இந்தியா விளையாட்டு

பந்துவீச்சாளர்களின் திறமையால் வெற்றியடைந்த சென்னை அணி

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற சென்னை பேட்டிங் தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் ஆடிய சென்னை அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 167 ரன்கள் சேர்த்தது. ஷிவம் துபே 25 ரன்கள் சேர்த்தார். ருதுராஜ் 24 ரன், அம்பதி ராயுடு 23 ரன், ரகானே 21 ரன், ஜடேஜா 21 ரன் அடித்தனர். 8-வது வீரராக களமிறங்கிய கேப்டன் டோனி, அதிரடியாக ஆடி 9 பந்துகளில் 20 ரன்கள் விளாசினார்.

டெல்லி கேப்பிட்டல்ஸ் சார்பில் மிட்செல் மார்ஷ் 3 விக்கெட், அக்சர் பட்டேல் 2 விக்கெட் கைப்பற்றினார்கள்.

இதையடுத்து, 168 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணி களமிறங்கியது. அந்த அணியின் ரூசோவ் 35 ரன்னும், மனீஷ் பாண்டே 27 ரன்னும், அக்சர் படேல் 21 ரன்னும் எடுத்தனர்.

இறுதியில், டெல்லி அணி 20 ஓவரில் 8 விக்கெட் 140 இழப்புக்கு ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் சென்னை அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

சென்னை அணி சார்பில் பதீரனா 3 விக்கெட், தீபக் சாஹர் 2 விக்கெட் வீழ்த்தினர்.

(Visited 6 times, 1 visits today)

Prasu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

இந்தியா செய்தி

இலங்கையில் உணவின்றி தவிக்கும் குடும்பங்கள்

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 59 வீதமான குடும்பங்கள் தேவையான உணவைப் பூர்த்தி செய்ய இயலவில்லை என தெரியவந்துள்ளது. அண்மையில் டுபாயில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் இந்த
இந்தியா செய்தி

இலங்கையில் விமான டிக்கெட்டுக்கின் விலை குறைப்பு!

இலங்கையில் விமான டிக்கெட்டுக்களுக்கான விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஐந்து சதவீதத்தினால் விமான டிக்கெட்டுக்களின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பே

You cannot copy content of this page

Skip to content