உலகம் செய்தி

சீனா – ஜப்பான் மோதல்! 4.9 லட்சத்துக்கும் அதிகமான விமானப் பயணச் சீட்டுகள் இரத்து!

  • November 19, 2025
  • 0 Comments

ஜப்பானுக்குப் பயணம் மேற்கொள்ள திட்டமிட்டிருந்த சீனர்கள் தங்கள் விமானச் டிக்கெட்டுகளை மீளப் பெற்று வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சீனாவுக்கும் ஜப்பானுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள ராஜதந்திர முறுகல் நிலையை அடுத்து இந்த நிலை ஏற்பட்டுள்ளது. அதற்கமைய, இதுவரை சுமார் 491,000 விமானச் டிக்கெட்டுகள் சீன பயணிகளால் .ரத்து செய்யப்பட்டுள்ளன. சமகாலத்தில் ஜப்பானுக்குப் பயணம் செய்வதைத் தவிர்க்குமாறு தமது நாட்டு பிரஜைகளுக்கு சீன அரசாங்கம் அறிவித்திருந்து. இதனையடுத்து நேற்று முன்தினம் 82.15 சதவீதம் விமானப் பயணங்கள் பாதிக்கப்பட்டன. இரத்து […]

இலங்கை

இலங்கையில் கண் தானம் செய்யும் 2.2 மில்லியன் மக்கள்

  • November 19, 2025
  • 0 Comments

இலங்கையில் 2.28 மில்லியனுக்கும் அதிகமானோர் மரணத்திற்குப் பின் தங்கள் கண்களைத் தானம் செய்ய உறுதி அளித்துள்ளனர். இது, நாட்டின் நீண்டகால மனிதாபிமான முயற்சியில் ஒரு முக்கிய மைல்கல்லாகும் என இலங்கை கண் தான சங்கம் (Eye Donation Society) தெரிவித்துள்ளது. கடந்த 11 மாதங்களில், 99,950 விழி வெண்படலங்கள் வெளிநாட்டுப் பெறுநர்களுக்குத் தானம் செய்யப்பட்டுள்ளன. இது உலகளாவிய ரீதியில் இலங்கையின் கண் தானம் தொடர்பான குறிப்பிடத்தக்க அதிகரிப்பாகும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதேவேளை இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் […]

ஐரோப்பா

ஸ்பெயினில் வெளிநாட்டவர்களின் எண்ணிக்கையில் ஏற்பட்டுள்ள சடுதியான அதிகரிப்பு

  • November 19, 2025
  • 0 Comments

ஸ்பெயினில் சொந்த குடிமக்களின் எண்ணிக்கையை விட வெளிநாட்டவர்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்மைய புள்ளிவிவரங்களின் அடிப்படையில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. அதற்கமைய ஸ்பானிய குடிமக்களின் எண்ணிக்கையை விட வெளிநாட்டு மக்களின் எண்ணிக்கை 20 மடங்கு வேகத்தில் வளர்ச்சி கண்டுள்ளதாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஸ்பெயின் குடிமக்களின் மொத்த மக்கள் தொகை கணிசமான அதிகரிப்பை பதிவு செய்துள்ளது. அண்மைய தரவுகளின்படி வரலாற்றில் முதன்முறையாக ஸ்பெயினின் மொத்த மக்கள் தொகை 49,153,849 ஆக உயர்ந்துள்ளது. அதற்கமைய இந்த […]

இலங்கை

நுகேகொடை பேரணியில் மக்கள் படை திரளும்: மஹிந்த நம்பிக்கை!

  • November 19, 2025
  • 0 Comments

நுகேகொடையில் நாளை மறுதினம் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள பேரணியில் பெருந்திரளானோர் பங்கேற்பாளர்கள் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ச நம்பிக்கை வெளியிட்டுள்ளார். கண்டியில் வைத்து ஊடகவியலாளர்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு நம்பிக்கை வெளியிட்டார். அரசாங்;;கத்துக்கு எதிராக நடைபெறவுள்ள மேற்படி பேரணியில் மஹிந்த ராஜபக்ச பங்கேற்கமாட்டார் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி அறிவித்திருந்தாலும், தான் நிச்சயம் பங்கேற்பார் என மஹிந்த நேற்று அறிவித்தார். ஐக்கிய மக்கள் சக்தி […]

உலகம்

தைவான் விவகாரம்! ஜப்பான் – சீனா மோதல் தீவிரம்

  • November 19, 2025
  • 0 Comments

தாய்வான் தொடர்பில் சீனா மற்றும் ஜப்பானுக்கு இடையில் இராஜதந்திர முறுகல் நிலை ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தாய்வானின் பாதுகாப்பு குறித்து ஜப்பானியப் பிரதமர் சனாய் தகைச்சி (Sanae Takaichi) தெரிவித்த கூற்றுக்கு, ஒசாகாவில் உள்ள சீனத் தூதர் சூ ஜியான் (Xue Jian) வெளியிட்ட கருத்துக்கள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் குறித்த சர்ச்சைக்குரிய கருத்துகள் விசாரிக்க, ஜப்பானுக்கான சீனத் தூதரை (Ambassador Wu Jianghao) ஜப்பானின் வெளியுறவு அமைச்சு அழைத்துள்ளது. தாய்வானில் கடல் பகுதியில் […]

செய்தி

மாவீரர் நாள் அனுஷ்டித்தால் சட்டம் பாயும்: எச்சரிக்கை விடுப்பு!

