ஐரோப்பா

சுவிஸ் சிறுவர்களின் ஆபத்தான உணவுப் பழக்கம் – நீரிழிவு ஏற்படும் அபாயம்

  • November 14, 2025
  • 0 Comments

சுவிட்சர்லாந்தில் சிறுவர்கள் மற்றும் இளம் பருவத்தினரின் உணவுப் பழக்கம் ஆரோக்கியமற்ற பாதையில் செல்வதாக ஆய்வு ஒன்று கவலை வெளியிட்டுள்ளது. அவர்கள் அதிக அளவு இறைச்சி, கொழுப்பு மற்றும் சீனி ஆகியவற்றை உட்கொள்வதாகத் தெரியவந்துள்ளது. இந்த நிலையில், போதுமான காய்கறிகள் மற்றும் பழங்களை உண்ணாமையும் இவர்களின் பொதுவான பழக்கமாக மாறியுள்ளது. சுமார் 6 முதல் 17 வயதுக்குட்பட்டவர்களில் 13 சதவீதம் பேர் அதிக எடை அல்லது பருமனானவர்களாக உள்ளனர். இது நீரிழிவு நோய்க்கான ஆபத்துக் காரணிகளைக் கொண்டிருப்பதைக் காட்டுகிறது. […]

உலகம்

ஆஸ்திரேலியாவில் தொழிலாளர் பற்றாக்குறையால் உள்கட்டமைப்பு வசதிகளில் ஏற்பட்டுள்ள சிக்கல்

  • November 14, 2025
  • 0 Comments

ஆஸ்திரேலியாவில் நிர்மாணத் துறையில் பாரிய தொழிலாளர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. நாடு முழுவதும் பல உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்காக பல பில்லியன் டொலர் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. எனினும் இந்தக் கட்டுமானப் பணிகளை முன்னெடுக்க போதுமான ஆளணி பற்றாக்குறை நிலவுவதாக ஆஸ்திரேலிய அரசாங்கம் தெரிவித்துள்ளது. இந்தத் துறையில் நிலவும் நெருக்கடிகளைத் தீர்க்க சுமார் மூன்று இலட்சம் தொழிலாளர்கள் தற்போது தேவைப்படுவதாக புதிய புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இந்த எண்ணிக்கை அடுத்து வரும் […]

உலகம்

ஒரே நேரத்தில் 3 கண்காணிப்புச் செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவத் தயாராகும் ஈரான்

  • November 14, 2025
  • 0 Comments

ஒரே நேரத்தில் மூன்று கண்காணிப்புச் செயற்கைக்கோள்கள் விண்ணில் ஏவப்படவுள்ளதாக ஈரான் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஈரானில் தயாரிக்கப்பட்ட பயா, ஜாபர், கோவ்சர் ஆகிய மூன்று கண்காணிப்புச் செயற்கைக்கோள்களே இவ்வாறு ஏவப்படவுள்ளன. அதற்கமைய, அடுத்த மூன்று மாதங்களுக்குள் ஒரே நேரத்தில் அவற்றை விண்ணில் ஏவத் திட்டமிட்டுள்ளதாக ஈரான் குறிப்பிட்டுள்ளது. பல ஆண்டுகளாக மேற்கத்திய நாடுகள் விதித்த பல்வேறு தடைகள் இருந்தபோதிலும், விண்வெளித் திட்டத்தில் பெரிய முன்னேற்றங்களை ஈரான் கண்டுள்ளதாக ஈரானிய விண்வெளி அமைப்பின் தலைவர் ஹசன் சலாரி தெரிவித்துள்ளார். அத்துடன், […]

இலங்கை

வலுவடைகிறது கொழும்பு, வாஷிங்டன் உறவு!

  • November 14, 2025
  • 0 Comments

இலங்கை மற்றும் அமெரிக்காவுக்கிடையிலான வர்த்தகம் உட்பட இரு தரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது. இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் முன்னாள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க, அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தெற்கு மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உதவிச் செயலர் கலாநிதி போல் கபூரை சந்தித்து பேச்சு நடத்திய வேளையிலேயே இது பற்றி அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தில் நடைபெற்ற இச்சந்திப்பில் இராஜாங்கத் திணைக்களத்தின் தெற்கு மத்திய ஆசிய விவகாரங்களுக்கான பிரதி உதவிச் செயலர் பெதானி போலஸ் […]

இலங்கை

50 ஆயிரம் பேருடன் களமிறங்குவோம் – எதிரணிகளுக்கு ஜே.வி.பி சவால்

  • November 14, 2025
  • 0 Comments

அரசாங்கத்தை கவிழ்ப்பதற்காக எதிரணிகளால் 5 ஆயிரம் பேரை திரட்ட முடியுமெனில், அரசாங்கத்தை பாதுகாப்பதற்காக 50 ஆயிரம் பேருடன் களமிறங்கக்கூடிய வலுவான அரசியல் கட்டமைப்பு எம்வசம் உள்ளது என்று ஜே.வி.பியின் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்தார். 36 ஆவது கார்த்திகை வீரர்கள் ஞாபகார்த்தம் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் விஹாரமஹாதேவி திறந்த வெளியரங்கில் நேற்று நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே ரில்வின் சில்வா மேற்கண்டவாறு கூறினார். கூட்டு எதிரணி எனக் கூறிக்கொள்ளும் தரப்பினரால் எதிர்வரும் 21 ஆம் திகதி […]

உலகம் செய்தி முக்கிய செய்திகள்

இந்தோனேசியாவில் நிலத்தடியில் மறைந்திருக்கும் பேரழிவு ஆபத்து!

  • November 14, 2025
  • 0 Comments

இந்தோனேசிய தலைநகரம் ஜகார்த்தாவின் நிலத்தடியில் பாரிய பூகம்பம் ஏற்படும் அபாயம் உள்ளதாக ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இந்த அபாயம் குறித்து ஏற்கனவே குறைத்து மதிப்பிடப்பட்டிருந்ததாக, பிரித்தானிய புவியியல் ஆய்வு மையம் மற்றும் இந்தோனேசிய ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது. இது 6.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தைத் தூண்டும் திறன் கொண்ட ஒரு டெக்டோனிக் பிழையாகும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. டெக்டோனிக் என்பது புவியின் பாறை ஓடு பெரிய துண்டுகளாக உடைந்து நகரும் செயல்முறையைக் குறிப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். அதற்கமைய […]

இலங்கை

நுகேகொடை கூட்டம்: பந்துலவும் கைவிரிப்பு!

  • November 14, 2025
  • 0 Comments

நுகேகொடையில் எதிர்வரும் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள பேரணியில் தான் பங்கேற்கப்போவதில்லை என்று முன்னாள் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார். “தேசிய மக்கள் சக்தியால் நாட்டை மீட்க முடியும் என நம்புகின்றனர். அரசாங்கம் சிறப்பாக பயணிப்பதற்குரிய சட்டங்களை எமது ஆட்சியில் இயற்றி கொடுத்துள்ளோம். அந்த வழியில் தற்போது பயணிப்பதால் பிரச்சினை இல்லை.” எனவும் அவர் குறிப்பிட்டார். 2028 ஆம் ஆண்டுக்கு பிறகு இந்த அரசாங்கத்தால் செயற்பட முடியாவிட்டால், அதைவிடவும் சிறப்பான திட்டத்தை முன்வைக்கும் தரப்புக்கு ஆதரவளிக்கக்கூடும். அதை […]

செய்தி

இஸ்ரேலியப் படைகள் நடத்திய தாக்குதல் – பாலஸ்தீன குழந்தைகள் இருவர் பலி

  • November 14, 2025
  • 0 Comments

இஸ்ரேலியப் படைகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதலில் பாலஸ்தீனியக் குழந்தைகள் இருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் மேற்குக்கரையில் உள்ள ஹெப்ரோன் (Hebron) நகரின் அருகே இடம்பெற்றுள்ளது. பாலஸ்தீன மக்கள் தற்காலிகமாகக் குடியேறியுள்ள பகுதிகளில் இஸ்ரேலியப் படைகள் தொடர்ச்சியாகச் சுற்றிவளைப்புகளை மேற்கொண்டு வருவதாக பாலஸ்தீனத்தைச் சேர்ந்த உள்ளூர் ஆர்வலர் ஒருவர் தெரிவித்துள்ளார். இந்தச் சுற்றிவளைப்புகளின்போது நடந்த தாக்குதலிலேயே இரண்டு குழந்தைகளும் உயிரிழந்துள்ளனர். மேலும், இந்தக் குடியிருப்புகளில் வசிக்கும் பாலஸ்தீன மக்களை அங்கிருந்து வெளியேறச் செய்வதை நோக்கமாகக் கொண்டே […]

அறிவியல் & தொழில்நுட்பம் செய்தி

சீனாவில் பிரபலமான இரண்டு செயலிகளுக்கு தடை – ஓரினச்சேர்க்கையாளர்கள் கடும் அதிருப்தி

  • November 14, 2025
  • 0 Comments

சீனாவில் பிரபலமான ஓரினச்சேர்க்கையாளர் டேட்டிங் செயலிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய ப்ளூட் (Blued) மற்றும் பின்கா (Finka) என்ற டேட்டிங் செயலிகள் சீனாவில் செயற்படாது என ஆப்பிள் நிறுவனம் அறிவித்துள்ளது. சீனாவின் சைபர்ஸ்பேஸ் நிர்வாகத்தின் (CAC) உத்தரவுக்கு அமைய, குறித்த இரண்டு செயலிகளும் ஆப் ஸ்டோரிலிருந்து நீக்கியுள்ளதாக ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது. சீனாவில் பிரபலமான ஓரினச்சேர்க்கையாளர் டேட்டிங் செயலிகளில் ப்ளூட் ஒன்றாகும். மில்லியன் கணக்கான பயனர்கள் இந்த செயலியை சீனாவில் பயன்படுத்தி வந்ததாக ஆப்பிள் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. […]

இலங்கை

துணிச்சலான முடிவு – இலங்கைக்கு நன்றி தெரிவித்த பாகிஸ்தான்!

  • November 14, 2025
  • 0 Comments

இலங்கை அரசு, இலங்கை கிரிக்கெட் அணி மற்றும் ஸ்ரீலங்கா கிரிக்கெட் ஆகிய தரப்புகளுக்கு, பாகிஸ்தானிய செனட் தமது நன்றியைத் தெரிவித்துள்ளது. பாகிஸ்தான் சுற்றுப்பயணத்தின் போது, துணிச்சலாக மேற்கொண்ட முடிவிற்காக இவ்வாறு நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில், ஒற்றுமை மற்றும் மீள் தன்மைக்கான, இந்த நடவடிக்கையைப் செனட் உறுப்பினர்கள் பாராட்டியுள்ளது. மேலும் ஒருமனதாக ஒரு தீர்மானத்தை நிறைவேற்றினர். இலங்கையின் இந்த முடிவு இரு நாடுகளுக்கும் இடையிலான நீடித்த நட்பையும், பாகிஸ்தானில் சர்வதேச கிரிக்கெட்டை வலுப்படுத்துவதற்கான அவர்களின் பகிரப்பட்ட அர்ப்பணிப்பையும் […]

error: Content is protected !!