ஆசியா

தென் கொரியாவில் முடங்கிய அரசாங்க ஒன்லைன் சேவைகள்

  • September 28, 2025
  • 0 Comments

தென் கொரியாவின் அரசாங்க ஒன்லைன் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. நாட்டின் அரசாங்க தரவு மையத்தின் ஐந்தாவது மாடியில் கணினி பேட்டரி வெடித்ததை அடுத்து தீ விபத்து ஏற்பட்டதாகவும், இதனால் அரசாங்க ஒன்லைன் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, அஞ்சல் சேவைகள் மற்றும் பொது போக்குவரத்து சேவைகள் உட்பட 647 அரசாங்க சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. கொரிய பிரதமர் அலுவலகம் மற்றும் நிதி அமைச்சகம் உட்பட பல அரசாங்க வலைத்தளங்களும் அணுக முடியாதவை என்று ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தீயை அணைக்க சுமார் […]

ஆசியா

சீனாவின் செல்வாக்கு குறித்து எச்சரிக்கையாக இருக்குமாறு பசிபிக் நாடுகளின் நிபுணர்கள் எச்சரிக்கை

  • September 28, 2025
  • 0 Comments

சீனாவின் செல்வாக்கு குறித்து எச்சரிக்கையாக இருக்குமாறு ஆஸ்திரேலியா உள்ளிட்ட பசிபிக் நாடுகள் நிபுணர்களால் எச்சரிக்கப்பட்டுள்ளது. சீன கம்யூனிஸ்ட் கட்சியுடன் தொடர்புடைய நியூசிலாந்தில் சமீபத்தில் பதிவான இரண்டு சம்பவங்களை மேற்கோள் காட்டி தி எபோக் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. தி எபோக் டைம்ஸ் செய்தித்தாளின்படி, ஆஸ்திரேலிய தேசிய பல்கலைக்கழகத்துடன் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்ட தைவான் தொடர்பான கல்வி நிகழ்வை இரத்து செய்யுமாறு சீன இராஜதந்திரிகள் வெலிங்டன் விக்டோரியா பல்கலைக்கழகத்தை அழுத்தம் கொடுக்க முயன்றனர். சீனாவின் முயற்சிகள் இருந்தபோதிலும், பல்கலைக்கழகம் […]

இன்றைய முக்கிய செய்திகள் செய்தி தமிழ்நாடு

விஜய் கைது செய்யப்படுவாரா? முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கம்

  • September 28, 2025
  • 0 Comments

கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் தவெக தலைவர் விஜய் தொடர்பில் விசாரணையின் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கரூரில் சனிக்கிழமை இரவு 7 மணியளவில் நடைபெற்ற தவெக தலைவர் விஜய்யின் பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்டநெரிசலில் சிக்கி 9 குழந்தைகள் உள்பட 39 பேர் பலியாகியுள்ளனர். பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து, உடனடியாக சென்னையில் இருந்து நள்ளிரவு 1 மணியளவில் தனிவிமானம் மூலம் புறப்பட்ட முதல்வர் ஸ்டாலின், திருச்சி […]

ஐரோப்பா செய்தி

டென்மார்க் நாட்டில் தொடரும் பதற்றம் – ட்ரோன் எதிர்ப்பு சாதனங்களை வழங்கும் சுவீடன்

  • September 28, 2025
  • 0 Comments

டென்மார்க் நாட்டிற்ல் தொடர்ந்து பதற்ற நிலைமை ஏற்பட்டுள்ளதால் ட்ரோன் எதிர்ப்பு சாதனங்களை வழங்க சுவீடன் முன்வந்துள்ளது. நாட்டின் சிவில் விமான நிலையங்கள் மற்றும் படைத் தளங்களுக்கு மேலே சட்டவிரோதமாகப் பறக்கின்ற ட்ரோன்களால் டென்மார்க் குழப்பமடைந்திருக்கிறது. நாட்டு மக்கள் மத்தியில் தேசிய பாதுகாப்புப் பற்றிய கவலைகள் எழுந்துள்ளன. வெள்ளிக்கிழமை இரவு டெனிஷ் றோயல் விமானப் படையின் மிகப் பெரிய கார்ப் வான் தளம் (Karup Air Base) உட்பட பல பாதுகாப்பு நிலைகள் மீதும் ட்ரோன்கள் சஞ்சரித்தமை பற்றிய […]

இந்தியா செய்தி

விஜய்யின் கரூர் பிரச்சாரக் கூட்டம் – உயிரிழந்தவர்களுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்திய முதலமைச்சர் ஸ்டாலின்

  • September 27, 2025
  • 0 Comments

கரூரில் வேலுசாமிபுரம் பகுதியில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் அவர்களின் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 38 பேர் உயிரிழந்தனர். இதனை தொடர்ந்து அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், சம்பவம் குறித்து கேட்டறிந்த முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் அவசர ஆலோசனை நடத்தினார். அதன்பின், உடனடியாக விமானத்தில் திருச்சி சென்று மருத்துவமனையில் உயிரிழந்தோருக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தியுள்ளார். மேலும், முதலமைச்சர் ஸ்டாலின் அங்கு உயிரிழந்தோர் […]

