இன்றைய முக்கிய செய்திகள் மத்திய கிழக்கு

சூறாவளி தாக்குதல் நடத்த தயாராகும் இஸ்ரேல் – காசாவுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

காசாவை ஒரு சக்திவாய்ந்த சூறாவளி போல் தாக்குவோம என, இஸ்ரேல் இராணுவ அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ், எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பிணைக் கைதிகளை விடுவிக்காவிட்டால், இந்த நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேற்காசிய நாடான இஸ்ரேல் மற்றும் ஹமாஸிற்கு இடையேயான போர், இரண்டு ஆண்டை எட்ட உள்ளது.

ஹமாஸ் கட்டுப்பாட்டில் உள்ள காசாவின் உயரமான கட்டடங்களை குறி வைத்து இஸ்ரேல் ராணுவம் தொடர்ந்து தாக்கி வருகிறது.

இந்நிலையில், இஸ்ரேஸ் ராணுவ அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் நேற்று கூறியுள்ளதாவது:

பிணைக் கைதிகளை விடுவித்துவிட்டு, ஹமாஸ் அமைப்பு ஆயுதங்களுடன் சரணடைய வேண்டும். இல்லாவிட்டால், சக்திவாய்ந்த சூறாவளி போல காசாவை தாக்குவோம்; அது பெரும் அழிவை சந்திக்க நேரிடும். கோபுரங்கள் தகர்க்கப்படும் என இவ்வாறு அவர் கூறினார்.

SR

About Author

You may also like

மத்திய கிழக்கு

ஆர்மீனியாவிற்கும், அஸர்பைஜானுக்கும் இடையில் பதற்றம்!

  • April 24, 2023
ஆர்மீனியாவுக்குச் செல்லும் முக்கிய வீதியொன்றில் அஸர்பைஜான் படையினர் சோதனை நிலையமொன்றை அமைத்ததால் இரு நாடுகளுக்கும் இடையில பதற்றநிலை ஏற்பட்டுள்ளது. இவ்விரு நாடுகளும் 1990 களிலும் 2020 ஆம்
ஆப்பிரிக்கா மத்திய கிழக்கு

சூடான் மோதல் குறித்து கோப்ரா கூட்டம் இன்று!

  • April 24, 2023
சூடானில் ஏற்பட்டுள்ள மோதல் தொடர்பாக மற்றொரு கோப்ரா கூட்டம் இன்று நடைபெறும் என டவுனிங் ஸ்ட்ரீட் தெரிவித்துள்ளது. இன்றைய அமர்விற்கு யார் தலைமை தாங்குவார்கள் என்பது தெரியவில்லை.