இந்தியா

அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தத்தை எட்ட இந்தியாவிற்கு ஒருவாரம் காலக்கெடு!

இந்த வாரம் அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்யத் தவறினால், இந்தியா 25% வரை வரிகளை எதிர்கொள்ள நேரிடும் என்று ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார்.

ஆகஸ்ட் 1 ஆம் தேதிக்குள் இந்தியாவும் பல நாடுகளும் வர்த்தக ஒப்பந்தத்தை எட்ட வேண்டும் அல்லது அதிகரித்த வரிகளை எதிர்கொள்ள வேண்டும் என்று அமெரிக்கா காலக்கெடுவை நிர்ணயித்துள்ளது.

கடந்த சில மாதங்களாக இந்திய மற்றும் அமெரிக்க அதிகாரிகள் வர்த்தக ஒப்பந்தம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இருப்பினும் இறுதி உடன்பாடு எதுவும் எட்டப்படவில்லை.

புதிய வரி விகிதத்தை நிர்ணயிக்கும் கடிதத்தை டிரம்ப் இன்னும் இந்தியாவிற்கு அனுப்பவில்லை என்றாலும் தற்போது ஒருவாரம் காலக்கெடு விதித்துள்ளார்.

VD

About Author

You may also like

இந்தியா செய்தி

இலங்கையில் உணவின்றி தவிக்கும் குடும்பங்கள்

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 59 வீதமான குடும்பங்கள் தேவையான உணவைப் பூர்த்தி செய்ய இயலவில்லை என தெரியவந்துள்ளது. அண்மையில் டுபாயில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் இந்த
இந்தியா செய்தி

இலங்கையில் விமான டிக்கெட்டுக்கின் விலை குறைப்பு!

இலங்கையில் விமான டிக்கெட்டுக்களுக்கான விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஐந்து சதவீதத்தினால் விமான டிக்கெட்டுக்களின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பே