இந்தியா செய்தி

மும்பை மருத்துவமனையில் தொலைபேசி வெளிச்சத்தில் இடம்பெற்ற பிரசவம் – இருவர் உயிரிழப்பு

மும்பை மருத்துவமனையில் மருத்துவர்கள் செல்போன் டார்ச்சைப் பயன்படுத்தி சிசேரியன் பிரசவத்தை மேற்கொண்டதால் கர்ப்பிணித் தாயும் குழந்தையும் உயிரிழந்துள்ளனர்.

மேலும், இந்த அதிர்ச்சி சம்பவம்,இந்தியாவின் பணக்கார அமைப்பான பிரஹன்மும்பை முனிசிபல் கார்ப்பரேஷன் நடத்தும் மருத்துவமனையில் நடந்துள்ளது.

சிறப்பு திறன் கொண்ட குஸ்ருதீன் அன்சாரி, கால் இல்லாத அவரது 26 வயது மனைவி சஹிதுன் சுஷ்மா ஸ்வராஜ் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார். இந்த ஜோடிக்கு திருமணமாகி 11 மாதங்கள்தான் ஆகிறது.

பிரசவம் இடம்பெறும் போது மின்சாரம் துண்டிக்கப்பட்டதாகவும், மூன்று மணி நேரமாக ஜெனரேட்டர் இயக்கப்படவில்லை என்றும் குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர். தாயையும், குழந்தையையும் இழந்த பிறகும், இருளில் மற்றொரு பிரசவம் நடந்ததாக அவர்கள் தெரிவித்தனர்.

குடும்பத்தினர் பல நாட்களாக மருத்துவமனைக்கு வெளியே போராட்டம் நடத்தி வருகின்றனர், இறுதியாக பிரஹன்மும்பை முனிசிபல் கார்ப்பரேஷன் (பிஎம்சி) விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.

(Visited 4 times, 1 visits today)

Prasu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி

You cannot copy content of this page

Skip to content