ஐரோப்பா

போரை எவ்வாறு எதிர்கொள்வது : நோர்டிக் நாடுகள் இணைந்து வெளியிட்ட புத்தகம்!

கிழக்கு ஐரோப்பாவில் மோதலை அதிகரிப்பது குறித்த கவலைகள் அதிகரித்து வரும் நிலையில், போர் அல்லது மற்றொரு பெரிய நெருக்கடி ஏற்பட்டால் நடந்துக்கொள்ளவேண்டிய விதம் தொடர்பில் அறிவிக்கும் புதிய வழிக்காட்டுதல் புத்தகத்தை மூன்று நோர்டிக்  நாடுகள் இணைந்து வெளியிட்டுள்ளன.

இதன்படி மில்லியன் கணக்கான ஸ்வீடன் மக்களுக்கு இது தொடர்பான துண்டுப்பிரசுரம் விநியோகிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இது ஆறு ஆண்டுகளுக்கு முன்பு அனைத்து ஸ்வீடன்களுக்கும் வழங்கப்பட்ட ஆவணத்தின் புதுப்பிக்கப்பட்ட பதிப்பாகும்.

இந்தப் பதிப்பு முந்தைய பதிப்பை விட இரட்டிப்பாகும் மற்றும் பிப்ரவரி 2022 இல் உக்ரைன் மீதான ரஷ்யாவின் முழு அளவிலான படையெடுப்பின் விளைவாக ஏற்படும் புதிய ஆபத்துகளை பிரதிபலிக்கிறது.

ஸ்வீடன் தனது குடிமக்களுக்காக போர்க்கால கையேடுகளை தயாரிப்பதில் நீண்ட வரலாற்றைக் கொண்டுள்ளது.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்