ஐரோப்பா செய்தி

போர் பதற்றம் – துருப்புக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் ஜெர்மனி!

  • November 14, 2025
  • 0 Comments

ஜெர்மனியில் துருப்புக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க புதிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி புதிய இராணுவ சேவைத் திட்டம், 18 வயதுடைய அனைத்து ஆண்களும் பணியாற்றுவதற்குத் தகுதியானவர்களா என்பது குறித்த கேள்வித்தாளை நிரப்பவும், 2027 முதல் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தவும் கட்டாயப்படுத்தும் என குறிப்பிடப்பட்டுள்ளது. ஐரோப்பாவின் வலிமையான இராணுவத்தை உருவாக்க பெர்லின் (Berlin) இலக்கு வைத்துள்ள நிலையில் இந்த முடிவு வந்துள்ளது. ஜெர்மனியின் மிகப்பெரிய பாதுகாப்பு நிறுவனமான ரைன்மெட்டலின் (Rheinmetall) தலைவர், ஐந்து ஆண்டுகளில் இலக்கை அடைய முடியும் என்று […]

இந்தியா

பெண்களுக்கு மாதவிடாய் விடுப்பு வழங்கும் கர்நாடக மாநிலம்!

  • November 14, 2025
  • 0 Comments

கர்நாடகா, முறையான வேலைகளில் உள்ள அனைத்து பணிபுரியும் பெண்களுக்கும் ஊதியத்துடன் கூடிய மாதவிடாய் விடுப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. புதிய கொள்கையின் கீழ், அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் 18 முதல் 52 வயது வரையிலான பெண்கள் ஒவ்வொரு மாதமும் ஒரு நாள் மாதவிடாய் விடுப்பு எடுக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் விடுப்பு பெற மருத்துவ சான்றிதழ் தேவையில்லை என்பதும் விசேட அம்சமாகும். பீகார் மற்றும் ஒடிசா மாநிலங்கள் அரசு ஊழியர்களுக்கு மாதத்திற்கு இரண்டு நாட்கள் […]

உலகம் செய்தி

சூடான் உள்நாட்டு மோதல் – ஆயுத விநியோகத்தை முடக்க அமெரிக்கா வலியுறுத்தல்!

  • November 14, 2025
  • 0 Comments

சூடானின் துணை ராணுவப் படையான விரைவு ஆதரவுப் படைகளுக்கு (RSF) ஆயுதங்கள் வழங்குவதைத் தடுக்க சர்வதேச நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் மார்கோ ரூபியோ (Marco Rubio) அழைப்பு விடுத்துள்ளார். கனடாவில் நடந்த G7 வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தின் முடிவில் அவர் இந்த கருத்துக்களை வெளியிட்டுள்ளார். RSF பொதுமக்களுக்கு எதிராக கொலை, கற்பழிப்பு மற்றும் பாலியல் வன்முறை உள்ளிட்ட திட்டமிட்ட அட்டூழியங்களைச் செய்ததாக அவர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார். சூடானில் துணை இராணுவ படையினருக்கும், […]

இலங்கை

தோட்டத் தொழிலாளர்கள் தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தி எடுத்துள்ள முடிவு!

  • November 14, 2025
  • 0 Comments

மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வை வழங்குவதற்கு தமது கட்சி போர்க்கொடி தூக்கியுள்ளது என வெளியாகும் தகவலை பிரதான எதிர்க்கட்சியான தேசிய மக்கள் சக்தி நிராகரித்துள்ளது. “ மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு அரசாங்கத்தால் வழங்குவதற்கு முன்மொழியப்பட்டு 200 ரூபா நாளாந்த கொடுப்பனவை நாம் எதிர்க்கவில்லை. அந்த கொடுப்பனவு வழங்கப்பட வேண்டும் என்பதே கட்சியின் நிலைப்பாடாகும்.” என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றுகையிலேயே அக்கட்சியின் சார்பில் மேற்படி அறிவிப்பை […]

இலங்கை

ஐரோப்பாவுக்கு சென்ற அர்ச்சுனாவின் கைகளில் சிக்கிய ஆவணங்கள்: ஆயுதம் குறித்து மீண்டும் சர்ச்சை கருத்து!

  • November 14, 2025
  • 0 Comments

கொழும்பு துறைமுகத்திலிருந்து விடுவிக்கப்பட்ட சர்ச்சைக்குரிய கொள்கலன்களில் ஆயுதங்களே இருந்ததாக நாடாளுமன்றத்தில் மீண்டும் பரபரப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளார் நாடாளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா. நாடாளுமன்றத்தில் இன்று ஒழுங்குப் பிரச்சினையொன்றை எழுப்பி கருத்து வெளியிடுகையிலேயே அவர் இந்த குற்றச்சாட்டை முன்வைத்தார். “ நான் ஐரோப்பாவுக்கு விஜயம் மேற்கொண்டிருந்தேன். இதன்போது எனக்கு ஆவணங்கள் கிடைக்கப்பெற்றன. குறித்த 323 கொள்கலன்களில் ஆயுதங்களே இருந்துள்ளன. அவற்றுக்குள் ஆயுதங்களே இருந்தன என்பதை மிகவும் பொறுப்புடன் கூறிக்கொள்கின்றேன். சிஐடிக்கு அல்ல என்னை சர்வதேச பொலிசுக்கு அழைத்து சென்று […]

