பாதுகாப்பு அமைச்சை மறுசீரமைத்து வரும் ஜெர்மனி!
ஜெர்மனியின் பாதுகாப்பு அமைச்சை மறுசீரமைத்து வருவதாக பாதுகாப்பு அமைச்சகம் இன்று அறிவித்துள்ளது.
இந்த அமைப்பை மேலும் நெகிழ்வானதாகவும், விரைவாகப் பதிலளிக்கக்கூடியதாகவும் மாற்றவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் புதுமையான தொழில்நுட்பங்கள் மற்றும் ஐரோப்பிய கூட்டாளிகளுடனான ஒத்துழைப்பில் அதிக கவனம் செலுத்துவதை நோக்கமாகக் கொண்டிருப்பதாக பாதுகாப்பு அமைச்சகம் சுட்டிக்காட்டியுள்ளது.
ஜெர்மனியில் தங்கியுள்ள 5000 துருப்புகளை மீளப் பெறுவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
நேட்டோவுடான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ள நிலையில் ஐரோப்பிய நாடுகள் தனது சொந்த பாதுகாப்பை பலப்படுத்துவதில் கூட்டிணைய வேண்டும் என ஜெர்மனியின் ஜனாதிபதி வலியுறுத்தி வருகிறார்.
இதற்கமைய ஜெர்மனி துருப்புக்களை அணித்திரட்டவும், பாதுகாப்பை வலுப்படுத்துவதிலும் கவனம் செலுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.




