இலங்கை

கட்டுநாயக்கவில் பரபரப்பு … திடீரென வெடித்த விமானப்படை வீரரின் துப்பாக்கி

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விசேட பிரமுகர்கள் பயன்படுத்தும் முனையத்தில் கடமையில் ஈடுபட்டிருந்த இலங்கை விமானப்படையின் விமானப்படை வீரர் ஒருவரின் துப்பாக்கி செவ்வாய்க்கிழமை (04) காலை தீடிரென வெடித்ததில் முனையத்தின் கூரை சேதமடைந்துள்ளது.

சிறிலங்கா விமானப்படையின் தலைமை விமானப்படையைச் சேர்ந்தவரிடம் இருந்த T-56 ரக துப்பாக்கி தவறுதலாக காலை 10.30 மணியளவில் வெடித்துள்ளது என்றும் இதனால், உயிர் சேதம் ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கட்டுநாயக்க விமான நிலையத்தில், பணம் செலுத்தி வசதிகளைப் பெறும் சிறப்பு விசேட விருந்தினர்கள் மற்றும் உலகின் முன்னணி வர்த்தகர்கள் இந்த முனையத்தின் ஊடாக அடிக்கடி பயணங்களை மேற்கொள்கின்றனர்.

கடமையில் இருந்த விமானப்பட வீரர் கைது செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸார் மற்றும் இலங்கை விமானப்படையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

(Visited 4 times, 1 visits today)

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்

You cannot copy content of this page

Skip to content