இலங்கை

இலங்கையில் மீண்டும் அச்சுறுத்தும் கொரோனா – அதிகரிக்கும் மரணங்கள்

இலங்கையில் இந்த வருடத்தில் கொவிட் தொற்றாளர்கள் மற்றும் இறப்புகளின் அதிகபட்ச தினசரி எண்ணிக்கை பதிவாகியுள்ளது.

கடந்த சனிக்கிழமை இவ்வாறு அதிக எண்ணிக்கையிலான நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

தொற்றுநோயியல் பிரிவின் தினசரி நிலைமை அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, குறித்த தினத்தில் 15 பேருக்கு கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதுடன், மூன்று உயிரிழப்புகளும் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையின்படி, நாட்டில் சிகிச்சை பெறும் கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கையை 61 ஆகவும், இதுவரை அடையாளம் காணப்பட்ட மொத்த கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 672,357 ஆகவும் உள்ளது.

மேலும், மொத்த கொவிட் மரணங்களின் எண்ணிக்கையை 16,864 ஆக உயர்ந்துள்ளது.

இதேவேளை, உலக சுகாதார ஸ்தாபனத்தின் கூற்றுப்படி, கொவிட் தொற்றுநோய் பரவ தொடங்கியதில் இருந்து பதிவான தொற்றாளர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் இலங்கை தற்போது 231 நாடுகளில் 80 ஆவது இடத்தில் உள்ளது.

(Visited 6 times, 1 visits today)

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்

You cannot copy content of this page

Skip to content