இலங்கை

தேசிய பாதுகாப்புக்கு முதலிடம் வழங்குமாறு வலியுறுத்து!

  • November 18, 2025
  • 0 Comments

“அரசியல் உறுதிமொழிகளைவிட தேசிய பாதுகாப்பே மிக முக்கியம். அதனை கருத்திற்கொண்டே முடிவுகள் எடுக்கப்பட வேண்டும்.” என்று ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். “பொருளாதாரத்துக்கு தேசிய பாதுகாப்பு எவ்வளவு முக்கியத்துவம் என்பதை தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் அறிந்து வைத்துள்ளதா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. எனவே, தீர்மானங்களை எடுக்கும்போது தேசிய பாதுகாப்பை கருத்திற்கொண்டு செயல்படுமாறு கோருகின்றோம். வடக்கில் […]

இலங்கை

இனவாத பொறிக்குள் இருந்து நாட்டு மக்களை மீட்போம்!

  • November 18, 2025
  • 0 Comments

இனவாத பொறிக்குள் இருந்து நாட்டு மக்களை மீட்டு, நாம் அனைவரும் இலங்கையர்கள்தான் என்ற நிலைமையை உணர வைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். அதற்கான ஆரம்பமாகவே இலங்கையர் தினம் நடத்தப்படவுள்ளது என்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார். நூட்டில் இனவாதம் மற்றும் மதவாதத்தை தூண்டிவிட்டு அரசியல் நடத்தியவர்கள் உள்ளனர். நாம் இனவாதத்தை வெறுக்கின்றோம். தேசிய மக்கள் சக்தியென்பது இலங்கையர்களுக்கான கட்சியாகும். எமது கட்சியின் கொள்கையானது நாட்டுக்கானது. இன ஐக்கியத்தை ஏற்படுத்துவதற்கு கடந்தகால ஆட்சியாளர்கள் நடவடிக்கை […]

உலகம்

அமெரிக்காவில் வழமைக்குத் திரும்பும் விமான நிலைய சேவைகள்

  • November 18, 2025
  • 0 Comments

அமெரிக்காவின் முக்கிய விமான நிலையங்களில் விதிக்கப்பட்டிருந்த அனைத்துக் கட்டுப்பாடுகளும் நீக்கப்பட்டுள்ளதாக விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது. கடந்த பல வாரங்களாக அமெரிக்க அரசின் நிதி முடக்கத்தின் காரணமாக, விமானக் கட்டுப்பாட்டாளர்கள் மற்றும் ஊழியர்களுக்குச் சம்பளம் வழங்குவதில் ஏற்பட்ட சிக்கல் காரணமாகப் பலர் பணிகளிலிருந்து விலகியிருந்தனர். இதன் காரணமாக சுமார் 40-ற்கும் மேற்பட்ட விமான நிலையங்களின் செயல்பாடுகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்தன. இதனையடுத்து, விமான நிறுவனங்கள் தங்கள் விமானங்களின் எண்ணிக்கையைக் குறைத்துக் கொள்ளுமாறு விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு ஆணையம் […]

இலங்கை முக்கிய செய்திகள்

செவ்வந்தி மூலம் அரசியல் தொடர்பு அம்பலம் – விசாரணை வேட்டை தீவிரம்!

  • November 18, 2025
  • 0 Comments

பாதாள குழுக்களுக்கு எதிரான நடவடிக்கை துரிதப்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன், போதை பொருள் ஒழிப்பு நடவடிக்கையும் சிறப்பாக இடம்பெற்றுவருகின்றது என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அமைச்சர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, “பாதாள குழுவினருக்கு எதிராக பொலிஸார் மிகவும் சிறப்பான முறையில் செயல்பட்டுவருகின்றனர். இது சிலருக்கு வலிக்கின்றது. அதனால்தான் பொலிஸாரை இலக்கு வைத்து விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுவருகின்றன. பாதாள குழுவினருக்கு எதிரான […]

உலகம்

டிஜிட்டல் நிதிச் செயல்முறைக்கு புதிய கட்டுப்பாடுகள்! சிங்கப்பூரில் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

  • November 18, 2025
  • 0 Comments

டிஜிட்டல் நிதி நம்பகத்தன்மைக்கு புதிய விதிமுறைகள் அவசியம் எனத் துறைசார் வல்லுநர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். சிங்கப்பூரில் நடைபெற்ற நிதித் தொழில்நுட்ப நிகழ்வின் இறுதி நாளில், இது தொடர்பான கோரிக்கையை நிதித் தொழில்நுட்பத் தலைவர்கள் விடுத்துள்ளனர். எதிர்கால டிஜிட்டல் நிதிச் செயல்முறை மீது மக்களின் நம்பிக்கையை நிலைநாட்டுவதற்குப் புதிய விதிமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகள் தேவை என அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். தொழில்நுட்பம், பணப்புழக்கத்தில் விரைவான மாற்றங்களை ஏற்படுத்துவதால், இந்த விதிமுறைகள் துரிதமாகச் செயல்படுத்தப்பட வேண்டியது அவசியம் என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். இதேவேளை, […]

கருத்து & பகுப்பாய்வு

தொல்பொருள் திணைக்களமா? சிங்கள தொல்பொருள் திணைக்களமா?

