ஆசியா செய்தி

டிரம்ப் விதித்த வரிகளால் கடும் கோபத்தில் சீனா எடுத்த அதிர நடவடிக்கை

டிரம்ப் விதித்த வரிகளால் கோபமடைந்த சீனா, அமெரிக்காவிடமிருந்து வாங்கிய Boeing விமானங்களைத் திருப்பி அனுப்பியுள்ளது.

வரிகளால் இரு நாடுகளுக்கும் இடையே வர்த்தகப் போர் நிலவுகிறது. சீனா ஏற்கனவே இரு விமானங்களைத் திருப்பி அனுப்பிவிட்டதாக Boeing கூறியது.

மேலும் ஒரு விமானத்தைச் சீனா திருப்பி அனுப்பும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு 50க்கும் அதிகமான விமானங்கள் சீனாவிற்குச் செல்லவிருந்ததாக Boeing நிறுவனத்தின் தலைமை நிர்வாகி குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் சீன வாடிக்கையாளர்கள் விமானங்களை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்று தெரிவித்துவிட்டதாக அவர் கூறியுள்ளார்.

சீனாவிலிருந்து இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு அமெரிக்கா 145 சதவீத வரி விதித்துள்ளது.

பதிலுக்கு அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யும் பொருள்களுக்குச் சீனா 125 சதவீத வரி விதித்துள்ளது.

சீனாவுடன் வர்த்தக உறவை மேம்படுத்துவது குறித்து நம்பிக்கையாக இருப்பதாக டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

வரிகள் குறைக்கப்படும் என்றும் ஆனால் அது பூஜ்யமாக இருக்காது என்றும் அவர் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.

(Visited 20 times, 1 visits today)

SR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!