உலகம் செய்தி

காசாவில் பெரும் அவலம் – மயானங்களுக்குள் உயிருடன் வாழும் மக்கள் – வெளியான அதிர்ச்சித் தகவல்

  • November 4, 2025
  • 0 Comments

இஸ்ரேல் இராணுவத்தின் தொடர் தாக்குதலால் நிலைகுலைந்துள்ள காசாவில், மயானங்களில் மக்கள் தங்கியிருக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. காசாவில் கடுமையான தாக்குதல்களால் கட்டடங்கள் நிர்மூலமாக்கப்பட்டு தரைமட்டமாக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக மக்கள் தங்கியிருக்க போதுமான வசதிகள் இல்லையெனத் தெரிவிக்கப்படுகிறது. அமுலிலுள்ள காசா – இஸ்ரேல் போர் நிறுத்தம் காரணமாக இடம்பெயர்ந்திருந்த பாலஸ்தீன மக்கள் தமது சொந்த வீடுகளுக்குத் திரும்பி வருகின்றனர். எனினும் அவர்களின் வீடுகள் நிர்மூலமாக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக மயானங்களில் கொட்டகைகளை அமைத்து வாழ்ந்து […]

இந்தியா

பயணிகளின் உயிர்களுடன் விளையாடிய இந்திய விமானிகளால் பெரும் சர்ச்சை

  • November 4, 2025
  • 0 Comments

எயார் இந்தியா (Air India) விமான சேவையைச் சேர்ந்த இரண்டு விமானிகளுக்கு எதிராக ஒழுங்காற்று நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சர்வதேச விதிமுறைகளை மீறி விமானப் பயணங்களில் ஈடுபட்டமை கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்தியாவைச் சேர்ந்த சிரேஷ்ட விமானி ஒருவர், தனது ஆங்கில அறிவுத்திறமையை உறுதிப்படுத்தும் உரிமத்தைப் புதுப்பிக்காமலேயே விமானப் பயணங்களில் ஈடுபட்டுள்ளார். இந்தச் செயல்பாடு சர்வதேச விமானச் சேவைகளின் கட்டாய விதிமுறை மீறலாகக் கருதப்படுகிறது. அத்துடன் குறித்த விமானியுடன் துணை விமானியாகச் சேவையில் ஈடுபட்டவர் கட்டாயப் […]

உலகம்

சீனாவில் தங்கத்தை விழுங்கிய மகன் – அதனைப் பெற்றுக்கொள்ள தாயின் கடும் பிரயத்தனம்

  • November 4, 2025
  • 0 Comments

சீனாவில் தங்கத்தை விழுங்கிய மகனிடமிருந்து அதனைப் பெற்றுக்கொள்ள தாய் ஒருவர் முயற்சித்த சம்பவம் சமூக வலைத்தளங்களில் பிரபலம் அடைந்துள்ளது. சீனாவின் தென்கிழக்குப் பகுதியில் உள்ள ஜியாங்சு மாநிலத்தில் குன்ஷான் (Kunshan) எனும் இடத்தில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. 11 வயதான சிறுவன் தவறுதலாக தங்கத்தை விழுங்கிய நிலையில், அதனைப் பெற்றுக்கொள்ள தாய் ஒருவர் ஒரு வார காலம் காத்திருந்துள்ளார். 10 கிராம் எடையுள்ள தங்கக் கட்டியைத் தாய் கொள்வனவு செய்து வைத்திருந்த நிலையில், அதனைச் சுவைத்துப் பார்க்க […]

உலகம் செய்தி

சிங்கப்பூர் மக்களை அச்சுறுத்தும் நோய் – சுகாதார அதிகாரிகள் விடுத்துள்ள எச்சரிக்கை

