இந்தியா முக்கிய செய்திகள்

2026 ஆம் ஆண்டுக்கான தமிழக சட்டமன்ற தேர்தல் ஆரம்பம்!

  • April 23, 2026
  • 0 Comments

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடவடிக்கைகள் தற்போது ஆரம்பமாகியுள்ளன. தமிழக சட்டமன்ற தேர்தல் 234 தொகுதிகளிலும் ஒரே கட்டமாக இன்று நடைபெறவுள்ளது. தமிழகத்தில் 5367 கோடி மக்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். அவர்களில் 2.77 கோடி  ஆண்களும், 2.89 கோடி பெண்களும் அடங்குவர். இம்முறை தி.மு.க, அ.தி.மு.க, நாம் தமிழர் கட்சி, தமிழக வெற்றிக் கழகம் ஆகிய கட்சிகள் களத்தில் உள்ளன. இதனால் நான்கு முனைப் போட்டி நிலவுகிறது. 4,023 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இவர்களில் 3,579 […]

இலங்கை செய்தி

மரத்துடன் மோதி பஸ் விபத்து: கிண்ணியாவில் 19 பேர் காயம்!

  • April 22, 2026
  • 0 Comments

கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கங்கை பாலத்திற்கு அருகே பஸ்ஸொன்று விபத்துக்குள்ளானதில் 19 பேர் காயமடைந்துள்ளனர். கிண்ணியா , மூதூருக்கிடையில் சேவையில் ஈடுபட்டு வரும் பஸ்ஸொன்றே இன்று (22) மாலை வீதியைவிட்டு விலகி மரத்துடன் மோதி இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. விபத்தில் காயமடைந்தோர் கிண்ணியா மற்றும் மூதூர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். படுகாயம் அடைந்த சிலர் மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளனர். விபத்து தொடர்பில் கிண்ணியா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.  

உலகம் செய்தி

ஓரிரு நாட்களுக்குள் 2ஆம் சுற்று அமைதி பேச்சு: ட்ரம்ப் தகவல்!

  • April 22, 2026
  • 0 Comments

ஈரானுடன் அடுத்த சில நாட்களுக்குள் 2ஆம் சுற்று அமைதி பேச்சு நடத்தப்படுவதற்குரிய சாத்தியம் இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்தார். இதற்கமைய அடுத்த 36 முதல் 72 மணி நேரத்திற்குள் இரு நாடுகளுக்கும் இடையே உரையாடல் தொடங்கலாம் என அமைதி பேச்சுக்கு மத்தியஸ்தம் வகிக்கும் பாகிஸ்தான் நம்பிக்கை வெளியிட்டுள்ளது. தற்போதைய போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்குரிய ஒருங்கிணைந்த திட்டத்தை ஈரான் அரசு தயாரிப்பதற்காக, டிரம்ப் தற்காலிக போர்நிறுத்த ஒப்பந்தத்தை நீட்டித்துள்ளார். இரு நாடுகளுக்கும் இடையிலான தற்காலிக போர் […]

ஐரோப்பா

செர்னோபில் அணுமின் நிலையத்தை குறிவைக்கும் ரஷ்யா!

  • April 22, 2026
  • 0 Comments

உக்ரைனின் பயன்பாட்டில் இல்லாத செர்னோபில் அணுமின் நிலையத்திற்கு அருகிலுள்ள பகுதிகளில் ரஷ்யா  ஆளில்லா விமானங்கள் மற்றும் ஏவுகணைகளை ஏவி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவின் மேற்படி நடவடிக்கையானது பாரிய விபத்து ஏற்படுவதற்கான வாய்ப்பை கணிசமாக அதிகரிப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள உக்ரைனின் தலைமை வழக்கறிஞர் ருஸ்லான் கிராவ்சென்கோ (Ruslan Kravchenko), முன்னர் அறிவிக்கப்படாத ரஷ்ய இராணுவ நடவடிக்கைகளை விவரித்துள்ளார். 2022 படையெடுப்பிலிருந்து செர்னோபில் மற்றும் க்மெல்னிட்ஸ்கி அணுமின் நிலையம் ஆகிய இரண்டும் ரஷ்யாவின் அதிவேக கின்ஷால் […]

இலங்கை செய்தி

பௌத்த மயமாக்கலுக்கு எதிராக வவுனியாவில் போராட்டம்!

  • April 22, 2026
  • 0 Comments

தமிழர் தாயகமான வடக்கு,கிழக்கில் முன்னெடுக்கப்படும் பௌத்தமயமாக்கல் செயற்பாடுகளை கண்டித்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் இன்று (22) கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. வவுனியா தபாலகத்திற்கு அருகாமையில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் வடக்கு, கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் சங்கம் இதற்குரிய ஏற்பாட்டைச் செய்திருந்தது. போராட்டத்தில் பங்கேற்றோர், பௌத்தமயமாக்கலை வன்மையாகக் கண்டித்தனர். அத்துடன், காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் இன்னும் நீதி கிடைக்கவில்லை என்பதையும் சுட்டிக்காட்டினர்.  

உலகம் செய்தி

போர் விதி மீறல்: இஸ்ரேல் தாக்குதலில் லெபனானில் இருவர் பலி!