இலங்கை செய்தி

மருதானையில் சிறப்பு காவல்துறை நடவடிக்கையின் போது 30 பேர் கைது

  • September 27, 2025
  • 0 Comments

மருதானை, ஸ்ட்ரோக் பிளேஸ் உள்ளிட்ட பகுதிகளில் நடத்தப்பட்ட சிறப்பு நடவடிக்கையில் மொத்தம் 30 பேரை பொலிசார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர்கள் மற்றும் முக்கிய வழக்குகளில் தேடப்பட்ட குற்றவாளிகளும் அடங்குவர் என்று பொலிசார் தெரிவித்துள்ளனர். இந்த சிறப்பு நடவடிக்கையில் இலங்கை காவல்துறையுடன் இராணுவமும் பங்கேற்றது. குறித்த சிறப்பு நடவடிக்கை இலங்கை ஜனாதிபதி அனுர குமார அவர்களின் உத்தரவில் நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. மேலும், இந்த சிறப்பு நடவடிக்கையால் நாடு முழுவதும் […]

ஐரோப்பா செய்தி

பிரான்சிலிருந்து ஆங்கில கால்வாயை கடக்க முயன்ற இரண்டு பெண்கள் மரணம்

  • September 27, 2025
  • 0 Comments

ஆங்கிலக் கால்வாயைக் கடக்க முயன்ற இரண்டு பெண்கள் உயிரிழந்ததாக பிரெஞ்சு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வடக்கு பிரான்சின் கடற்கரையில் சுமார் 100 பேர் தற்காலிக படகு மூலம் இங்கிலாந்துக்குச் செல்ல முயன்றபோது இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்த முயற்சியில் ஈடுபட்டிருந்த அறுபது பேர் மீட்கப்பட்டு, “தற்போது சிவில் பாதுகாப்பு அதிகாரிகளால் பராமரிக்கப்பட்டு வருகின்றனர்” என்று பிரெஞ்சு அதிகாரி இசபெல் ஃப்ராடின்-திரோட் தெரிவித்துள்ளார். மேலும், ஒரு தம்பதியினரும் அவர்களது குழந்தையும் பவுலோனில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டதாக […]

ஐரோப்பா செய்தி

மேலும் ஒரு ரஷ்ய ஆதரவு கட்சிக்கு தடை விதித்த மால்டோவா

  • September 27, 2025
  • 0 Comments

சட்டவிரோத நிதியுதவி சந்தேகத்தின் பேரில் நாடாளுமன்ற வாக்கெடுப்பில் பங்கேற்க ரஷ்ய ஆதரவு அரசியல் கட்சியான கிரேட்டர் மால்டோவாவை தேர்தல் ஆணையம் நீக்கியுள்ளது. ரஷ்ய தலையீடு, நாட்டின் தேர்தல் செயல்முறை மற்றும் எதிர்காலம் குறித்த குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில், வாக்கெடுப்புக்கு சில நாட்களுக்குள் தடை செய்யப்பட்ட இரண்டாவது ரஷ்ய ஆதரவு கட்சி இதுவாகும். பாதுகாப்பு மற்றும் உளவுத்துறை அதிகாரிகள் சட்டவிரோத நிதி மற்றும் வெளிநாட்டு நிதியைப் பயன்படுத்துவதாகக் கண்டறிந்ததைத் தொடர்ந்து, மால்டோவாவின் மத்திய தேர்தல் ஆணையம், கிரேட்டர் மால்டோவா (மோல்டோவா […]

ஐரோப்பா செய்தி

இஸ்ரேலிடமிருந்து பேட்ரியாட் வான் பாதுகாப்பு அமைப்பை பெற்ற உக்ரைன்

  • September 27, 2025
  • 0 Comments

உக்ரைன், இஸ்ரேலிடமிருந்து அமெரிக்கத் தயாரிப்பான பேட்ரியாட் வான் பாதுகாப்பு அமைப்பைப் பெற்றது, வரும் மாதங்களில் மேலும் இரண்டு எதிர்பார்க்கப்படுகிறது என்று ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். தினசரி ரஷ்ய ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களைத் தடுக்க கியேவ் தனது வான் பாதுகாப்பை வலுப்படுத்து நோக்கில் இந்த பாதுகாப்பு அமைப்புகளை பெற்றுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையில் உரையாற்றிய அவர், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் பிற மூத்த அமெரிக்க அதிகாரிகளைச் சந்தித்த நியூயார்க்கிலிருந்து திரும்பிய பிறகு ஜெலென்ஸ்கி […]

இந்தியா செய்தி

விஜய்யின் கரூர் பிரச்சாரக் கூட்டம் – இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்மு இரங்கல்

  • September 27, 2025
  • 0 Comments

கரூரில் வேலுசாமிபுரம் பகுதியில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் பிரச்சாரம் செய்தார். விஜய் பேசி முடித்து புறப்பட்ட பின்னர், கூட்டம் கலைந்து செல்லும்போது கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் சிக்கி 31 பேர் உயிரிழந்தனர். 46 பேர் காயமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த நிலையில் கரூரில் கூட்டநெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், “தமிழ்நாட்டின் கரூர் மாவட்டத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு பலர் […]

error: Content is protected !!