ஐரோப்பா

ரஷ்யாவின் சொத்துக்களை பறிமுதல் செய்யும் பிரித்தானியா

பறிமுதல் செய்யப்பட்ட மற்றும் முடக்கப்பட்ட ரஷ்ய சொத்துக்களை தக்கவைத்துக்கொள்ள அனுமதிக்கும் சட்டத்தை பிரித்தானியா அறிமுகப்படுத்தியுள்ளது.

குறித்த சட்டத்தின் ஊடாக உக்ரைனுக்கு இழப்பீடு வழங்கப்படும் வரை பிரித்தானிய அரசாங்கம் அதன் தடைகளை நடைமுறையில் வைத்திருக்கும். மட்டுமின்றி பறிமுதல் செய்யப்பட்ட தொகையை உக்ரைனுக்கு வழங்கவும் இந்த சட்டத்தில் வழி செய்யப்பட்டுள்ளது.வெளியான தகவலின் அடிப்படையில், ரஷ்ய அரசு மற்றும் தனிநபர்களுக்கு சொந்தமான முடக்கப்பட்ட சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படுவதை சட்டம் உறுதி செய்யும், அத்தகைய நடவடிக்கையை எடுக்கும் முதல் ஐரோப்பிய அரசாங்கம் என பிரித்தானியா மாறவிருக்கிறது.

சுவிட்சர்லாந்து உட்பட பல மேற்கத்திய அரசாங்கங்கள், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் அழுத்தம் அதிகரித்துள்ள போதிலும், ரஷ்ய நிதிகளை பறிமுதல் செய்வதிலிருந்து இதுவரை விலகியிருக்கின்றன.மட்டுமின்றி, வெளிநாடுகளில் வைத்திருக்கும் மேற்கத்திய நாடுகளின் சொத்துக்களும் கைப்பற்றப்படுவதற்கு இது ஒரு முன்னுதாரணமாக அமையும் என்றும், இதனால் ஐரோப்பிய வங்கி முறையின் மீதான முதலீட்டாளர்களின் நம்பிக்கையைப் பாதிக்கும் என்ற அச்சமும் இந்த விவகாரத்தில் உள்ளது.

Putin held phone call with Turkey's Erdogan, Kremlin says | Reuters

புதிதாக விதிக்கப்பட்டுள்ள தடைகளின் கீழ் கொண்டுவரப்பட்ட எந்தவொரு தனிநபரும் பிரித்தானியாவில் உள்ள தங்களது அனைத்து சொத்துக்களையும் வெளியிட வேண்டிய கட்டாயம் ஏற்படும்.விதிகளுக்கு இணங்கத் தவறினால் அபராதம் அல்லது நிதி பறிமுதல் செய்யப்படும் என்று கூறப்படுகிறது. பிரித்தானியாவை பொறுத்தமட்டில் உக்ரைன் போருக்கு பின்னர் ரஷ்யாவுக்கு சொந்தமான 26 பில்லியன் பவுண்டுகள் தொகையை முடக்கி வைத்துள்ளது.

மொத்தத்தில், மேற்கத்திய அரசாங்கங்கள் சுமார் 300 பில்லியன் டொலர்கள் ரஷ்ய மத்திய வங்கி சொத்துக்களை முடக்கியுள்ளதாக கூறப்படுகிறது. மட்டுமின்றி, ரஷ்ய குடிமக்கள் மற்றும் தொழிலதிபர்களின் 80 பில்லியன் டொலர்கள் பெறுமதியான சொத்துக்களையும் முடக்கியுள்ளனர்.பிரித்தானியா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளின் இந்த நடவடிக்கை காலத்திற்கு ஒவ்வாதது என ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் விமர்சித்துள்ளார். மேலும், இந்த விவகாரத்தில் ரஷ்யா உரிய காலத்தில் தகுந்த பதிலளிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

(Visited 10 times, 1 visits today)

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்

You cannot copy content of this page

Skip to content