ஐரோப்பா

ஜெர்மனியில் 49 யூரோ பயண அட்டை தொடர்பில் வெளிவந்த தகவல்

ஜெர்மனியில் 49 யூரோ பயண அட்டை தற்பொழுது விற்பனை செய்யப்படுகின்றது.

ஜெர்மன் அரசானது 49 யூரோ பயண அட்டையை அறிமுகப்படுத்தியுள்ளது. நேற்று முன்தினம் முதல் பயண அட்டையானது நடைமுறைக்கு வந்துள்ளது.

இதேவேளையில் பயண அட்டையை பல லட்சக்கணக்கானோர் இதுவரை கொள்வனவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் பல புகையிரத நிலையங்கள் மற்றும் இந்த பயண அட்டையை விற்கின்ற முகவர் நிலையங்களுக்கு முன்னால் பலர் வரிசையில் காத்திருந்து இந்த பயண அட்டையை கொள்வனவு செய்ததாக தெரிய வந்திருக்கின்றது.

மேலும் இந்த பயண அட்டையை மாதாந்த அடிப்படையில் கொள்வனவு செய்ய வேண்டும்.

அதேவேளையில் பயண அட்டையை மாத முடிவில் ஒப்பந்தத்தில் இருந்து விலக்கிக்கொள்ள முடியும் என்றும் தெரியவந்திருக்கின்றது.

இந்த பயண அட்டையை கொள்வனவு செய்ய வேண்டுமாயின் நபர் ஒருவருக்கு ஜெர்மன் நாட்டிலே வங்கி கணக்கு ஒன்று இருத்தல் வேண்டும்

மேலும் தனிநபர்கள் தங்களது கடவுசீட்டுகளை அல்லது அடையாளங்களை நிருபீக்க வேண்டும் என்றும் தெரியவந்திருக்கின்றது.

இந்த பயண அட்டையை இன்னொருவர் பாவணைக்கு உட்படுத்த முடியாது என்றும் எவர் ஒருவர் இந்த பயண அட்டையை கொள்வனவு செய்கின்றாரோ அவர் மட்டுமே பயன்படுத்த முடியும் என தெரியவந்துள்ளது.

(Visited 3 times, 1 visits today)

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்

You cannot copy content of this page

Skip to content