ஐரோப்பா

உலகம் முழுவதிலும் இணைய செயலிழப்பை சந்தித்த ஆயிரக்கணக்கான மக்கள்!

  • November 18, 2025
  • 0 Comments

உலகம் முழுவதிலும் உள்ள ஆயிரக்கணக்கான மக்கள் இணைய செயலிழப்பை சந்தித்தாக இன்று முறைப்பாடு அளித்துள்ளனர். குறிப்பாக PayPal, ChatGPT, Letterboxd மற்றும் bet365 உள்ளிட்ட தளங்களில் சிக்கல்களை சந்தித்தாக தெரிவித்துள்ளனர். உலகின் மிகவும் பிரபலமான வீடியோ கேம்களில் ஒன்றான லீக் ஆஃப் லெஜண்ட்ஸும் (League of Legends)  இயங்கவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவுட்டேஜ் டிராக்கர் டவுன்டெக்டரின் ( outage tracker Downdetector) கூற்றுப்படி காலை 11.40 மணியில் இருந்து 11,000 க்கும் மேற்பட்டோர் சிக்கல்களை முறைப்பாடு அளித்தாக […]

இலங்கை

திருகோணமலை சம்பவம்: ஜனாதிபதி விடுத்துள்ள பணிப்பு!

  • November 18, 2025
  • 0 Comments

திருகோணமலை சம்பவம் தொடர்பில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரிடம், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அறிக்கை கோரியுள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற பாதுகாப்பு அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி மேற்படி தகவலை வெளியிட்டார். “ தேசிய மக்கள் சக்தி ஆட்சியின்கீழ் ஊழல் நடந்தால் அதற்கு எதிராக போராடலாம், ஜனநாயக மீறல்கள் இடம்பெற்றால் அதற்கு எதிராக போராட்டம் நடத்தலாம். பொருளாதாரம் சரிந்தால் அதற்கு எதிராகவும் ஆர்ப்பாட்டம் நடத்தலாம். ஆனால் இவை எதுவும் நடக்கவில்லை. […]

ஐரோப்பா செய்தி

பிரித்தானியாவிற்கு இடம்பெயர்பவர்களின் எண்ணிக்கையில் பாரிய வீழ்ச்சி!

  • November 18, 2025
  • 0 Comments

பிரித்தானியாவிற்கு இடம்பெயர்பவர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 20% குறைவடைந்துள்ளதாக தேசிய புள்ளிவிவர அலுவலகத்தின் (ONS) திருத்தப்பட்ட தரவுகள் தெரிவித்துள்ளன. நாட்டிற்குள் நுழைபவர்களுக்கும் வெளியேறுபவர்களுக்கும் இடையிலான வித்தியாசம், 86,000 பேரால் குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இது கடந்த ஆண்டு (2024) 345,000 ஆக பதிவாகியதாக குறிப்பிடப்படுகிறது. புகலிட அமைப்பை சீர்திருத்துவதை நோக்கமாகக் கொண்ட புதிய திட்டங்களை அரசாங்கம் அறிவித்த பிறகு இந்த புள்ளிவிபரம் வெளியிடப்பட்டுள்ளது. இதில் புகலிட நிலை மற்றும் புலம்பெயர்ந்தோரின் சலுகைகளைப் பெறுவதற்கான உரிமைகளின் […]

ஐரோப்பா

போலந்தின் ரயில் பாதை தகர்ப்பு – ரஷ்யா மீது குற்றச்சாட்டு!

  • November 18, 2025
  • 0 Comments

போலந்தில்  ரயில் பாதையை வெடிக்கச் செய்ய ரஷ்ய ரகசிய சேவைகள் உத்தரவிட்டதாக சில ஆதாரங்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாக ஏபிசி செய்தி வெளியிட்டுள்ளது. இந்த தகவலை போலந்தின் பாதுகாப்பு சேவைகள் அமைச்சரின் செய்தித் தொடர்பாளர் ஜேசெக் டோப்ர்சின்ஸ்கி (Jacek Dobrzyński)  இன்று தெரிவித்துள்ளதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில் போலந்தின்  கிழக்கு பகுதியில் உள்ள ரயில்வே மற்றும் பிற முக்கிய உள்கட்டமைப்புகளின் பாதுகாப்பை சரிபார்க்க இராணுவ ரோந்துப் படையினர் அனுப்பப்பட்டுள்ளதாக அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் கூறியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே போலந்தின் […]

பொழுதுபோக்கு

லேடி சூப்பர் ஸ்டாரின் பிறந்த நாள் ஸ்பெஷல்…!

  • November 18, 2025
  • 0 Comments

பாலய்யா என்று ரசிகர்களால் அழைக்கப்படும் பிரபல தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணாவுக்கு உலகளவில் ரசிகர்கள் இருக்கின்றார்கள். இவருடைய நடனம் மற்றும் ஆக்‌ஷன் காட்சிகளில் சிறிதளவேனும் லாஜிக் இருக்காது. ஆனால் இதை பார்ப்பதற்காகவே மக்கள் கூட்டம் கூடுவார்கள். இந்த நிலையில், நடிகர் பாலய்யாவின் 111 ஆவது திரைப்படத்தை இயக்குநர் கோபிசந்த் மலினேனி இயக்குகிறார். வரலாற்று கதைக்களத்துடன் உருவாகி வரும் இந்தப் படத்தை விருத்தி சினிமாஸ் நிறுவனம் தயாரிக்கின்றது. இதனைத் தொடர்ந்து, நடிகர் பாலய்யாவின் 111 ஆவது படத்தில் பிரபல நடிகை […]

இலங்கை

போக்குவரத்து விதிமீறல் அபராதங்களை ஆன்லைனில் செலுத்தும் வசதி!

