ஐரோப்பா

உக்ரைனுக்கு 3 பில்லின் பெறுமதியான இராணுவ உதவியை வழங்கும் ஜெர்மனி!

ஜெர்மனி, உக்ரைனுக்கு ஏறக்குறைய 3 பில்லியன் பெறுமதியான இராணுவ உதவியை வழங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

டாங்கிகள், விமான எதிர்ப்பு அமைப்புகள் மற்றும் வெடிமருந்துகள் உட்பட 2.7 பில்லியன் யூரோக்கள் ($3 பில்லியன்) மதிப்புள்ள கூடுதல் இராணுவ உதவியை ஜெர்மனி உக்ரைனுக்கு வழங்கும் எனக் கூறப்பட்டுள்ளது.

ரஷ்யா, உக்ரைனை ஆக்கிரமித்ததில் இருந்து, உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் செலன்ஸ்கி, ஜெர்மனிக்கு பயணிக்கவுள்ளார். இந்த நிலையில், மேற்படி அறிவிப்பு வெளிவந்துள்ளது.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பாதுகாப்பு மந்திரி போரிஸ் பிஸ்டோரியஸ், உக்ரைனுக்கு “ஜேர்மனி தனது ஆதரவில் தீவிரமாக உள்ளது” என்பதை சமீபத்திய ஆயுதப் பொதியுடன் காட்ட விரும்புகிறது என்று கூறினார்.

“ஜெர்மனி தன்னால் இயன்ற அனைத்து உதவிகளையும் செய்யும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்