  • April 22, 2026
  • 0 Comments

லெபனான் தெற்கு பகுதியில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் இருவர் கொல்லப்பட்டுள்ளனர். இஸ்ரேல் மற்றும் லெபனானுக்கிடையில் தற்காலிக போர் நிறுத்தம் அமுலில் உள்ள சூழ்நிலையிலேயே மேற்படி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தெற்கு லெபனானில் உள்ள அட்-திரி பகுதியில் காரொன்றை இலக்கு வைத்தே இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இஸ்ரேல் போர் நிறுத்த விதிமுறைகளை மீறுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனினும், ஹிஸ்புல்லா அமைப்பினர் போர் நிறுத்த விதிமுறையை மீறியதாலேயே தாக்குதல் நடத்தப்பட்டது என இஸ்ரேல் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளை, காசாவிலும் போர் நிறுத்தம் அமுலில் […]

இலங்கை செய்தி

டித்வா புயல்: மே இறுதிக்குள் இழப்பீடு வழங்கி முடிக்குமாறு பணிப்பு!

  • April 22, 2026
  • 0 Comments

டித்வா சூறாவளியால் பகுதியளவில் சேதமடைந்த வீடுகளுக்காக அரசினால் அங்கீகரிக்கப்பட்ட 05 இலட்சம் ரூபா இழப்பீட்டுத் தொகையை அனைத்துப் பயனாளிகளுக்கும் மே மாத இறுதிக்குள் வழங்கி முடிக்குமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க பணிப்புரை விடுத்தார். டித்வா சூறாவளியால் பகுதியளவிலும் முழுமையாகவும் சேதமடைந்த வீடுகளில் வசித்தவர்களுக்கு இழப்பீடு வழங்குதல் மற்றும் புதிய வீடுகளை கையளிக்கும் பணிகள் தொடர்பாக இன்று (22) முற்பகல் ஜனாதிபதி அலுலகத்தில் நடைபெற்ற முன்னேற்ற மீளாய்வுக் கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார். முழுமையாக சேதமடைந்த […]

ஐரோப்பா

ஜெட் எரிபொருள் தட்டுப்பாடு – 20000 விமானப் பயணங்கள் இரத்து!

  • April 22, 2026
  • 0 Comments

ஜெட் எரிபொருளின் அதிகரித்து வரும் விலையைச் சமாளிக்கும் பொருட்டு, லுஃப்தான்சா (Lufthansa) குழுமம் சுமார் 20000 பயணங்களை இரத்து செய்துள்ளது. அடுத்த ஆறு மாதங்களில் 40,000 மெட்ரிக் டன் எரிபொருளைச் சேமிப்பதை நோக்கமாகக் கொண்டு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. லுஃப்தான்சா நிறுவனத்தின் பிராந்திய துணை நிறுவனமான லுஃப்தான்சா சிட்டிலைன்  இயக்கும்  குறுகிய தூர விமானப் பயணங்களே முதன்மையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.  குறிப்பாக 27 விமானங்கள் நிரந்தரமாக நீக்கப்பட்டுள்ளன. மேற்படி விமான இரத்துக்கள் மே மாதத்தின் இறுதிவரை தொடரும் […]

உலகம்

ஹோர்முஸ் ஜலசந்தியில் இரு கப்பல்களை கைப்பற்றிய ஈரான்!

  • April 22, 2026
  • 0 Comments

ஈரானின் இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படையின் (IRGC) கடற்படை, ஹோர்முஸ் ஜலசந்தியில் இரண்டு கப்பல்களைக் கைப்பற்றியுள்ளதாக அறிவித்துள்ளது. எம்.எஸ்.சி ஃபிரான்செஸ்கா ( MSC Francesca) மற்றும் எபமினோண்டாஸ் (Epaminondas)  என்ற  இரு கப்பல்களும் விதிமுறைகளுக்கு உட்பட்டு இயங்கவில்லை என  குறிப்பிட்டுள்ளது. அத்துடன் இந்த இரண்டு கப்பல்கள் மீது  முன்னதாகவும் தாக்குதல் நடத்தப்பட்டிருந்ததாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மேலும் தற்போது கப்பல்கள் ஈரானின் துறைமுகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இருப்பினும் குறித்த கப்பல்கள் எவ்வாறு கைப்பற்றப்பட்டன என்பது குறித்த மேலதிக விவரங்கள் […]

உலகம்

அமெரிக்க விமானப்படைத் தளத்தில் உக்ரைனின் ட்ரோன் தொழில்நுட்பம்!

  • April 22, 2026
  • 0 Comments

அமெரிக்க இராணுவம் சமீபத்திய வாரங்களில் சவூதி அரேபியாவில் உள்ள  முக்கிய அமெரிக்க விமானப்படைத் தளத்தில் உக்ரேனிய ஆளில்லா விமான எதிர்ப்புத் தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியுள்ளதாக விடயத்தை நன்கு அறிந்த அதிகாரிகளை மேற்கோள் காட்டி ரொய்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. ஸ்கை மேப்’ எனப்படும் உக்ரேனிய கட்டளை மற்றும் கட்டுப்பாட்டுத் தளம் ஒன்று இளவரசர் சுல்தான் விமானப்படைத் தளத்தில் நிலைநிறுத்தப்பட்டிருப்பதாகவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. உக்ரேனிய இராணுவ அதிகாரிகள், அமெரிக்கப் போர் வீரர்களுக்கு ஸ்கை மேப் கொண்டு பயிற்சி அளிப்பதற்காக சமீபத்திய […]

error: Content is protected !!