  • November 18, 2025
  • 0 Comments

தொல்பொருள் திணைக்களம் சிங்கள பௌத்தர்களுக்கு சாதகமாக செயற்படுவதாக தொடர்ச்சியாக தமிழ் மக்களால் குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுகின்ற நிலையில், தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் 19 சிங்கள உறுப்பினர்களைக் கொண்ட புதிய தொல்பொருள் ஆலோசனைக் குழுவை நியமித்துள்ளது. புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் கலாநிதி ஹினிதும சுனில் செனவி கையொப்பத்துடன் வெளியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானிக்கு அமைய இரண்டு வருட பதவிக்காலத்திற்கு தொல்பொருள் ஆலோசனைக் குழு நியமிக்கப்பட்டுள்ளது. ஷியாமோபாலி மஹா நிகாயாவின் மல்வத்து மகா விகாரையின் பிரதம […]

உலகம் செய்தி

ஷேக் ஹசீனாவை நாடுகடத்த இந்தியாவிடம் பங்களாதேஷ் கோரிக்கை

  • November 18, 2025
  • 0 Comments

இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ள பங்களாதேஷின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவை உடனடியாக நாடுகடத்துமாறு பங்களாதேஷின் இடைக்கால அரசாங்கம் இந்தியாவிடம் கோரிக்கை விடுத்துள்ளது. கடந்த ஆண்டு பங்களாதேஷில் மாணவர்களால் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டங்களின் போது வன்முறைகளைப் பிரயோகித்து ஒடுக்கிய சமயம் மனிதாபிமானத்திற்கு எதிரான குற்றங்கள் இழைக்கப்பட்டதாக ஷேக் ஹசீனா மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. இந்த ஆர்ப்பாட்டத்தின் போது 1600 பேர் வரை உயிரிழந்திருந்ததாக ஐ.நா. மதிப்பீடுகள் கூறுகின்றன. இவர்களில் பெரும்பாலானோர் பங்களாதேஷ் இராணுவத்தினரின் துப்பாக்கிச் சூட்டில் இறந்ததாக அறிவிக்கப்படுகிறது. ஆர்ப்பாட்டங்களைத் […]

உலகம்

ட்ரம்பின் காசா சமாதானத் திட்டத்திற்கு ஐ.நா அங்கீகாரம் – ஹமாஸ் நிராகரிப்பு

  • November 18, 2025
  • 0 Comments

காசாவில் அமைதி நிலையை ஏற்படுத்துவதற்காக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உருவாக்கிய 20 அம்சத் திட்டத்தை ஐ.நா. பாதுகாப்பு சபை அங்கீகரித்துள்ளது. இது தொடர்பான பிரேரணை நேற்று வாக்கெடுப்பிற்கு விடப்பட்ட போது 13 நாடுகள் ஆதரவாக வாக்களித்தன. சீனாவும் ரஷ்யாவும் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை. ட்ரம்ப்பின் சமாதானத் திட்டத்தில் சர்வதேச ஸ்திரப்படுத்தல் படையொன்றை ஸ்தாபிக்கும் யோசனையும் உள்ளடங்கியுள்ளது. இதேவேளை, ஐ. நா பாதுகாப்பு சபையில் நிறைவேற்றப்பட்ட பிரேரணையை ஹமாஸ் அமைப்பு நிராகரித்துள்ளது. இது பலஸ்தீனர்களது உரிமைகளையும் கோரிக்கைகளையும் நிலைநாட்டவில்லை […]

ஐரோப்பா

ஜெர்மனியில் அகதிகளின் வருகை அதிகரிப்பு – வல்லுநர்கள் விடுத்த எச்சரிக்கை

  • November 18, 2025
  • 0 Comments

ஜெர்மனியில் பல நகரங்கள் அகதிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதை ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை என வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். சிரியாவிலிருந்து புகலிட விண்ணப்பங்கள் குறைந்துள்ள நிலையில், சூடானில் இருந்து அதிகமான மக்கள் ஐரோப்பாவிற்கு வருகிறார்கள். நிலைமை அவசரமாக மாறுவதற்கு முன்பு நகரங்களுக்குத் திட்டங்களும் வளங்களும் தேவை என வல்லுநர்கள் கூறுகின்றனர். அகதிகளுக்கு வெற்று அடுக்குமாடிக் குடியிருப்புகளை வைத்திருப்பது கடினம். குறிப்பாகப் பெரிய நகரங்களில் இந்தப் பிரச்சினை உள்ளது. ஆனால் அரசாங்கம் வீட்டுவசதிக்கான கொள்கலன்களை சேமித்து வைக்கலாம் என்பதோடு அவசரநிலைகளுக்கு என்று […]

ஐரோப்பா செய்தி

இத்தாலியிலுள்ள பிரபல ஏரி ஒன்றில் தங்க மீன்களுக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து

  • November 18, 2025
  • 0 Comments

இத்தாலியில் பிரபலமான சுற்றுலாத்தலமான ட்ரெண்டினோ பகுதியில் உள்ள லோப்பியோ ஏரியில் தங்க மீன்கள் (Goldfish) ஒக்சிஜனுக்காகப் போராடி வருவதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. அந்தப் பகுதியில் உள்ள ஆழமற்ற நீர்ப் பகுதியில் ஆயிரக்கணக்கான தங்கமீன்கள் ஒக்சிஜன் கிடைக்காமையால் உயிரிழப்பதாகத் தெரிய வந்துள்ளது. அந்தப் பகுதியில் உள்ள மோசமான சூழல் காரணமாக பெரும் தொகை மீன்கள் உயிரிழந்துள்ளதாக இயற்கை ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர். நீர்நிலையை அண்மித்த பகுதிகளில் வசிக்கும் மக்கள் தங்கள் வீடுகளில் வளர்க்கப்பட்ட தங்க மீன்களை, இந்த […]

error: Content is protected !!