தோஹாவில் இஸ்ரேலிய தாக்குதலில் தலைமை தப்பியதாக கூறும் ஹமாஸ்,ஆனால் உறுப்பினர்கள் அறுவர் பலி
பாலஸ்தீனக் குழுவான ஹமாஸ், கத்தார்த் தலைநகர் தோஹாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் தனது உறுப்பினர்களில் அறுவர் உயிரிழந்ததாக கூறியுள்ளது. இருப்பினும் தனது சமரசக் குழு உறுப்பினர்களைப் படுகொலை செய்வதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சி தோல்விகண்டதாக அது சொன்னது. காஸா வட்டாரத்தில் சண்டையை நிறுத்த அண்மையில் அமெரிக்கா பரிந்துரையொன்றை முன்வைத்திருந்தது. அதுபற்றிக் குழுவினர் விவாதித்துக்கொண்டிருந்தபோது தாக்குதல் நடத்தப்பட்டதாக ஹமாஸ் தெரிவித்தது. சந்திப்பு நடைபெற்ற குடியிருப்பு வளாகம் தொடர் குண்டுவெடிப்புகளால் கடுமையாகச் சேதமுற்றது. இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகு, தாக்குதல் முற்றிலும் […]