  • November 18, 2025
  • 0 Comments

போக்குவரத்து விதிமீறல் அபராதங்களை ஆன்லைனில் செலுத்தும் வசதி விரைவில் நாடு முழுவதும் அறிமுகப்படுத்தப்படும் என்று போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். டிசம்பர் 31 ஆம் திகதிக்குள் நாடு முழுவதும் இந்த வசதி கிடைக்கும் என எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறினார். “அடுத்த ஆண்டு நடுப்பகுதியில், இந்த அமைப்பை GovPay மூலம் ஓட்டுநர் குறைபாடு திட்டத்துடன் இணைக்கவும், வாகன ஓட்டிகளுக்கு ஒரு விரிவான குறைபாடு அமைப்பை அறிமுகப்படுத்தவும் நாங்கள் இலக்கு வைத்துள்ளோம்,” என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

இலங்கை

திருமலை சம்பவத்தை வைத்து அரசியல் நடத்த இடமளியோம்!

  • November 18, 2025
  • 0 Comments

திருகோணமலை சம்பவத்தை அடிப்படையாகக்கொண்டு அரசியல் லாபம் தேடுவதற்கு சில குழுக்கள் முற்படலாம். அவ்வாறான சம்பவங்களுக்கு இடமளிக்கப்படமாட்டாது என்று அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் மாநாடு அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்றது. இதன்போதே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,  “ சட்டம், ஒழுங்கை நிலைநாட்டுவதற்குரிய பொறுப்பு பொலிஸாருக்கு உள்ளது. அதற்கமைய அவர்கள் செயற்படுவார்கள். எமது நாட்டில் புத்தர் சிலைக்கு சேதம் […]

உலகம்

காங்கோவில் தீப்பிடித்து எரிந்த விமானம்! அமைச்சரின் நிலை குறித்து வெளியான தகவல்!

  • November 18, 2025
  • 0 Comments

காங்கோ ஜனநாயகக் குடியரசின் சுரங்க அமைச்சரை ஏற்றிச் சென்ற விமானம் நேற்று  விபத்துக்குள்ளானது. விபத்து நடந்த நேரத்தில் அமைச்சர் லூயிஸ் வாதும் கபாம்பா ( Louis Watum Kabamba) மற்றும் 19 பயணிகள் விமானத்தில் இருந்ததாகவும் அவர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டதாகவும்  கூறப்படுகிறது. தலைநகர் கின்ஷாசா (Kinshasa)  விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட விமானம், லுவாலாபா மாகாணத்தில் உள்ள கோல்வேசி விமான நிலையத்தில் (Kolwezi Airport) தரையிறங்கும் போது விபத்துக்குள்ளானது. விபத்தை தொடர்ந்து விமானம் தீப்பிடித்து எரிந்ததாகவும் இதில்  பயணிகளின் […]

இலங்கை

புத்தர் சிலை விவகாரம்: குழு அமைக்குமாறு சஜித் வலியுறுத்து!

  • November 18, 2025
  • 0 Comments

திருகோணமலை புத்தர்சிலை விவகாரம் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்காக ஜனாதிபதி தலைமையில் தேசிய ஒருமைப்பாட்டு குழுவொன்று உடனடியாக அமைக்கப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தினார். நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற வரவு- செலவுத் திட்ட குழுநிலை விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இந்த வலியுறுத்தலை விடுத்தார். இது தொடர்பில் சஜித் பிரேமதாச மேலும் கூறியவை வருமாறு, “ திருகோணமலை ஜயந்தி போதிராஜ விகாரையில் நடந்த சம்பவம் தேசிய பாதுகாப்புக்கு சாதகமானதா? பாதிப்பானதா? 1951ஆம் ஆண்டில் அந்த […]

உலகம் செய்தி

சிங்கப்பூர் விமான நிலையத்தில் கைப்பற்றப்பட்ட காண்டாமிருகக் கொம்புகள்!

  • November 18, 2025
  • 0 Comments

தென்னாப்பிரிக்காவிலிருந்து ( South Africa) சிங்கப்பூர் விமான நிலையம் வழியாக லாவோஸுக்கு (Laos) கடத்தப்பட்ட விலங்குகளின் எச்சங்கள் இம்மாதத்தின் தொடக்கத்தில் மீட்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சிங்கப்பூரின் தேசிய பூங்கா வாரியம் (NParks) மற்றும் விமான சரக்கு கையாளுபவர் SATS இன்று இந்த தகவலை வெளியிட்டுள்ளார். சுமார் 35.7 கிலோ எடைக்கொண்ட காண்டாமிருகக் கொம்புகளை  கடத்த முற்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். குறித்த பொதியில் சுமார் S$1.13 மில்லியன் (US$870,000) மதிப்புள்ள இருபது காண்டாமிருகக் கொம்புகளும், எலும்புகள், பற்கள் மற்றும் […]

error: Content is protected !!