ஐரோப்பா செய்தி

உக்ரைனுக்கு மீண்டும் நேசக்கரம் நீட்டும் பிரித்தானியா

உக்ரைனுக்கு பிரித்தானியா தொடர்ந்தும் உறுதியான ஆதரவு வழங்கும் பிரதமர் ஸ்டார்மர் மீண்டும் உறுதிப்படுத்தியதாக டவுனிங் ஸ்ட்ரீட் தெரிவித்துள்ளது.

உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் செலென்ஸ்கியுடன் பிரதமர் ஸ்டார்மர் தொலைபேசியில் உரையாடிய போதே இதனை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார்.

ரஷ்ய எண்ணெய் தடைகளில் மேற்கொள்ளப்பட்ட மாற்றங்கள் குறித்து பிரதமர் விமர்சனங்களை எதிர்கொண்ட அதே நாளில் இந்த உரையாடல் இடம்பெற்றுள்ளது.

மேலும், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின் போர் நடவடிக்கைகளை பலவீனப்படுத்துவதற்கு பிரித்தானியா உறுதியாக இருப்பதாகவும் பிரதமர் கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ரஷ்ய பொருளாதாரத்தின் மீது அழுத்தத்தை அதிகரிக்கும் நோக்கில் புதிய தடைகள் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், அதன் விளைவாக உலக சந்தையில் ரஷ்ய எண்ணெய் குறைவாக இருக்கும் என்றும் பிரதமர் ஸ்டார்மர் செலென்ஸ்கிக்கு எடுத்துரைத்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பிரித்தானியாவின் இந்த ஆதரவுக்கு உக்ரைன் ஜனாதிபதி நன்றி தெரிவித்துள்ளார்.

Sainth

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி