தமிழ்நாடு

கரூரில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு 20 இலட்சம் இழப்பீடு அறிவிப்பு!

  • September 28, 2025
  • 0 Comments

கரூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் பிரச்சாரக் கூட்ட நெரிசலில் சிக்கி ஏறக்குறைய 40 பேர் உயிரிழந்துள்ள நிலையில், அவர்களின் குடும்பத்தினருக்கு 20 இலட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறவும் பொலிஸாரிடம் அனுமதி கோரியுள்ளதாக அங்கிருந்து கிடைத்துள்ள செய்திகள் தெரிவித்துள்ளன. தமிழக வெற்றிக்கழக பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் மற்றும் நிர்வாகிகளுடன் மேற்கொண்ட ஆலோசனையை தொடர்ந்து மேற்படி தீர்மானங்கள் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதற்கிடையே கரூரில் பிரச்சாரம் நடந்த பகுதி […]

ஐரோப்பா

பிரான்ஸில் இருந்து பிரித்தானியா வர முயன்ற இரு பெண்கள் பலி!

  • September 28, 2025
  • 0 Comments

பிரான்ஸில் இருந்து ஆங்கிலக் கால்வாயை கடந்து பிரித்தானியாவிற்கு செல்ல முயன்ற இரு பெண்கள் உயிரிழந்துள்ளனர்.  பிரெஞ்சு அதிகாரிகள் இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளனர். தாழ்வெப்பநிலை (hypothermia)  காரணமாக ஏற்பட்ட மாரடைப்பால் அவர்கள் உயிரிழந்திருக்கலாம் என முதற்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. குறித்த இருவரும் பவுலோனில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டப்போதும் காப்பாற்ற முடியாமல்போனதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். இதற்கிடையே ஆங்கிலக்கால்வாயை கடந்த 60 இற்கும் மேற்பட்டோர் ஒரே இரவில் மீட்கப்பட்டதாகவும் கடலோர காவல்படையினர் குறிப்பிட்டுள்ளனர். இவ்வாறான ஆபத்தான பயணத்தின் […]

ஐரோப்பா

பாலஸ்தீன மக்களின் விடுதலைக்காக ஜேர்மனியில் ஒன்றுக்கூடிய மக்கள்!

  • September 28, 2025
  • 0 Comments

காசாவில் பல இன்னல்களை அனுபவித்து வரும் பாலஸ்தீன மக்களுக்காக பல்லாயிரக்கணக்கான மக்கள் ஜேர்மனியில் ஒன்றுக்கூடி போராட்டம் நடத்தியுள்ளனர். இஸ்ரேல்-ஹமாஸ் போரை முடிவுக்குக் கொண்டுவரக் கோரிய போராட்டக்கார்கள் பாலஸ்தீனத்தை சுதந்திர நாடாக அறிவிக்க வலியுறுத்தி கோஷங்களை எழுப்பியுள்ளனர். மேலும் காசாவில் மோசமடைந்து வரும் மனிதாபிமான நெருக்கடியை முடிவுக்குக் கொண்டுவருமாறும் வலியுறுத்தியுள்ளனர். பேர்லினின் நகர மையப் பகுதி வழியாக நடந்த பேரணியில் சுமார் 50,000 பேர் பங்கேற்றனர் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.  போராட்டக்காரர்களைக் கண்காணிக்க சுமார் 1,800 சட்ட அமலாக்க […]

செய்தி தமிழ்நாடு

ஷட்டரை இறக்கியதுதான் விஜய் செய்த தவறு : நேரில் பார்த்தவர்கள் அதிர்ச்சி தகவல்

  • September 28, 2025
  • 0 Comments

கரூரில் தவெக கூட்டத்தில் சிக்கி மக்கள் பலர் பலியான சம்பவத்தில் மூத்த பத்திரிகையாளர் ஒருவர், விஜய் மேல்தான் முழுக்க முழுக்க தவறு என விளக்கமளித்துள்ளார். குழந்தைகள், பெண்கள் என பலர் பலியாகியுள்ளனர். ஆனால் அரசியல் புரிதல் இல்லாத, வெறும் திரைப்பட மோகத்தால் கூடிய கூட்டத்தால் நடந்த கொடூர சம்பவம் இதுவென அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். சம்பவம் நடந்த இடத்தில், கூட்ட நெரிசலில் சிக்கி உயிர் தப்பியுள்ள பத்திரிகையாளர் கோட்டீஸ்வரன் தெரிவிக்கையில், ஒரு கூட்டத்திற்கு 2 மணி நேரம் காத்திருக்கலாம், […]

