முக்கிய செய்திகள்

இலங்கையில் நடந்த கோர விபத்து: தலை துண்டிக்கப்பட்டு பெண் பலி!

அனுராதபுரம் நொச்சியாகம பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் பெண்ணொருவரின் தலை துண்டிக்கப்பட்ட சம்பவ இடத்திலே உயிரிழந்துள்ளார்.

இன்று பிற்பகல் நொச்சியாகம நகரின் மத்தியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இராஜாங்கனைப் பகுதியைச் சேர்ந்த 34 வயதுடைய பெண்ணே இவ்வாறு விபத்தில் உயிரிழந்ததாக விசாரணைகளை மேற்கொண்டு வரும் நொச்சியாகம காவல்துறையினர் தெரிவித்தனர்.

நொச்சியாகம பகுதியில் உந்துருளி மீது சொகுசு பேருந்து மோதியதுடன், அதில் பயணித்த கணவன் மற்றும் மனைவி ஆகிய இருவரும் விபத்திற்குள்ளாகினர்.

சம்பவத்தில் பெண் பேருந்தின் சில்லுகளில் நசுங்கிய நிலையில் தலை துண்டிக்கப்பட்டதால் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

விபத்தில் உயிரிழந்த பெண்ணின் சடலம் பிரேதப் பரிசோதனைக்காக நொச்சியாகம வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள சாரதி நொச்சியாகம நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

(Visited 55 times, 1 visits today)

TJenitha

About Author

You may also like

முக்கிய செய்திகள் வட அமெரிக்கா

அமெரிக்காவில் 3 தமிழர்களுக்கு கிடைத்த கௌரவம் – பைடன் கையெழுத்து

  • April 20, 2023
அமெரிக்காவில் வாழ்நாள் சாதனையாளர் விருது 3 அமெரிக்க வாழ் தமிழர்களுக்கு வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது. ஹார்வேர்ட் தமிழ் இருக்கை உள்ளிட்ட பல்வேறு தமிழ் சமூதாய பணிகளுக்காக டாக்டர். சம்பந்தம்,
இலங்கை முக்கிய செய்திகள்

இலங்கையில் ஏற்பட்டுள்ள அதிக வெப்பமான காலநிலையால் ஏற்பட்டுள்ள நெருக்கடி

  • April 20, 2023
இலங்கையில் ஏற்பட்டுள்ள அதிக வெப்பமான காலநிலை காரணமாக மக்களின் நாளாந்த நீர் பாவனை சுமார் 10 சத வீதம் அதிகரித்துள்ளது. தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச்