உலகம் செய்தி

புதிய பிரதமரை நியமித்த தான்சானியா ஜனாதிபதி

  • November 13, 2025
  • 0 Comments

நாடு முழுவதும் கடுமையான போராட்டங்களைத் தூண்டிய சர்ச்சைக்குரிய தேர்தலைத் தொடர்ந்து, தான்சானிய(Tanzania) ஜனாதிபதி சாமியா சுலுஹு ஹாசன்(Samia Suluhu Hassan) முன்னாள் நிதியமைச்சர் எம்விகுலு என்செம்பாவை(Mwigulu Nchemba) பிரதமராக நியமித்துள்ளார். அக்டோபர் 29 நடந்த வாக்கெடுப்பில் ஹாசனின் மகத்தான வெற்றிக்குப் பிறகு, பாராளுமன்றத்தின் பெரும்பான்மை வாக்குகளால் என்செம்பா நியமிக்கப்பட்டுள்ளார். மறைந்த ஜனாதிபதி ஜான் மகுஃபுலியின்(John Magufuli) கீழ் முன்னர் பல அமைச்சரவை பதவிகளில் பணியாற்றிய என்செம்பா, அரசாங்கத்தின் வளர்ச்சி நிகழ்ச்சி நிரலை முன்னேற்றுவதற்கு விடாமுயற்சியுடன் செயல்படுவதாக குறிப்பிட்டுள்ளார். […]

உலகம் செய்தி

கடந்த 25 ஆண்டுகளில் இல்லாத மோசமான காலரா தொற்றுநோயை எதிர்கொள்ளும் ஆப்பிரிக்க நாடுகள்

  • November 13, 2025
  • 0 Comments

கடந்த 25 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஆப்பிரிக்கா மிக மோசமான காலரா நோயை சந்தித்து வருகிறது. அங்கோலா(Angola) மற்றும் புருண்டி(Burundi) நாடுகளில் மீண்டும் மீண்டும் தொற்று அதிகரித்து வருவதாக ஆப்பிரிக்க மருத்துவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆப்பிரிக்க ஒன்றியத்திற்கான பொது சுகாதார நிறுவனமான ஆப்பிரிக்கா நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் (CDC), 2025ம் ஆண்டில் இதுவரை சுமார் 300,000 உறுதிப்படுத்தப்பட்ட மற்றும் சந்தேகிக்கப்படும் காலரா தொற்றாளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. “நாட்டில் காலரா இன்னும் ஒரு முக்கிய […]

இந்தியா செய்தி

ஏர் இந்தியா நிறுவனத்தின் டொராண்டோ-டெல்லி விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

  • November 13, 2025
  • 0 Comments

டொராண்டோவிலிருந்து(Toronto) டெல்லிக்குச்(Delhi) சென்ற ஏர் இந்தியா(Air India) விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் காரணமாக விமானம் தேசிய தலைநகரில் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டுள்ளது. AI188 விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் செய்தி வந்ததற்கு பிறகு டெல்லி காவல்துறை அவசரமாக நடவடிக்கை மேற்கொண்டது. “பாதுகாப்பு கருதி, பயணிகள் மற்றும் பணியாளர்கள் அனைவரும் பாதுகாப்பாக இறங்கிவிட்டதாகவும் ஏர் இந்தியா நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். இதற்கு முன்னதாக மும்பையில் இருந்து வாரணாசிக்கு(Varanasi) பயணிகளுடன் நடுவானில் பறந்து கொண்டிருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்(Air India Express) […]

உலகம் செய்தி

கடந்த ஆண்டு உலகளவில் காசநோய் காரணமாக 1.23 மில்லியன் பேர் மரணம்: WHO

  • November 13, 2025
  • 0 Comments

உலக சுகாதார அமைப்பு (WHO) வெளியிட்ட ஒரு அறிக்கையில், காசநோய் (tuberculosis) உலகளவில் தொற்று நோய்களில் முதலிடத்தில் உள்ளது, இதனால் 2024ம் ஆண்டில் 1.23 மில்லியன் பேர் உயிரிழந்துள்ளனர். இது 2023ம் ஆண்டை விட மூன்று சதவீதம் குறைவு என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு 10.7 மில்லியன் மக்கள் காசநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர், இதில் 5.8 மில்லியன் ஆண்கள், 3.7 மில்லியன் பெண்கள் மற்றும் 1.2 மில்லியன் குழந்தைகள் அடங்குவர். பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து இருமல், தும்மல் […]

அரசியல் இலங்கை

மொட்டு கட்சி பஸ்ஸில் ஏற தயாராகும் சஜித்தின் சகாக்கள்! 

  • November 13, 2025
  • 0 Comments

நுகேகொடை கூட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தி பங்கேற்காவிட்டாலும்கூட கிராமிய மட்டத்திலுள்ள அக்கட்சியின் ஆதரவாளர்கள் பங்கேற்பார்கள் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி நம்பிக்கை வெளியிட்டுள்ளது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தலைமையகத்தில் இன்று (13) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது , எதிர்வரும் 21 ஆம் திகதி கூட்டம் பற்றி எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அக்கட்சியின் உறுப்பினரான முன்னாள் இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுருத்த மேற்கண்டவாறு கூறினார். “ நுகேகொடை கூட்டத்தில் எமது கட்சி ஆதரவாளர்கள் பங்கேற்பார்கள். அவர்கள் […]

அரசியல் இலங்கை

மாவீரர் துயிலும் இல்லங்களை தமிழர்களிடம் ஒப்படையுங்கள்!

