உலகம் செய்தி

போர் நிறுத்தத்தைமீறி காசாவில் இஸ்ரேல் தாக்குதல்: ஒருவர் பலி!

  • April 22, 2026
  • 0 Comments

வடக்கு காசாவில் Jabalia பகுதியில் இஸ்ரேல் நடத்திய ட்ரோன் தாக்குதலில் பாலஸ்தீனர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். மேலும் சிலர் காயமடைந்துள்ளனர். போரினால் சிதைந்த தமது வீட்டின் கட்டிட இடிபாடுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்த பொதுமக்கள் மீது இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. போரினால் ஏற்கனவே முற்றிலும் அழிந்துபோன ஒரு பகுதியிலேயே இத்துயர் சம்பவம் இடம்பெற்றுள்ளது. காசாவில் போர் நிறுத்தம் அமுலில் உள்ள நிலையிலும் இஸ்ரேலின் தாக்குதல் தொடர்கின்றது என்பதையே இது வெளிப்படுத்துகின்றது. போர் நிறுத்தத்தைமீறி இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் ஆயிரத்துக்கு […]

இலங்கை செய்தி

வடக்கு ஆளுநரை சந்தித்தார் பலாலி விமானப்படை தளபதி!

  • April 22, 2026
  • 0 Comments

பலாலி விமானப்படைத் தளபதி குரூப் கப்டன் டி.எஸ்.எஸ்.சுரங்க செனவிரத்ன மற்றும் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் ஆகியோருக்கு இடையிலான சம்பிரதாயபூர்வ சந்திப்பொன்று இன்று (22.04.2026) புதன்கிழமை காலை ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது. இருவருக்குமிடையே மிகவும் சுமுகமான முறையில் அமைந்திருந்த இந்தச் சந்திப்பில், சமகால நிலைமைகள் குறித்துக் கலந்துரையாடப்பட்டது. இந்த உத்தியோகபூர்வ சந்திப்பில் வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர் சிவபாதசுந்தரம் சத்தியசீலனும் கலந்துகொண்டிருந்தார்.

உலகம்

புதிய பேச்சுவார்த்தைக்கு முன் போர் நிறுத்த மீறல்கள் நிறுத்தப்பட வேண்டும் – ஈரான்!

  • April 22, 2026
  • 0 Comments

“எந்தவொரு புதிய சுற்றுப் பேச்சுவார்த்தைகளுக்கும் முன்பு, அமெரிக்கா தனது ‘போர் நிறுத்த மீறலை’ நிறுத்த வேண்டும்,” என்று ஈரான் வலியுறுத்தியுள்ளது. ஈரானுக்கான ஐ.நா தூதர் அமீர்-சயீத் இரவானி (Amir-Saeid Iravani) இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். “அவர்கள் முற்றுகையை நீக்கியவுடன், அடுத்த சுற்றுப் பேச்சுவார்த்தைகள் இஸ்லாமாபாத்தில் நடைபெறும்,” என்று கூறிய அவர், ஈரான் எந்தவொரு சூழ்நிலைக்கும் தயாராக உள்ளது,” என்றும் குறிப்பிட்டார். மேலும் கருத்து வெளியிட்ட அவர், “நாங்கள் இராணுவ ஆக்கிரமிப்பைத் தொடங்கியவர்கள் அல்ல. அவர்கள் ஒரு அரசியல் […]

உலகம்

ஓமானுக்கு வடகிழக்கே பயணித்த கொள்கலன் கப்பல் மீது தாக்குதல்!

  • April 22, 2026
  • 0 Comments

ஓமானுக்கு வடகிழக்கே 15 கடல் மைல் (28 கி.மீ) தொலைவில் பயணித்த கொள்கலன் கப்பல் ஒன்றின் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாக பிரித்தானியா தெரிவித்துள்ளது. இங்கிலாந்து கடல்சார் வர்த்தக செயல்பாடுகள் (UKMTO) அமைப்பு இது தொடர்பில் தெரிவித்துள்ளது. UKMTO வெளியிட்ட அறிவிப்பில், ஐ.ஆர்.ஜி.சி-யின் (IRGC) துப்பாக்கிப் படகு ஒன்று கொள்கலன் கப்பலை நெருங்கி துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டதாகவும், “கப்பலின் பாலத்திற்குப் பலத்த சேதத்தை ஏற்படுத்தியதாகவும்” தெரிவித்துள்ளது. எவ்வாறாயினும் தீ விபத்துகளோ அல்லது சுற்றுச்சூழல் பாதிப்போ ஏற்படவில்லை என […]

இந்தியா தமிழ்நாடு

தமிழகத்தை ஆளப்போவது யார்? நாளை தேர்தல்!

  • April 22, 2026
  • 0 Comments

ஜனநாயகத் திருவிழாவாகக் கருதப்படும் தேர்தல், தமிழகத்தில் நாளை (23) நடைபெறவுள்ளது. நாளை காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு ஆரம்பமாகும். பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தம் 4,023 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். 5.73 கோடி பேர் வாக்களிக்க உள்ளனர். இதற்காக 75,064 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்தல் பிரச்சார நடவடிக்கை நேற்றுடன் நிறைவடைந்து, தற்போது அமைதி காலம் அமுலில் உள்ளது. தமிழகத்தில் இம்முறை நான்கு முனை போட்டி நிலவுகின்றது.

