இலங்கை

நேபாளத்தில் கைது செய்யப்பட்ட இஷாரா செவ்வந்தி – இலங்கை அழைத்து வர நடவடிக்கை

  • October 14, 2025
  • 0 Comments

கணேமுல்ல சஞ்சீவ கொலையின் பிரதான சந்தேகநபரான இஷாரா செவ்வந்தி கைது செய்யப்பட்டுள்ளார். நேபாளத்தில் வைத்து இஷாரா செவ்வந்தி மற்றும் கெஹல்பத்தர பத்மேயின் நண்பர்கள் எனக் கூறப்படும் 4 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த பெப்ரவரி மாதம் 19ஆம் திகதி புதுக்கடை நீதவான் நீதிமன்றத்திற்குள் பாதாள உலகக் குழு உறுப்பினர் கணேமுல்ல சஞ்சீவ படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில் இஷாரா செவ்வந்தி பிரதான சந்தேகநபராக அடையாளப்படுத்தப்பட்டார். இந்நிலையில், இஷாரா செவ்வந்தி மற்றும் கெஹல்பத்தர பத்மேயின் நண்பர்கள் என […]

உலகம் செய்தி

காசா அமைதி மாநாட்டில் சர்ச்சையை ஏற்படுத்திய ட்ரம்ப் – மக்ரோன் இடையிலான கைகுலுக்கல்

  • October 14, 2025
  • 0 Comments

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் இடையிலான சங்கடமான கைகுலுக்கல் சர்ச்சையாக மாறியுள்ளது. எகிப்தின் ஷார்ம் எல்-ஷேக்கில் (Sharm El-Sheikh) நேற்று நடைபெற்ற காசா அமைதி உச்சி மாநாட்டில், இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவம், அங்கிருந்த அனைவர் மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளது. கைகுலுக்கல் என்பது சாதாரணமான விடயமாக இருந்த போதிலும், இரு நாட்டுத் தலைவர்களின் கைகுலுக்கள் விடயத்தில் மறைமுகமான ஆக்ரோஷம் காணப்பட்டதாக சுட்டிக்காட்டப்படுகிறது. ட்ரம்ப் – மக்ரோன் கைகுலுக்கல் விவகாரம் […]

ஐரோப்பா

ஜெர்மனியில் கடுமையாகும் சட்டம் – வாகன ஓட்டுநர்களுக்கு கடும் நடவடிக்கை

  • October 14, 2025
  • 0 Comments

ஜெர்மனியில், வாகனம் மற்றும் சைக்கிள் ஓட்டும் போது கையடக்க தொலைபேசிகள், டெப், மடிக்கணினிகள் போன்ற சாதனங்களை பயன்படுத்தும் ஓட்டுநர்களை கண்டறிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, கட்டுப்பாட்டு நடவடிக்கை எனப்படும் வாரத்தையை ஜெர்மன் காவல்துறையினர் தொடங்கியுள்ளனர். இந்த நடவடிக்கையின் போது, விதிகளை மீறும் நபர்களுக்கு 100 யூரோ அபராதம் விதிக்கப்படும். காவல்துறையின் தகவலுக்கமைய, ஓட்டுநர்கள் வாகனம் ஓட்டும் போது ஒருசில விநாடிகள் கையடக்க தொலைபேசி திரையில் கவனம் செலுத்தினாலும், அது சுமார் 14 மீட்டர் தூரம் கண்மூடித்தனமாக பயணத்தை […]

உலகம்

காசா அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்

  • October 14, 2025
  • 0 Comments

இஸ்ரேல் மற்றும் காசாவுக்கு இடையிலான போரை நிரந்தரமாக முடிவுக்கு கொண்டு வரும் அமைதி ஒப்பந்தத்தில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) கையெழுத்திட்டுள்ளார். ட்ரம்ப் முன்வைத்த 20 அம்சங்களை உள்ளடக்கிய இந்த அமைதி ஒப்பந்தத்திற்கு, இஸ்ரேல் மற்றும் ஹாமாஸ் அமைப்பு இணக்கம் தெரிவித்துள்ளன. அதற்கமைய, இஸ்ரேல் இராணுவத்தினால் கைது செய்யப்பட்ட ஹமாஸ் அமைப்பின் உறுப்பினர்கள் உட்பட சுமார் இரண்டாயிரம் பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர். ஹமாஸ் அமைப்பிடம் பணய கைதிகளாக இருந்த அனைவரும் இஸ்ரேலிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். இந்த அமைதி […]

இலங்கை

யாழில் கோர விபத்து – பரிதாபமாக உயிரிழந்த உதைப்பந்தாட்ட வீரர்

  • October 14, 2025
  • 0 Comments

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்தில் யாழ்ப்பாணம், வடமராட்சி கிழக்கு உடுத்துறையைச் சேர்ந்த செந்தமிழ் விளையாட்டுக் கழக வீரரும் உதைப்பந்தாட்ட நடுவருமான யூட் என்ற 27 வயதுடையவரே உயிரிழந்துள்ளார். தனது விளையாட்டுக் கழகத்திற்கான சீருடைகளை யாழ்ப்பாணத்தில் பெற்றுக்கொண்டு , மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பும் போது அவர் இந்த சம்பவத்திற்கு முகம் கொடுத்துள்ளார். செம்மணி பகுதியில் எதிரே வந்த பேருந்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளார். விபத்தில் படுகாயமடைந்தவரை மீட்டு யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதித்த […]

உலகம்

சீனப் பெண்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள மாற்றம் – ஆயுட்காலம் உயர்வு

