிகளையும் பறிமுதல் செய்தனர்.

கத்தாரை மையமாக கொண்ட அல்-ஜசீரா செய்தி நிறுவனத்தின் இஸரேல் அலுவலகங்களை மூடுவதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்த சில நாட்களுக்குப் பிறகு இந்த சோதனை நடைபெற்றுள்ளது.

இஸ்ரேல், அல்-ஜசீரா சேனலின் ஒலிபரப்பையும் முடக்கியுள்ளது. ஞாயிற்றுகிழமை இஸ்ரேல் தொழில்நுட்பதுறை அமைச்சர் இதற்கான ஆணையில் கையெழுத்திட்டார். அதே நாளில் கிழக்கு ஜெருசலேமில் உள்ள அல்-ஜசீரா அலுவலகத்தில் இஸ்ரேல் அரசு சோதனை நடத்தியது.

Al Jazeera: Israeli forces raid studio in Nazareth, minister says

காஸா போர் தொடர்புடைய நிகழ்வுகளை செய்தியாக்குவதில் பாரபட்சமாக நடந்துகொள்வதாக இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு அல்-ஜசீரா மீது குற்றம் சுமத்தினார்.இதனை மறுத்துள்ள அல்-ஜசீரா இந்த தடை சட்டத்திற்கு புறம்பானது எனவும் மனித உரிமைகள் மற்றும் தகவல்கள் பெறும் அடிப்படை உரிமையை மீறும் செயல் எனவும் தெரிவித்தது.

அல்-ஜசீரா தனது பணியாளர்கள் மற்றும் செய்தி நிறுவனத்தின் உரிமையை காக்க இஸ்ரேலின் நடவடிக்கைக்கு எதிராக இயன்ற நடவடிக்கையை எடுக்கப் போவதாக தெரிவித்துள்ளது.

(Visited 1 times, 1 visits today)

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

மத்திய கிழக்கு

ஆர்மீனியாவிற்கும், அஸர்பைஜானுக்கும் இடையில் பதற்றம்!

  • April 24, 2023
ஆர்மீனியாவுக்குச் செல்லும் முக்கிய வீதியொன்றில் அஸர்பைஜான் படையினர் சோதனை நிலையமொன்றை அமைத்ததால் இரு நாடுகளுக்கும் இடையில பதற்றநிலை ஏற்பட்டுள்ளது. இவ்விரு நாடுகளும் 1990 களிலும் 2020 ஆம்
ஆப்பிரிக்கா மத்திய கிழக்கு

சூடான் மோதல் குறித்து கோப்ரா கூட்டம் இன்று!

  • April 24, 2023
சூடானில் ஏற்பட்டுள்ள மோதல் தொடர்பாக மற்றொரு கோப்ரா கூட்டம் இன்று நடைபெறும் என டவுனிங் ஸ்ட்ரீட் தெரிவித்துள்ளது. இன்றைய அமர்விற்கு யார் தலைமை தாங்குவார்கள் என்பது தெரியவில்லை.

You cannot copy content of this page

Skip to content