பொழுதுபோக்கு

குடியரசு தலைவர் மாளிகையில் விருந்து.. பிரபல நடிகை நெகிழ்ச்சி!

  • April 22, 2026
  • 0 Comments

தென் கொரிய நாட்டின் ஜனாதிபதி லீ ஜே மியங் உடன் நடிகை பிரியங்கா மோகன் இருக்கும் படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளது. கார்த்திக் இயக்கத்தில், பிரியங்கா மோகன் நடிப்பில் நேரடியாக நெட்ஃபிலிக்ஸ் தளத்தில் ‘மேட் இன் கொரியா’ மார்ச் 12 ஆம் திகதி வெளியானது. தமிழ்நாட்டில் இருந்து தென் கொரியா வரை செல்லும் செண்பாவின் பயணத்தை மையமாகக் கொண்ட இந்த கதை நடிகர்களின் திறமையான நடிப்பு, அதன் அழகான காட்சிகள் மற்றும் உணர்வுப்பூர்வமான கதைக்களம் என்பன பலரின் பாராட்டுகளை […]

இந்தியா செய்தி

‘கொடூரமான பயங்கரவாதத் தாக்குதல் நடந்த நாள் இன்று’: மோடி விடுத்துள்ள அறிவிப்பு!

  • April 22, 2026
  • 0 Comments

தீவிரவாதத்துக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது என்று பிரதமர் நரேந்திர மோடி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். கடந்த வருடம் ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹல்காமில் தீவிரவாத தாக்குதல் நடந்தது. இந்த தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். பஹல்காமில் தீவிரவாத தாக்குதல் நடந்து இன்றோடு ஓராண்டு ஆகியுள்ளது. தீவிரவாத அமைப்பான லஷ்கர்-இ-தைபாவின் டிஆர்எஃப் பிரிவு இந்த தாக்குதலை மேற்கொண்டது. இந்த தாக்குதலை தொடர்ந்து ஆபரேஷன் சிந்தூர், ஆபரேஷன் மஹாதேவ் உள்ளிட்ட ராணுவ நடவடிக்கைகளை இந்தியா முன்னெடுத்தது. மேலும், பாகிஸ்தான் உடனான சிந்து […]

உலகம் முக்கிய செய்திகள்

சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை திடீரென அதிகரிப்பு!

  • April 22, 2026
  • 0 Comments

ஈரானுடனான போர் நிறுத்தத்தை அமெரிக்கா நீட்டித்ததைத் தொடர்ந்து, எண்ணெய் விலைகள் குறைந்ததால், பணவீக்கம் திடீரென அதிகரிக்கும் என்ற அச்சம் எழுந்துள்ளது. இன் விளைவாக இன்றைய தினம் சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை உச்சம் தொட்டுள்ளது. ஏப்ரல் 13-க்குப் பிறகு இல்லாத அளவுக்கு மிகக் குறைந்த நிலைக்குச் சரிந்திருந்த தங்கத்தின் விலை இன்று அவுன்ஸ் ஒன்றுக்கு 0.9 சதவதம் அதிகரித்து $4,755.11 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல்   வெள்ளியின் விலை 1.5 சதவீததத்தால்  உயர்ந்து அவுன்ஸ் ஒன்று $77.84 ஆகவும், […]

உலகம் செய்தி

இஸ்ரேல் உளவாளிக்கு ஈரானில் மரண தண்டனை நிறைவேற்றம்!

  • April 22, 2026
  • 0 Comments

இஸ்ரேலிய உளவு அமைப்பான மொசாட்டுக்கு (Mossad) இரகசியத் தகவல்களை வழங்கியதாகக் குற்றம் சாட்டப்பட்ட ஈரானிய பாதுகாப்பு அதிகாரி ஒருவருக்கு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. ஈரானின் சிவில் பாதுகாப்புத் துறையில் உயர் பதவியில் இருந்த மெஹ்தி பரித் (Mehdi Farid) என்பவர், அந்நாட்டின் உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி தூக்கிலிடப்பட்டார். பாதுகாப்பு வசதிகளின் வரைபடங்கள், உள் கட்டமைப்பு விவரங்கள் மற்றும் பணியாளர் கோப்புகளை இஸ்ரேலுக்கு மாற்ற முயன்றதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. ஈரான் நாட்டின் நீதித்துறை ஊடகமான மிசான் (Mizan), […]

இலங்கை

யாழில் சோகம் : விபத்தில் தந்தை, மகன் பலி

  • April 22, 2026
  • 0 Comments

யாழ்ப்பாணம் உரும்பிராய் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். தந்தையும், மகனுமே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மோட்டார் சைக்கிளுடன் கனரக வாகனம் மோதி, இன்று அதிகாலை இந்த விபத்து இடம் பெற்றுள்ளது. இவர்களின் உடலங்கள் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன. இதேவேளை,  இச்சம்பவம் தொடர்பில் கனரக வாகனத்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

error: Content is protected !!