பொழுதுபோக்கு

விஜய்யின் இலங்கை விஜயத்திற்கு என்ன நடந்தது? ரஷ்யா பறக்க திட்டம்

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம்’ சுருக்கமாக தி கோட்.

ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். விஜய்யுடன் பல நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.

தற்போது இதன் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே இப்படத்தின் படப்பிடிப்பு வருகின்ற மார்ச் கடைசி வாரத்தில் நிறைவு பெறும் என கூறப்பட்டது. இப்போது இறுதிகட்ட படப்பிடிப்பை ரஷ்யா நகரில் 35 நாட்கள் நடத்த திட்டமிட்டுள்ளனர்.

வருகின்ற நாட்களில் இதற்காக படக்குழு ரஷ்யாவிற்கு பயணிக்க உள்ளனர்.

எனினும் இலங்கையில் படப்பிடிப்பு நடத்தப்பட உள்ளதாகவும் முன்னதாக செய்திகள் வெளியாகி இருந்தன.

இதை உண்மையாக்கும் வகையில் வெங்கட் பிரபு கடந்த மாதம் இலங்கையில் முகாமிட்டிருந்தார். இவர் கோட் படத்திற்காக லொகேஷன் தேடுவதாகவும், விஜய் இலங்கைக்கு வருவார் என்றும் செய்திகள் வெளிளியாகின.

எனினும் இது எதுவும் நடக்கவில்லை. படக்குழு தற்போது ரஷ்யா பறப்பதாக கூறப்படுகின்றது.

(Visited 5 times, 1 visits today)

MP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்

You cannot copy content of this page

Skip to content