  • October 14, 2025
  • 0 Comments

சீனாவில் வாழும் பெண்களின் சராசரி ஆயுட்காலம் கடந்த 25 ஆண்டுகளில் குறிப்பிடத்தக்க அளவில் உயர்ந்துள்ளது. நாட்டின் சுகாதார மற்றும் சமூக மேம்பாட்டு முயற்சிகள், இந்த மாற்றத்திற்கான முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது. இது தொடர்பில் வெளியான தரவுகளுக்கமைய, 2000ஆம் ஆண்டு ஒரு சீனப் பெண்ணின் சராசரி ஆயுட்காலம் 73.3 ஆண்டுகள் ஆக இருந்தது. அது தற்போது 80.9 ஆண்டுகளாக உயர்ந்துள்ளது. இதன் மூலம், 25 ஆண்டுகளில் 7.6 ஆண்டுகள் அல்லது 10.4 சதவீதம் என்ற அளவில் ஆயுட்காலம் உயர்ந்துள்ளது. […]

உலகம்

சிங்கப்பூரில் காதலிக்காக நாடகமாடிய நபருக்கு கிடைத்த தண்டனை

  • October 14, 2025
  • 0 Comments

சிங்கப்பூரில், தனது காதலியை பணிப்பெண் எனக் காண்பித்து வேலைக்கு அமர்த்திய நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 45 வயதுடைய பைசல் பாரிட் (Faizal Farid) என்ற நபருக்கு 3 வாரங்களுக்குச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அவர், வேலை அனுமதி தொடர்பான விவரங்களில் பொய் கூறிய குற்றச்சாட்டை நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டார். மேலும், மற்றொரு குற்றச்சாட்டு கருத்தில் கொள்ளப்பட்டது. 2021ஆம் ஆண்டு முதல் பைசலும் பிலிப்பீன்ஸைச் சேர்ந்த 37 வயது சொட்டோ ஜென்னி வில்லரோனும் (Sotto Jennie Villaron) காதலித்து வந்துள்ளனர். ஜென்னி […]

உலகம் செய்தி

டெக்சாஸில் லாரிகள் மீது விமானம் மோதியதில் 2 பேர் உயிரிழப்பு

  • October 13, 2025
  • 0 Comments

டெக்சாஸின் ஃபோர்ட் வொர்த் (Fort Worth) அருகே லாரிகள் மீது சிறிய விமானம் மோதியதில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். பல டிராக்டர்-டிரெய்லர்கள் பலத்த தீ விபத்தில் சிக்கியதாகவும், ஒரு விமானம் விபத்துக்குள்ளானதை உறுதிப்படுத்தியதாகவும் தீயணைப்புத் துறை தெரிவித்துள்ளது. மேலும், விபத்தில் இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே இறந்ததாக ஃபோர்ட் வொர்த் தீயணைப்புத் துறை தெரிவித்துள்ளது. விபத்துக்கான காரணம் குறித்து மத்திய விமானப் போக்குவரத்து நிர்வாகமும் தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியமும் விசாரித்து வருவதாக கவத்துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகம் செய்தி

அமெரிக்காவிற்கு நாடு கடத்தப்பட்ட பிரபல கியூபா எதிர்ப்பாளர் ஜோஸ் டேனியல் பெரர் கார்சியா (Jose Daniel Ferrer Garcia)

  • October 13, 2025
  • 0 Comments

கியூபாவின் மிகவும் பிரபலமான எதிர்ப்பாளர்களில் ஒருவரான ஜோஸ் டேனியல் பெரர் கார்சியா (Jose Daniel Ferrer Garcia) சிறையில் இருந்து நாடுகடத்தப்பட்டதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. அவர் டிரம்ப் நிர்வாகத்தின் வேண்டுகோளின் பேரில் அமெரிக்காவிற்கு நாடுகடத்தப்பட்டுள்ளார். 54 வயதான பெரர் கார்சியா சிறையில் இருந்து எழுதிய ஒரு கடிதத்தில், முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுடனான ஒப்பந்தத்தின் கீழ் சிறிது காலம் விடுவிக்கப்பட்ட பின்னர் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டதிலிருந்து “எனக்கு எதிரான சர்வாதிகாரத்தின் கொடுமைக்கு எல்லையே இல்லை” […]

உலகம் செய்தி

முன்னாள் பிரேசில் ஜனாதிபதி போல்சனாரோவின் வீட்டுக் காவல் நீட்டிப்பு

  • October 13, 2025
  • 0 Comments

முன்னாள் பிரேசில் ஜனாதிபதி ஜெய்ர் போல்சனாரோவின் (Jair Bolsonaro) வீட்டு காவலை நீட்டிக்க உச்ச நீதிமன்ற நீதிபதி அலெக்ஸாண்ட்ரே டி மோரேஸ் (Alexandre de Moraes) தீர்ப்பளித்துள்ளார். 2022ம் ஆண்டு தேர்தலில் தோல்வியடைந்த பிறகு ஆட்சியில் நீடிக்க சதித்திட்டம் தீட்டியதாக குற்றம் சாட்டப்பட்ட விசாரணையில் பிறப்பிக்கப்பட்ட தடை உத்தரவுகளை பின்பற்றத் தவறியதற்காக போல்சனாரோ ஆகஸ்ட் முதல் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார். முன்னாள் ஜனாதிபதி பின்னர் ஆட்சிக் கவிழ்ப்பு சதி செய்ததாக ஒரு தனி வழக்கில் குற்றவாளி என […]

error: Content is protected !!