அறிந்திருக்க வேண்டியவை

உலக மக்கள்தொகையில் ஏற்படவுள்ள மாற்றம் – பட்டியலில் இணையும் 50 நாடுகள்

2080ஆம் ஆண்டுகளின் பாதியில் உலக மக்கள்தொகை ஆக அதிகமாகச் சுமார் 10.3 பில்லியனை எட்டும் என்றும் ஐக்கிய நாட்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதன் பின்னர் மக்கள்தொகை சரியத் தொடங்கிவிடும் என குறிப்பிடப்படுகின்றது.

இந்த நூற்றாண்டு முடிவதற்குள் மக்கள்தொகை 10.2 பில்லியனாக இருக்கும் என்று ஐக்கிய நாட்டு நிறுவனம் வெளியிட்ட அறிக்கை குறிப்பிட்டது.

தற்போது உலக மக்கள்தொகை 8.2 பில்லியனாகும். ஏற்கனவே சீனா, ரஷ்யா, ஜப்பான், ஜெர்மனி உள்ளிட்ட சுமார் 63 நாடுகளில் மக்கள்தொகை உச்சத்தைத் தொட்டுவிட்டது.

அடுத்த 30 ஆண்டுகளில் இன்னும் கிட்டத்தட்ட 50 நாடுகள் அந்தப் பட்டியலைச் சேரும் என ஐக்கிய நாட்டு நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

2054ஆம் ஆண்டுக்குப் பிறகும் இந்தியா, இந்தோனேசியா, நைஜீரியா, அமெரிக்கா உள்ளிட்ட சுமார் 120 நாடுகளில் மக்கள்தொகை தொடர்ந்து வளர்ச்சி காணும் என்றது நிறுவனம்.

உலக மக்கள்தொகை இன்னும் மூப்படையக்கூடும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

2070களில் 65 வயது அல்லது அதற்கும் மேற்பட்டோரின் எண்ணிக்கை 2.2 பில்லியனாக இருக்கும் என்று நம்பப்படுகிறது.

SR

About Author

You may also like

அறிந்திருக்க வேண்டியவை

பூமியின் உள் மையத்தின் ரகசியம் அம்பலம்!

பூமியின் உட்புறத்தில் என்ன இருக்கிறது என்ற கேள்விகளுக்கான விடயங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. விஞ்ஞான வளர்ச்சி ஏற்படும்போது மேலும் ஆழமாகவும், விரிவாகவும் கேட்கபடுகிறது. கேள்விகள் கேட்பதும் அதற்கான பதிலை தேடுவதும்
அறிந்திருக்க வேண்டியவை

ChatGPTக்குப் போட்டியாக Google எடுத்த அதிரடி நடவடிக்கை

Google நிறுவனம் ChatGPTக்குப் போட்டியாக புதிய செயலியை அறிமுகம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதற்கமைய, செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் வாயிலாகச் செயல்படும் கலந்துரையாடல் செயலியை Google அறிமுகம் செய்யவுள்ளது.