இந்தியா

டெல்லி – மகளுடன் பழக எதிர்ப்பு தெரிவித்த தாய்… சுட்டுக்கொலை செய்த சிறுவன்!

டெல்லியில் மகளுடன் பழக எதிர்ப்பு தெரிவித்ததால் தாயை சிறுவன் சுட்டுக் கொன்ற அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது.

வடமேற்கு டெல்லியின் ஜஹாங்கீர்புரி பகுதியில் நேற்று இளம்பெண் ஒருவரை சிறுவன் சுட்டுக் கொன்றான். இந்த சம்பவத்தில் தொடர்புடைய சிறுவன் மற்றும் அவனது இரண்டு நண்பர்கள் தலைமறைவாகி உள்ளனர். அவர்களைப் பிடிக்க பொலிஸார் தனிப்படை அமைத்துள்ளனர்.

இந்த கொடூர சம்பவம் குறித்து பொலிஸார் தரப்பில் கூறுகையில், “சிறுவன் கொல்லப்பட்ட பெண்ணின் மகளுடன் பழகி வந்துள்ளான்.

இதற்கு பெண்ணின் தாய் எதிர்ப்பு தெரிவித்ததால் அவர் மீது ஆத்திரத்தில் இருந்த சிறுவன் அவரை கொல்வதற்கு திட்டம் தீட்டியுள்ளான். இதையடுத்து தனது இரு நண்பர்களிடம் ஆலோசனை கேட்டு, அவர்கள் கூறியதன் பேரில் துப்பாக்கி வாங்கி, இந்த பாதக செயலில் ஈடுபட்டுள்ளான்.

கொலை சம்பவத்துக்கு ஒரு நாள் முன்பு சிறுவன் தனது வாட்ஸ்ஆப் ஸ்டேட்டஸில் கை துப்பாக்கி மற்றும் தோட்டாக்களின் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளான். இந்த ஸ்டேட்டஸ் தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளிவந்துள்ளன.இது தொடர்பாக உரிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சிறுவனை கைது செய்ய தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது” என்றனர்.

மகளுடன் பழக எதிர்ப்பு தெரிவித்த தாயை சிறுவன் சுட்டுக்கொன்ற சம்பவம் டெல்லியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

(Visited 6 times, 1 visits today)

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

இந்தியா செய்தி

இலங்கையில் உணவின்றி தவிக்கும் குடும்பங்கள்

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 59 வீதமான குடும்பங்கள் தேவையான உணவைப் பூர்த்தி செய்ய இயலவில்லை என தெரியவந்துள்ளது. அண்மையில் டுபாயில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் இந்த
இந்தியா செய்தி

இலங்கையில் விமான டிக்கெட்டுக்கின் விலை குறைப்பு!

இலங்கையில் விமான டிக்கெட்டுக்களுக்கான விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஐந்து சதவீதத்தினால் விமான டிக்கெட்டுக்களின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பே

You cannot copy content of this page

Skip to content