மத்திய கிழக்கு

இஸ்ரேல் பிரதமரின் ஆடையில் QR குறியீடு – ஸ்கேன் செய்தவர்களுக்கு கிடைத்த தகவல்

  • September 28, 2025
  • 0 Comments

இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் ஆடையில் இருந்த QR குறியீடு பலரது அவதானத்திற்குள்ளாகியுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையில் உரையாற்றும் போது இந்த QR குறியீட்டினை காண முடிந்துள்ளது. காசாவில் போர் தொடங்கியதிலிருந்து தனது நாட்டின் நடவடிக்கைகளை நன்கு புரிந்துகொள்ள, குறியீட்டை ஸ்கேன் செய்யுமாறு அவர் வலியுறுத்தினார். அதற்கமைய, குறியீட்டை ஸ்கேன் செய்தால், 2023ஆம் ஆண்டு ஒக்டோபர் 7ஆம் திகதியன்று தெற்கு இஸ்ரேலில் நடந்த தாக்குதல்களின் கொடூரமான படங்கள் மற்றும் காணொளிகளைக் கொண்ட ஒரு வலைத்தளத்திற்கு […]

தமிழ்நாடு

முன்ஜாமீன் வாங்கலாமா? விஜய் வீட்டிற்கு விரைந்த வழக்கறிஞர்கள் குழு

  • September 28, 2025
  • 0 Comments

கரூர் கூட்ட நெரிசல் விபத்தில் 35க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், தமிழக காவல்துறை தற்போது தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யை விசாரிக்க திட்டமிட்டுள்ளது. இந்த நிலையில் விஜயின் வீட்டிற்கு சட்டத்தரணிகள் அடங்கிய குழு ஒன்று சென்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கரூர் நகர காவல் நிலையத்தில் புஸ்ஸி ஆனந்த், சி.டி. நிர்மல் குமார் உள்ளிட்ட நால்வருக்கு (மற்றும் சிலர்) எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர்கள் மீது இந்தியாவின் புதிய குற்றவியல் சட்டமான BNS (Bharatiya […]

தமிழ்நாடு

கரூரில் நடந்த கோரம் : முதலமைச்சர் ஸ்டாலின் எடுத்த அதிரடி நடவடிக்கை

  • September 28, 2025
  • 0 Comments

தமிழக வெற்றிக் கழகம் கரூரில் நடத்திய அரசியல் கூட்டத்தில் நெரிசலில் சிக்கி 9 குழந்தைகள் உட்பட 39 பேர் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் ஆராய்ந்து பரிந்துரை செய்வதற்காக ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையிலான விசாரணை குழுவொன்றை தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் நியமித்துள்ளார். அந்த குழுவின் பரிந்துரையின் படி நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் தமிழக முதலமைச்சர் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். கரூரில் நடந்த விஜய் பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி […]

இந்தியா

இந்தியாவில் அதிர்ச்சி – 13 வயது மகளின் கழுத்தை நெரித்து கொலை செய்த தந்தை

  • September 28, 2025
  • 0 Comments

இந்தியாவில் தனது மகளை கழுத்தை நெரித்துக் கொன்றதற்காக 40 வயது தந்தையை பொலிஸார் கைது செய்துள்ளனர். ஏழாம் வகுப்பு படித்து வந்த சோனம் என்ற 13 வயது சிறுமி, அவரது தந்தையால் கொலை செய்யப்பட்டார். நேற்று முன்தினம் மதியம் உத்தரப் பிரதேசத்தின் அனுப்ஷஹர் பொலிஸ் நிலையப் பகுதியில் உள்ள ஒரு பாலத்தின் கீழ் புதர்களில் பாடசாலை சீருடை அணிந்திருந்த ஒரு சிறுமியின் உடல் கண்டெடுக்கப்பட்டது. மேலும் விசாரணையில், சிறுமி வியாழக்கிழமை பாடசாலைக்கு சென்றிருந்ததாகவும், பாடசாலை முடிந்ததும் அவரது […]

செய்தி தமிழ்நாடு

கைது செய்யப்படுகின்றாரா விஜய்? தமிழகத்தில் பரபரப்பு

  • September 28, 2025
  • 0 Comments

கரூரில் தமிழக வெற்றிக் கழகம் நடத்திய அரசியல் கூட்டத்தில் நெரிசலில் சிக்கி 9 குழந்தைகள் உட்பட 39 பேர் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இச்சம்பவத்திற்கு பலரும் தங்களது கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், கூட்ட நெரிசலில் 39 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் தமிழக வெற்றிக்கழக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் உள்ளிட்ட 4 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில், புஸ்ஸி ஆனந்த், மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன், […]

தமிழ்நாடு

விஜய் உரிய நேரத்திற்கு வந்திருக்க வேண்டும் – உதயநிதி ஸ்டாலின் குற்றச்சாட்டு

  • September 28, 2025
  • 0 Comments

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜயின் கரூர் வேலுச்சாமிபுரம் பிரச்சார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 38 பேர் உயிரிழந்த சம்பவத்தை அடுத்து, தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், கரூர் அரசு மருத்துவமனையில் உயிரிழந்தவர்களின் உடல்களுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். உயிரிழந்தவர்களின் குடும்பங்களை சந்தித்து ஆறுதல் கூறிய அவர், இந்த துயரம் நடந்திருக்கக் கூடாது என்று வேதனை தெரிவித்தார். நேற்று நடந்த இந்த சம்பவத்தில், 8 குழந்தைகள், 16 பெண்கள், 12 ஆண்கள் உட்பட 38 […]

error: Content is protected !!