  • November 4, 2025
  • 0 Comments

சிங்கப்பூரில் ஷிங்கிள்ஸ் (Shingles) எனப்படும் அக்கி நோய் காரணமாக அதிகளவான மக்கள் பாதிப்படைவதாக சுகாதார அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். இந்நிலையில் இந்த நோய் தொடர்பில் நாடளாவிய ரீதியில் விழிப்புணர்வு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இதில் மருத்துவர்கள் உட்பட பல்வேறு தரப்பினர் இணைந்து செயல்பட்டு வருகின்றனர். இந்த நோய்த்தாக்கம் காரணமாக சிங்கப்பூரில் வருடாந்தம் 30,000க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக, முன்னர் சின்னம்மை (Chickenpox) நோயால் பாதிக்கப்பட்டவர்களை, இந்த நோய் தாக்கும் போது அதிகம் பாதிப்பை ஏற்படுத்துவதாக மருத்துவர்கள் […]

ஐரோப்பா செய்தி

பிரித்தானியாவில் விமானப் பயண முன்பதிவால் சமூகக் கொடுப்பனவுகளை இழந்த மக்கள்

  • November 4, 2025
  • 0 Comments

பிரித்தானியாவில் விமானத்தைத் தவறவிட்ட ஒரு பெண்ணுக்குக் குழந்தைகள் நலக் கொடுப்பனவு நிறுத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இத்தாலிக்குச் சுற்றுலா மேற்கொள்ள விமான முன்பதிவைச் செய்திருந்த அந்தப் பெண், தவிர்க்க முடியாத காரணத்தால் விமானத்தைத் தவறவிட்டுள்ளார். உள்துறை அலுவலக எல்லைத் தரவை அடிப்படையாகக் கொண்டு நடவடிக்கை எடுத்த அதிகாரிகள், அந்தப் பெண் திட்டமிட்ட வகையில் ஒருவழிப் பயணமாக இத்தாலிக்குச் சென்றுவிட்டதாகத் தரவுகள் வெளிப்படுத்தியதால் இந்தக் கொடுப்பனவை நிறுத்தியுள்ளனர். கடந்த வருடத்தில் விமான முன்பதிவைச் செய்தபோதும், அவர் தற்போது வரையில் […]

செய்தி விளையாட்டு

மகளிர் உலகக் கோப்பையை வென்ற இந்திய அணிக்கு $5.75 மில்லியன் பரிசு

  • November 3, 2025
  • 0 Comments

உலகக் கோப்பையை வென்ற இந்திய மகளிர் அணிக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் 5.75 மில்லியன் டாலர் பரிசை அறிவித்துள்ளது. மும்பையில் நடைபெற்ற இறுதி போட்டியில் போட்டியில், இந்திய அணி தென் ஆப்பிரிக்காவை 52 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, முதல் ஒருநாள் உலகக் கோப்பையை வென்றது. இந்நிலையில், பெண்கள் அணியைப் பாராட்டுவதற்காக இந்த பணம் வழங்கப்பட்டதாகவும், இந்த தொகை வீரர்கள், துணை ஊழியர்கள் மற்றும் தேர்வாளர்கள் அனைவருக்கும் பகிர்ந்தளிக்கப்படும் என்றும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (BCCI) செயலாளர் […]

இலங்கை செய்தி

இலங்கை: மொரகஹஹேன அருகே இடம்பெற்ற முச்சக்கர வண்டி விபத்தில் சாரதி மரணம்

  • November 3, 2025
  • 0 Comments

களுத்துறை மாவட்டம் மொரகஹஹேன (Moragahena) நகருக்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் முச்சக்கர வண்டி சாரதி ஒருவர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். பாதிக்கப்பட்டவர் ஹொமாகம(Homagama) பகுதியைச் சேர்ந்த 46 வயதுடைய நபர் என்று காவல்துறையினர் அடையாளம் கண்டுள்ளனர். ஹொரணையில்(Horana) இருந்து மொரகஹேன நோக்கி பயணித்த முச்சக்கர வண்டி திடீரென கவிழ்ந்து எதிர் பாதையில் சென்ற காருடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. விபத்திற்கு பிறகு குறித்த நபர் ஹொரணையில் உள்ள அடிப்படை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட போது உயிரிழந்துள்ளார். இந்நிலையில், விபத்துக்கான […]