பொழுதுபோக்கு

சுந்தர்.சி விலகியதற்கு காரணம் என்ன? ப்ளூ சட்டை மாறனின் டுவிட்

  • November 14, 2025
  • 0 Comments

ரஜினியை வைத்து சுந்தர்.சி படம் இயக்குவதாக படத்திலிருந்து அவர் வெளியேறியதற்கு பலரும் பல காரணங்களை சொல்கின்றனர். இந்நிலையில் பிரபல திரை விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் இதுகுறித்து ட்வீட் போட்டிருக்கிறார். “ஃபர்ஸ்ட் காப்பி அடிப்படையில் படம் செய்து தருவதுதான் சுந்தர்.சியின் பாணி. அதற்கு கமல் ஒப்புக்கொள்ளவில்லையா? தாதா கேரக்டர் படங்கள் தமிழில் தோல்வியாகி வருவதால் ஜாலியாக படம் பண்ண நினைத்த தலைவரின் எண்ணம் பலிக்காமல் போனதா?’ என்று கேள்வி எழுப்பியிருக்கிறார். இதற்கிடையே சுந்தர்.சி விலகியதை தொடர்ந்து அடுத்து […]

இலங்கை

தொழிலுக்காக இஸ்ரேல் சென்ற இளைஞர் மர்மமான முறையில் மரணம்!

  • November 14, 2025
  • 0 Comments

இஸ்ரேலில் பணிப்புரிந்து வந்த இலங்கை பிரஜை ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. காலியை சொந்த இடமாக கொண்ட 38 வயதான இளைஞர் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு கட்டுமானத் தொழிலாளராக இஸ்ரேலுக்கு சென்றிருந்தார். இந்நிலையில் நேற்று இரவு அவர் மர்மமான முறையில் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை இஸ்ரேலுக்கான இலங்கை தூதர் நிமல் பண்டார உறுதிப்படுத்தியுள்ளார். அரசாங்கத்தின் வேலை வாய்ப்பின் பேரில் அவர் இஸ்ரேல் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த மரணம் குறித்து இஸ்ரேல் காவல்துறையின் இன்டர்போல் […]

உலகம்

சீனாவில் 1500 ஆண்டுகள் பழமையான கோவில் தீயில் எரிந்து நாசம்!

  • November 14, 2025
  • 0 Comments

சீனாவில் உள்ள 1,500 ஆண்டுகள் பழமையான கோயில், தீப்பிடித்து எரிந்துள்ளது. ஜாங்ஜியாகாங்கில் (Zhangjiagang) புதுப்பிக்கப்பட்ட வரலாற்று சிறப்புமிக்க யோங்கிங் (Yongqing)  கோயிலில் கடந்த புதன்கிழமை தீவிபத்து ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கூடாரத்தின் கான்கிரீட் சட்டகம் மட்டுமே எஞ்சியிருந்ததாகவும், அனைத்தும் எரிந்து நாசமானதாகவும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். இருப்பினும், இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை, மேலும் தீ விபத்துக்கான காரணம் குறித்து சீன அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். 1,500 ஆண்டுகள் பழமையான இந்தக் கோயில் 536 ஆம் ஆண்டில் […]

உலகம்

இந்தோனேசியாவில் மண்ணில் புதையுண்ட 21 பேர் – மீட்பதில் சிரமம்!

  • November 14, 2025
  • 0 Comments

இந்தோனேசியாவின் ஜாவா(Java) தீவில் பெய்த கனமழையால் ஏற்பட் நிலச்சரிவில் சிக்கி 02 பேர் உயிரிழந்துள்ள நிலையில், ஏறக்குறைய இருபதிற்கும் மேற்பட்டோர் காணாமல்போயுள்ளதாக அதிகாரிகள் தகவல் வெளியிட்டுள்ளனர். இந்தோனேசியாவின் மத்திய ஜாவா மாகாணத்தில் நேற்று குறித்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது. “நிலையற்ற தரை நிலைமைகள் மீட்பு பணியாளர்களுக்கு கடும் சிரமங்களை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. நடவடிக்கையை விரைவுபடுத்த கனரக உபகரணங்கள் பயன்படுத்தப்பட்டதாகவும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். இருப்பினும் மாயமான 21 பேரை கண்டுப்பிடிப்பதில் சிரமம் நிலவுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பொழுதுபோக்கு

ரச்சித்தாவின் முன்னாள் கணவர் தினேஷ் அதிரடியாக கைது

  • November 14, 2025
  • 0 Comments

நடிகை ரச்சித்தாவின் முன்னாள் கணவர் தினேஷ் மீது பணமோசடி தொடர்பாக புகாரின் பேரில் 4 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்த போலீசால் சொந்த ஜாமீனில் விடுவித்துள்ளனர். தினேஷ் மீது, திருநெல்வேலி மாவட்டம், பணகுடி ஊரைச் நேர்ந்த கருணாநிதி என்ற நபர் பண மோசடி புகார் அளித்துள்ளார். நடிகர் தினேஷ் கடந்த 2022 டிசம்பர் மாதத்தில் ரூ. 3 லட்சம் பணம் பெற்றுக்கொண்டு, தனது மனைவிக்கு மின்வாரியத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறினார். ஆனால், […]

error: Content is protected !!