இலங்கை

மே 9 கலவரத்தின் போது எரிக்கப்பட்ட பேருந்துகளுக்கு நட்டஈடு வழங்கப்படவில்லை – கெமுனு விஜேரத்ன!

கடந்த வருடம் மே மாதம் 09ஆம் திகதி நாட்டில் இடம்பெற்ற வன்முறை சம்பவத்தின் போது எரிக்கப்பட்ட பேருந்துகளுக்கு இதுவரை நட்டஈடு வழங்கப்படவில்லை என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன குற்றம் சுமத்தியுள்ளார்.

இந்த சம்பவம் இடம்பெற்று ஒரு வருடம் கடந்துள்ள நிலையில், அவர் இந்த விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளார்.

அன்றை சம்பவத்தில் 32 பேருந்துகள் முற்றாக சேதமடைந்துள்ளதாகவும்,  ஐம்பதுக்கும் மேற்பட்ட பேருந்துகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாகவும் கெமுனு விஜேரத்ன சுட்டிக்காட்டியுள்ளார்.

நட்டஈடு வழங்கப்படாமையால் பஸ் உரிமையாளர்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளதாகவும்,  இதுவரை பஸ் ஊழியர்கள் வேலையிழந்துள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

பாதிக்கப்பட்ட அரசியல்வாதிகளுக்கு நிவாரணத் திட்டத்தை அரசாங்கம் தயாரித்த போதிலும்இ அழிக்கப்பட்ட பேருந்துகளுக்கு அவ்வாறான திட்டம் எதுவும் நடைமுறைப்படுத்தப்படவில்லை என கெமுனு விஜேரத்ன மேலும் தெரிவித்துள்ளார்.

(Visited 12 times, 1 visits today)

VD

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்

You cannot copy content of this page

Skip to content