ஐரோப்பா செய்தி

ஜார்ஜியா சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்ட இளம் பிரிட்டிஷ் கர்ப்பிணி பெண்

  • November 3, 2025
  • 0 Comments

தாய்லாந்தில்(Thailand) இருந்து கஞ்சா மற்றும் ஹாஷிஷ்(hashish) கடத்தியதற்காக ஜார்ஜியாவில்(Georgia) சிறையில் அடைக்கப்பட்ட கர்ப்பிணி பிரிட்டிஷ் இளம்பெண் பெல்லா கல்லி(Bella Gully) ஆறு மாதங்களுக்கு பிறகு ஒரு மனு ஒப்பந்தத்தின் கீழ் விடுவிக்கப்பட்டுள்ளார். விடுவிக்கப்பட்ட சில நிமிடங்களுக்குப் பிறகு தான் விடுதலை செய்யப்பட்டது எதிர்பார்க்கவில்லை என்றும், இந்தச் செய்தியைக் கேட்டு மகிழ்ச்சியாகவும் நிம்மதியாகவும் இருப்பதாகவும் 19 வயதான பெல்லா கல்லி குறிப்பிட்டுள்ளார். வடகிழக்கு இங்கிலாந்தில் உள்ள பில்லிங்ஹாமைச்(Billingham) சேர்ந்த பெல்லா கல்லி, மே மாதம் தாய்லாந்தில் காணாமல் போன […]

இலங்கை செய்தி

அக்டோபர் மாதத்தில் 165,193 சுற்றுலாப் பயணிகள் இலங்கை வருகை

  • November 3, 2025
  • 0 Comments

அக்டோபர் மாதத்தில் மொத்தம் 165,193 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வந்துள்ளதாக இலங்கை சுற்றுலா மேம்பாட்டு ஆணையத்தின் (SLTDA) தரவுகள் தெரிவிக்கின்றன. இது 2024ம் ஆண்டு அக்டோபர் மாத வருகை புள்ளிவிவரங்களுடன் ஒப்பிடும்போது 21.5% அதிகரிப்பு ஆகும். இலங்கை சுற்றுலா மேம்பாட்டு ஆணையம் வெளியிட்ட தரவுகளின்படி, கடந்த மாதம் இந்தியாவில்(India) இருந்து 29.1% அதாவது 48,113 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர். மேலும், பிரித்தானியாவிலிருந்து(UK) 12,934 பேர், ரஷ்யாவிலிருந்து(Russia) 11,496 பேர், சீனாவிலிருந்து(China) 10,864 பேர் மற்றும் 9,753 […]

உலகம் செய்தி முக்கிய செய்திகள்

மாலத்தீவில் 2007க்குப் பிறகு பிறந்தவர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை

  • November 3, 2025
  • 0 Comments

ஜனவரி 2007க்குப் பிறகு பிறந்த அனைவருக்கும் புகையிலை புகைப்பதைத் தடைசெய்துள்ள மாலத்தீவு(Maldives), நாடு தழுவிய தலைமுறை புகையிலை தடையை அமல்படுத்திய உலகின் ஒரே நாடாக மாறியுள்ளது. இந்த ஆண்டு தொடக்கத்தில் ஜனாதிபதி முகமது முய்சுவால்(Mohamed Muizzu) தொடங்கப்பட்ட இந்த நடவடிக்கை நவம்பர் 1 முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. “பொது சுகாதாரத்தைப் பாதுகாத்தல் மற்றும் புகையிலை இல்லாத தலைமுறையை ஊக்குவிப்பதே இதன் முதன்மை நோக்கம்” என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது. “புதிய விதியின் கீழ், ஜனவரி 1, 2007 அன்று […]

error: Content is protected !!