  • November 13, 2025
  • 0 Comments

வடக்கு, கிழக்கிலுள்ள மாவீரர் துயிலும் இல்லங்களை தமிழ் மக்களிடம் கையளிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் க. கோடீஸ்வரன் வலியுறுத்தினார். நாடாளுமன்றத்தில் இன்று (13) நடைபெற்ற வரவு- செலவுத் திட்டத்தின் 2ஆம் வாசிப்புமீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு வலியுறுத்தினார். “ ஜே.வி.பியின் வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் கார்த்திகை வீரர்கள் தினம் இன்று (13) நினைவு கூறப்படுகின்றது. இடதுசாரி கொள்கையுடன் போராடிய வீரன் என்ற அடிப்படையில் நானும் அஞ்சலி செலுத்துகின்றேன். […]

அரசியல் இலங்கை

மக்கள்தான் எங்களுக்கு முக்கியம்: எதிரணிகள் ஆட முடியாது!

  • November 13, 2025
  • 0 Comments

ஊடகம்,பணம், அதிகாரம்,குடும்ப பின்னணி எதுவும் இல்லாத நிலையில் மக்களின் எதிர்பார்ப்புடனே ஆட்சியை பெற்றோம். மக்களுடன் தான் எமது பிணைப்பு உள்ளது. எமது முழு அரச செயற்பாடுகளும் மக்களின் பொறுப்கூறலை நிறைவேற்றும் வகையில் உள்ளது என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார். 36 ஆவது கார்த்திகை வீரர்கள் ஞாபகார்த்தம் விஹாரமஹாதேவி திறந்த வெளியரங்கில் இன்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றிய ஜனாதிபதி மேலும் கூறியவை வருமாறு, “ இந்நாட்டில் இடம்பெறும் குற்றச் செயல்கள் மற்றும் போதைப்பொருள் வர்த்தகத்துடன் தொடர்புள்ள […]

இந்தியா செய்தி

மும்பையில் 14 வயது சிறுமி 19வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை

  • November 13, 2025
  • 0 Comments

மும்பை(Mumbai) அருகே கல்யாணில்(Kalyan) உள்ள ஒரு கட்டிடத்தின் 19வது மாடியில் இருந்து 14 வயது சிறுமி ஒருவர் குதித்து தற்கொலை செய்து கொண்டதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தானே(Thane) மாவட்டத்தின் கல்யாணில் உள்ள ரவுனக் நகர(Raunak Nagar) வளாகத்தில் வசித்து வந்த ரித்தி கரடே(Riddhi Kharade) என்ற சிறுமி பாடசாலையில் சிறந்த மதிப்பெண்கள் பெறாததால் விரக்தியில் பாட்டி வீட்டில் இருந்து தற்கொலை செய்துகொண்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சம்பவம் நடந்த நேரத்தில், மும்பையில் பணிபுரியும் அவரது தாயார் வேலைக்குச் […]

ஐரோப்பா செய்தி

டெலிகிராம் நிறுவனர் மீதான பயணத் தடையை நீக்கிய பிரான்ஸ்

  • November 13, 2025
  • 0 Comments

டெலிகிராம்(Telegram) நிறுவனர் பாவெல் துரோவ்(Pavel Durov), தனது செய்தியிடல் செயலியில் சட்டவிரோத உள்ளடக்கம் தொடர்பான விசாரணைக்கு மத்தியில், அவர் மீதான பயணத் தடையை பிரான்ஸ்(France) நீக்கியுள்ளது. ரஷ்யாவில் பிறந்த 41 வயதான பாவெல் துரோவ், 2024ம் ஆண்டு பாரிஸில்(Paris) கைது செய்யப்பட்டார், மேலும் குற்றச் செயல்களில் தளம் ஈடுபட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் பிரெஞ்சு அதிகாரிகளால் விசாரணையில் உள்ளார். பிரான்ஸை விட்டு வெளியேறுவதற்கு ஆரம்பத்தில் தடை விதிக்கப்பட்டிருந்த போதிலும் டெலிகிராம் அமைந்துள்ள ஐக்கிய அரபு எமிரேட்ஸில்(UAE) இரண்டு வாரங்கள் […]

செய்தி விளையாட்டு

IPL Update – அபுதாபியில்(Abu Dhabi) நடைபெற உள்ள ஏலம்

  • November 13, 2025
  • 0 Comments

2026ம் ஆண்டிற்கான இந்தியன் பிரீமியர் லீக் (IPL) தொடரின் சிறிய ஏலம் டிசம்பர் 16 அன்று அபுதாபியில்(Abu Dhabi) நடைபெற உள்ளது. இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) இந்தியாவிற்கு வெளியே ஏலத்தை நடத்துவது இது மூன்றாவது முறையாகும். 2024 தொடருக்கான முதல் வெளிநாட்டு IPL ஏலம் துபாயில்(Dubai) நடைபெற்றது. 2025 தொடருக்கான இரண்டு நாள் ஏலம் கடந்த நவம்பரில் சவுதி அரேபியாவின்(Saudi Arabia) ஜெட்டாவில்(Jeddah) நடைபெற்றது.

error: Content is protected !!