பொழுதுபோக்கு

விவாகரத்து சர்ச்சைகள்… ரன்வீர் சிங் கொடுத்த பதிலடி

இந்தி திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகையாக வலம் வரும் தீபிகா படுகோன் – ரன்வீர் சிங் ஆகியோர் பிரிவதாக ஒரு செய்தி இணையத்தில் பரவியது.

கடந்த 2018ஆம் ஆண்டில் நடிகர் ரன்வீர் சிங்கை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அன்றிலிருந்து தங்களது திருமணப் புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வைத்திருந்த ரன்வீர் சிங், கடந்த சில நாட்களுக்கு முன்பு தங்களது திருமணப் புகைப்படங்கள் அனைத்தையும் நீக்கிவிட்டார்.

தீபிகாபடுகோன் தற்போது கர்ப்பமாக இருக்கும் சூழலில், இருவரும் விவாகரத்து செய்யப் போகிறார்களா? என்ற கேள்வி ரசிகர்களிடையே உலவத் தொடங்கியது.

ஆனால், தற்போது கர்ப்பமாக இருக்கும் தீபிகா படுகோனுடன் ரன்வீர் இருக்கும் வீடியோ வெளியாகி வைரலாக பரவி வருகிறது. அந்த வீடியோவில், காரில் இருந்து தீபிகா படுகோன் அவரது கணவர் ரன்வீர் சிங் உடன் இறங்கும் காட்சி உள்ளது.

இதன் மூலம், தீபிகா – ரன்வீர் தம்பதி தங்களது முதல் குழந்தையை வரவேற்க தயாராகிவிட்டார்கள் என ரசிகர்கள் பலரும் சமூகவலைதளப் பக்கங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

மேலும் மற்றொரு வீடியோவில், ரன்வீர் சிங் தனக்கு பிடித்த மோதிரங்களை பற்றி கூறி வரும்போது, தனது திருமண மோதிரத்தை காட்டி, அது தனக்கு பிடித்த மோதிரம் என கூறியுள்ளார்.

(Visited 2 times, 1 visits today)

MP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்

You cannot copy content of this page

Skip to content