உலகம்

பிரேசில் – அமெரிக்க ஜனாதிபதிகளுக்கு இடையில் உரையாடல் – பேசப்பட்ட விடயம் வெளியானது

பிரேசில் ஜனாதிபதி லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வாவும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பும் தொலைபேசியில் உரையாடியுள்ளனர்.

இரு நாட்டுத் தலைவர்களும் சுமார் 30 நிமிடங்கள் நீடித்த மிகவும் நட்புரீதியான தொலைபேசி உரையாடலை நடத்தியதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பிரேசில் ஜனாதிபதி தனது நாட்டின் தயாரிப்புகள் மீது விதிக்கப்பட்ட வரிகளையும், அதிகாரிகளுக்கு எதிராக விதிக்கப்பட்ட தடைகளையும் நீக்குமாறு அமெரிக்க ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த தொலைபேசி உரையாடல் தொடர்பாக அமெரிக்க ஜனாதிபதி தனது சமூக ஊடகக் கணக்கில் ஒரு குறிப்பையும் வெளியிட்டுள்ளார்.

எதிர்காலத்தில் இரு நாட்டுத் தலைவர்களும் நேரில் சந்தித்துப் பேசவும் ஒப்புக்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

SR

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்