பிறவிக்குறைப்பாடுகளால் அதிகரிக்கும் சிசு மரணங்கள் : கருகலைப்பு சட்டத்தை மறுசீரமைக்க கோரிக்கை!
இலங்கையில் 40 சதவீத சிசு மரணங்கள் பிறவிக் குறைபாடுகளால் ஏற்படுவதாக சமூக சுகாதார நிபுணர்கள் கல்லூரியின் பேராசிரியர் கபில ஜெயரத்ன தெரிவித்துள்ளார்.
ஆண்டுதோறும் சுமார் 2100 குழந்தைகள் இந்நிலை காரணமாக உயிரிழப்பதாகவும், வருடத்திற்கு 4,000 முதல் 5,000 வரையிலான குழந்தைகள் பிறவிக் குறைபாடுகளுடன் பிறப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கருப்பையிலேயே சில பிறவிக் குறைபாடுகளைக் கண்டறிய முடியும் என்றாலும், நாட்டில் தற்போதுள்ள சட்டத்தின்படி உரிய நடவடிக்கை எடுக்க முடியாத சூழல் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர், “தான் இறக்கப் போகிறோம் என்பதை நன்கு அறிந்த ஒரு குழந்தையைக் கருப்பையில் வைத்திருப்பதால் தாய், குழந்தை, சுகாதார அமைப்பு, குடும்பம் மற்றும் சமூகம் ஆகிய அனைத்தும் பாதிக்கப்படுகின்றன. இது மிகவும் உணர்வுப்பூர்வமான ஒரு நிலை.
இதுபோன்ற ஒரு சூழ்நிலையில், தாய் விரும்பினால், கருக்கலைப்பு செய்துகொள்ள அவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்று நாங்கள் கோரிக்கை விடுத்தோம்.” எனத் தெரிவித்துள்ளார்.





