எல்லையில் மீண்டும் போர் பதற்றம் – ஹிஸ்புல்லா 13 இஸ்ரேல் குடியிருப்புகளை ஏவுகணையால் தாக்கியது
இஸ்ரேல்–லெபனான் எல்லைப் பகுதியில் பதற்றம் மீண்டும் அதிகரித்துள்ளது.
வடக்கு இஸ்ரேல் பகுதியில் உள்ள 13 குடியிருப்புகளை ஏவுகணைகளால் தாக்கியதாக ஹிஸ்புல்லா அறிவித்துள்ளது.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்தும் தாக்குதல்கள் நிற்கும் வரை தங்கள் நடவடிக்கைகள் தொடரும் என்றும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், இஸ்ரேல் மற்றும் லெபனான் இடையிலான பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
அதேவேளை, அமெரிக்காவில் நடைபெறும் பேச்சுவார்த்தைகளின் காரணமாக ஹிஸ்புல்லா தாக்குதல்கள் அதிகரிக்கக்கூடும் என இஸ்ரேல் பாதுகாப்புப் படை (IDF) எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேலும், இந்த மோதலில் லெபனான் அரசு நேரடியாக ஒரு தரப்பாக இல்லை என்றும், லெபனான் அரசுக்கு ஹிஸ்புல்லா மீது கட்டுப்பாடு குறைவாகவே இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.




