ஆசியா

சீனாவின் இராஜதந்திரம் எந்த மூன்றாம் தரப்பினருக்கும் எதிரானது அல்ல – டிரம்பிற்கு பதிலடி

சீனாவின் எந்தவொரு நாட்டுடனான ராஜதந்திர உறவுகளும், மூன்றாம் தரப்பினருக்கு எதிரானதல்ல என்று சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் குவோ ஜியாகுன் தெரிவித்துள்ளார்.

நேற்று நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் அவர் இதனை வலியுறுத்தினார்.

சீனா, ரஷ்யா மற்றும் வட கொரியா இணைந்து சதி செய்கின்றன என்ற அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கும் விதமாக, சீனாவின் நிலைப்பாட்டை அவர் தெளிவுபடுத்தினார்.

“சீனா தனது வெளிநாட்டு உறவுகளை வளர்க்கும் போது, அது எந்த மூன்றாம் தரப்பு நாட்டையும் எதிர்க்கும் நோக்கத்தில் அல்ல,” என்று அவர் குறிப்பிட்டார்.

மேலும், ஜப்பானிய ஆக்கிரமிப்புக்கு எதிரான சீன மக்களின் போராட்ட வெற்றி மற்றும் உலக பாசிசத்திற்கு எதிரான போரின் 80வது ஆண்டு நினைவு நாளையொட்டி, சீன அரசு வெளிநாட்டு விருந்தினர்களை அழைத்து, உலக நாடுகளுடன் இணைந்து அமைதியின் முக்கியத்துவத்தை வலியுறுத்த விரும்புவதாக கூறினார்.

இவை தொடர்பான குற்றச்சாட்டுகளை சீனா முற்றிலும் நிராகரிக்கிறது என்றும், வரலாற்றை நினைவுகூரும் போது, அமைதியை அடிப்படையாகக் கொண்ட எதிர்காலத்தைக் கட்டமைக்க உறுதியாக உள்ளது என்றும் குவோ ஜியாகுன் தெரிவித்தார்.

SR

About Author

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்