  • November 19, 2025
  • 0 Comments

“ உயிரிழந்த தமது உறவுகளை நினைவுகூரும் போர்வையில் பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் விதத்திலான செயற்பாட்டால் எவரேனும் ஈடுபட்டால் அதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.” என்று அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் மாநாடு அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்றது. இதன்போது, “ வடக்கில் மாவீரர் தினம் அனுஷ்டிக்கப்படவுள்ளது. தற்போதே நிகழ்வு ஆரம்பமாகிவிட்டதென தெரிகின்றது. இந்நிலையில் இந்தியாவில் புலி ஆதரவாளராகக் கருதப்படும் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் (தொல் திருமாவளவன்) […]

இலங்கை

வடக்கில் காணிகளை விடுவிக்க கூடாது: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

  • November 19, 2025
  • 0 Comments

” வடக்கில் காணி பிரச்சினை இருக்கின்றதென்பதை ஏற்கின்றோம். எனினும், காணி விடுவிப்பின்போது தேசிய பாதுகாப்புக்கு முன்னுரிமை வழங்கியே முடிவுகள் எடுக்கப்பட வேண்டும்.” என்று பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி வலியுறுத்தியுள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற வரவு- செலவுத் திட்ட குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார இவ்வாறு வலியுறுத்தினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, “ பொருளாதாரத்துக்கு தேசிய பாதுகாப்பு எவ்வளவு முக்கியத்துவம் என்பதை […]

ஐரோப்பா

ஐரோப்பா முழுவதும் பறக்க தயாராகும் எயார் ஏசியா

  • November 19, 2025
  • 0 Comments

ஐரோப்பாவுக்கான நீண்ட நேர விமானச் சேவைகளை அறிமுகம் செய்ய மலேசியாவின் எயார் ஏசியா எக்ஸ் (AirAsia X) விமான நிறுவனம் திட்டமிட்டுள்ளது. அடுத்தாண்டு முதல் இந்த நடவடிக்கையை முன்னெடுக்கவுள்ளதாக, நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பென்யமின் இஸ்மாயில் தெரிவித்துள்ளார். அண்மையில் மலேசியாவின் கோலாலம்பூரிலிருந்து துருக்கியின் இஸ்தான்புல் நகருக்கு நேரடி விமானச் சேவையை எயார் ஏசியா எக்ஸ் நிறுவனம் அறிமுகம் செய்திருந்தது. கோலாலம்பூருக்கும் இஸ்தான்புலுக்கும் இடையே வாராந்திரம் நான்கு சேவைகளை எயார் ஏசியா எக்ஸ் நிறுவனம் முன்னெடுக்கிறது. இந்த […]

உலகம்

விசா கட்டுப்பாடுகளை தளர்த்தும் அமெரிக்கா

  • November 19, 2025
  • 0 Comments

அமெரிக்காவில் உலகக்கோப்பை கால்பந்து தொடரைக் காண வரும் வெளிநாட்டுப் பார்வையாளர்களுக்காக, விசா வழங்கும் நடைமுறைகளை ட்ரம்ப் நிர்வாகம் தளர்த்தியுள்ளது. அமெரிக்காவில் அடுத்த ஆண்டு உலகக்கோப்பை கால்பந்து தொடர் நடைபெறவுள்ள நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. பொதுவாக அமெரிக்க விசா நேர்காணலுக்காக வெளிநாட்டினர் பல மாதங்கள் காத்திருக்க நேரிடும். இந்தநிலையில், கால்பந்து போட்டிகளுக்கான டிக்கெட்களை வைத்திருப்பவர்கள் 2 மாதங்களுக்குள் நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள் என வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ (Marco Rubio) தெரிவித்துள்ளார். மேலும் உலகக்கோப்பை கால்பந்து தொடரைக் […]

உலகம் கருத்து & பகுப்பாய்வு

அண்டார்டிக்காவில் ஏற்படும் பேராபத்து – முழு உலகமும் நீரில் மூழ்கும் அபாயம்

  • November 19, 2025
  • 0 Comments

அண்டார்டிக்காவில் அடுத்த 10 ஆண்டுகளில் பாரிய பனித் தகடுகள் திடீரென்று உருகும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. அண்மையில் வெளியான புதிய தகவல்களின் அடிப்படையில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக நேச்சர் ஆய்விதழ் செய்தி வெளியிட்டுள்ளது. இதன் காரணமாக அண்டார்டிக் பனி மற்றும் கடல் உயிரினங்களின் வாழ்விடங்களில் மிக விரைவான மாற்றங்கள் ஏற்படும் என விஞ்ஞானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். தற்போதைய நிலவரப்படி மேற்கு அண்டார்டிக் பனித் தகடு ஆபத்தான கட்டத்தில் உள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் முழுமையான பனித் தகடு சரிந்தால், உலகெங்கிலும் […]

error: Content is protected !!