உலகம்

மெக்சிகோவில் (Mexico) வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 64 ஆக உயர்வு, பலர் மாயம்

  • October 14, 2025
  • 0 Comments

கடந்த வாரம் மத்திய மற்றும் கிழக்கு மெக்சிகோவைத்(Mexico) தாக்கிய பலத்த மழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி குறைந்தது 64 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் பலர் காணாமல் போயுள்ளனர் என்று அதிகாரிகள் திங்களன்று(13) தெரிவித்தனர். பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு உதவுவதற்கும் அத்தியாவசிய சேவைகளை மீட்டெடுப்பதற்கும் தேசிய மற்றும் உள்ளூர் நிறுவனங்கள் இணைந்து பணியாற்றி வருவதாக மெக்சிகன் ஜனாதிபதி கிளாடியா ஷீன்பாம்(Claudia Sheinbaum) தெரிவித்தார். முதற்கட்ட மதிப்பீடுகளின்படி சுமார் 100,000 வீடுகள் சேதமடைந்துள்ளதாக ஜனாதிபதி ஷீன்பாம் கூறினார். மேலும் எல்லா சந்தர்ப்பங்களிலும், […]

உலகம்

வெனிசுலாவில் (Venezuela) தங்கச் சுரங்கத்திற்குள் சிக்கிய தொழிலாளர்கள் – 14 பேர் பலி!

  • October 14, 2025
  • 0 Comments

வெனிசுலாவின் (Venezuela) எல் கல்லோவில் (El Callao) சுரங்கம் இடிந்து விழுந்ததில் குறைந்தது 14 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கராகஸிலிருந்து (Caracas) தென்கிழக்கே சுமார் 850 கிலோமீட்டர் தொலைவில் உள்ள குவாட்ரோ எஸ்குவினாஸ் டி காரடல் (Cuatro Esquinas de Caratal) என்ற தங்கச் சுரங்கமே இவ்வாறு இடிந்து விழுந்துள்ளது. உயிரிழந்த 14 பேரின் உடலை மீட்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மற்ற சுரங்க தொழிலாளர்களின் மதிப்பீட்டின் அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளதாகவும், சரியாக எத்தனை பேர் […]

உலகம்

ரஷ்யா போரை முடிவுக்குக் கொண்டுவராவிட்டால், உக்ரைனுக்கு டோமாஹாக் ஏவுகணைகளை வழங்க நேரிடும்; ட்ரம்ப் எச்சரிக்கை

  • October 14, 2025
  • 0 Comments

உக்ரைன் மீது ரஷ்யா மேற்கொண்டு வரும் தாக்குதலை, விரைவில் முடிவுக்குக் கொண்டு வராவிட்டால், உக்ரைனுக்கு நீண்ட தூர டோமாஹாக் ஏவுகணைகளை(Tomahawk missile) வழங்க நேரிடும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ரஷ்யாவை எச்சரித்துள்ளார். அத்துடன் டோமாஹாக் ஏவுகணை(Tomahawk missile) 2,500 km வரை சென்று தாக்கக்கூடியது என்பதுடன், இதனை ரஷ்யா நிச்சயமாக விரும்பாது என்றும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார். இந்த நிலையில், ட்ரம்ப்பின் எச்சரிக்கைக்குப் பதிலளித்த ரஷ்யா, உக்ரைனுக்கு டோமாஹாக் ஏவுகணைகள் வழங்கப்பட்டால் அது அனைவருக்கும், குறிப்பாக […]

இலங்கை

இலங்கையில் உச்சத்தை எட்டிய தங்கத்தின் விலை – ஒரே நாளில் 20,000 ரூபாயால் அதிகரிப்பு

  • October 14, 2025
  • 0 Comments

இலங்கையில் இன்று தங்கத்தின் விலை 20,000 ரூபாயால் அதிகரித்துள்ளது. அதற்கமைய, தற்போது 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 365,000 ரூபாவாக விற்பனை செய்யப்பட்டு வருவதாக இலங்கை நகைக்கடை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. நேற்றையதினம் 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 345,000 ரூபாயாக விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளது. அதற்கமைய, தற்போது, 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 365,000 ரூபாயாக விற்பனை செய்யப்படும் நிலையில், 22 கரட் தங்கம் பவுண் […]

பொழுதுபோக்கு

துருவ் விக்ரமின் மிரட்டலான நடிப்பில் உருவான ‘பைசன்’ ட்ரெய்லர்

  • October 14, 2025
  • 0 Comments

மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடித்த ‘பைசன்’ திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி உள்ளது. இந்தப் படத்தில் அனுபமா பரமேஸ்வரன், ரஜிஷா விஜயன், பசுபதி, அமீர், லால் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இப்படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. மொத்த படமும் கபடி வீரர் ஒருவரின் உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவாகியுள்ளது. இதோ அந்த ட்ரெய்லர் …

