ஈரானில் இணைய முடக்கம் 58 ஆவது நாளாக நீடிப்பு – தொழில்,வணிகம் பாதிப்பு
ஈரானில் முழுமையான இணையத் தடை 58 ஆவது நாளாகத் தொடர்கிறது எனற இணையக் கண்காணிப்பு அமைப்பான
NetBlocks தெரிவித்துள்ளது.
அந்த அமைப்பின் தகவலுக்கமைய, இந்த இணைய முடக்கம் தொடர்ந்து 1368 மணிநேரத்தைக் கடந்து,
தற்போது ஒன்பதாவது வாரமாக நீடித்து வருகிறது.
ஜனவரி மாதத் தொடக்கத்தில் மீண்டும் உருவான அரசாங்க எதிர்ப்புப் போராட்டங்களைத் தொடர்ந்து இந்தக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
பின்னர், கெடந்த பெப்ரவரி இறுதியில் மத்திய கிழக்கு போர் தொடங்கியதையடுத்து, இணையக் கட்டுப்பாடுகள் மேலும் கடுமையாக்கப்பட்டன.
இந்த கடுமையான இணையத் தடை காரணமாக, நாட்டில் வேலை வாய்ப்புகள் மற்றும் வணிகச் செயல்பாடுகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.




