இலங்கை செய்தி

கொழும்பில் முறிந்த விழுந்த மரம் – இரு வாகனங்களுக்கு சேதம்

கொழும்பு பிரதேசத்தை பாதித்த கடும் மழை மற்றும் காற்று காரணமாக கொள்ளுப்பிட்டி ஆர்.ஏ.தி மெல் மாவத்தை சார்ள்ஸ் டிரைவ் வீதிக்கு அருகில் மரம் ஒன்று விழுந்ததில் இரண்டு வாகனங்கள் சேதமடைந்துள்ளது.

இந்த சம்பவத்தின் ஒருவர் காயமடைந்துள்ளதாக கொள்ளுப்பிட்டி பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மரம் முறிந்து விழுந்ததில் முச்சக்கரவண்டி ஒன்றும் கார் ஒன்றும் பலத்த சேதமடைந்துள்ளன.

முச்சக்கரவண்டியில் பயணித்த நபர் ஒருவர் காயமடைந்துள்ளார்.

குறித்த நபர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இதனால், அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது, சில நிமிடங்களில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க பொலிசார் நடவடிக்கை எடுத்திருந்தனர்.

(Visited 4 times, 1 visits today)

Jeevan

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை

You cannot copy content of this page

Skip to content