Starlink இணைய வசதியை பயன்படுத்தி உளவு பார்த்தோர் ஈரானில் கைது!
ஈரானில் ஸ்டார்லிங்க் Starlink devices செயற்கைக்கோள் இணைய வசதியைப் பயன்படுத்தி உளவு வேலைகளில் ஈடுபட்டனர் எனக் கூறப்படும் சிலரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
தலைநகர் தெஹ்ரானில் குடியிருப்பொன்றில் ரகசியத் தளம் அமைத்து, வெளிநாட்டு உளவு அமைப்புகளுக்கு முக்கியத் தகவல்களைப் பகிர்ந்துள்ளனர் என இவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
மேலும், நாட்டின் முக்கியமான இடங்களைப் படம் பிடித்து மற்றும் காணொளிகளாக எடுத்து எதிரி நாடுகளின் ஊடகங்களுக்கு அனுப்பிய நபரொருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஈரானில் 60 நாட்களுக்கு மேலாக இணைய முடக்கம் அமுலில் உள்ளது.
எனினும், ஸ்டார்லிங்க் மூலம் இணைய சேவையைப் பெறுவதற்கு சிலர் முற்பட்டுவருகின்றனர் என தெரியவருகின்றது.