இலங்கை

இஷாரா செவ்வந்தியுடன் நேபாளத்தில் கைதான யாழ் தம்பதி

  • October 14, 2025
  • 0 Comments

கணேமுல்ல சஞ்சீவ கொலையுடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபராக தேடப்பட்டு வந்த இஷாரா செவ்வந்தி நேபாளத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். அவருடன் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தம்பதி உட்பட மேலும் ஐந்து பேரும் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேபாள பாதுகாப்புப் படையினர், குற்றப் புலனாய்வுத் துறை மற்றும் பொலிஸார் இணைந்து நடத்திய சிறப்பு நடவடிக்கையின் போது இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். காத்மாண்டுவிலிருந்து சுமார் 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பகுதியிலுள்ள வீடொன்றில் தலைமறைவாக வாழ்ந்து வந்த நிலையில் கைது […]

இலங்கை

2028 ஆம் ஆண்டு மீண்டும் பொருளாதார நெருக்கடியில் சிக்கும் அபாயத்தில் இலங்கை

  • October 14, 2025
  • 0 Comments

இலங்கை 2028 ஆம் ஆண்டில் மீண்டும் ஒரு பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ளும் என்று வெளிநாட்டுப் பொருளாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். மத்துகம பகுதியில் இடம்பெற்ற ஒரு பொதுக் கூட்டத்தில் பேசிய எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச இந்த விடயத்தை வெளிப்படுத்தியுள்ளார். இதன்போது விரும்பிய பொருளாதார வளர்ச்சியைப் பெற முடியாது, போதுமான வெளிநாட்டு நேரடி முதலீடுகளை ஈர்க்க முடியாது. அத்துடன், கடன்களைத் தீர்க்க ஆண்டுதோறும் தேவைப்படும் 5 பில்லியன் அமெரிக்க டொலர்களை ஈர்ப்பதற்கு வெளிநாட்டுப் பணத்தைப் பெற முடியாது என்றும் […]

விளையாட்டு

பாகிஸ்தான் – இலங்கை கிரிக்கெட் தொடர் குறித்து வெளியான தகவல்

  • October 14, 2025
  • 0 Comments

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி, அடுத்த ஜனவரியில் மூன்று போட்டிகள் கொண்ட டி20 சர்வதேச கிரிக்கெட் போட்டிக்காக இலங்கையில் சுற்றுப்பயணம் செய்ய கோரியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இது தொடர்பாக இரு நாடுகளின் கிரிக்கெட் சபைகளுக்கு இடையில் பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாக பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதற்கமைய, ஜனவரி 8, 10 மற்றும் 12 ஆகிய திகதிகளில் கொழும்பில் போட்டியை நடத்த யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளது. 2026 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் இலங்கை மற்றும் இந்தியா இணைந்து […]

உலகம்

இணையத்தில் கசிந்த ட்ரம்ப், அல்பானீஸ் உள்ளிட்ட உலகத் தலைவர்களின் தனிப்பட்ட தகவல்கள்

  • October 14, 2025
  • 0 Comments

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump), ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ் (Anthony Albanese) உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களின் தனிப்பட்ட தொலைபேசி எண்கள் இணையத்தில் கசிந்துள்ளன. அமெரிக்க தரவு நிறுவனம் ஒன்று தொலைபேசி எண்கள் மற்றும் மின்னஞ்சல் முகவரிகளைத் திருடி அனைவரும் பார்க்கும் வகையில் இணையதளத்தில் வெளியிட்டதாகக் கூறப்படுகிறது. ஆஸ்திரேலிய அரசாங்கம் இந்த விடயத்தை அறிந்திருப்பதாக பதில் பிரதமர் ரிச்சர்ட் மார்ஸ் (Richard Marrs) ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார். அனைத்து அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு உயர்மட்ட […]

உலகம்

வேலையை விட்டு வெளியேறத் தயாராகும் 2.7 மில்லியனுக்கும் அதிகமான ஆஸ்திரேலியர்கள்

  • October 14, 2025
  • 0 Comments

ஆஸ்திரேலியாவில் அடுத்த ஆண்டில் 2.7 மில்லியனுக்கும் அதிகமானோர் தங்கள் வேலையை விட்டு வெளியேறத் திட்டமிட்டுள்ளதாக புதிய ஆய்வொன்றில் தெரிய வந்துள்ளது. அலையன்ஸ் ஆஸ்திரேலியா (Allianz Australia) என்ற நிறுவனம் மேற்கொண்ட ஆய்வில், 80 சதவீத ஊழியர்களும் 66 சதவீத மேலாளர்களும் தங்கள் நிறுவனங்கள் நல்ல பணியிட நடைமுறைகளை செயல்படுத்தவில்லை என குறிப்பிட்டுள்ளனர். 78 சதவீத மேலாளர்கள் நேரம் மற்றும் வளங்களின் பற்றாக்குறை, பொருத்தமான தொழில்நுட்பம் இல்லாதது மற்றும் உள் மோதல்கள் இதற்கு முக்கிய காரணங்கள் என்று கூறுகின்றனர். […]

error: Content is protected !!