உலகம்

இடமாற்றம் வழங்க ஆடுகளை இலஞ்சமாக பெற்ற அதிகாரி! ரணில் பிறப்பித்துள்ள உத்தரவு

ஆசிரியர் இடமாற்றப் பிரிவிற்குப் பொறுப்பான தேசிய பாடசாலையின் பிரதிப் பணிப்பாளர் ஒருவர் இடமாற்றம் வழங்குவதற்கு ஆசிரியர் ஒருவரிடமிருந்து இரண்டு ஆடுகளை இலஞ்சமாகப் பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் அண்மையில் இடம்பெற்ற ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு கூட்டத்தில் இந்தவிடயம் தெரியவந்துள்ளது.

குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சமன்பிரிய ஹேரத் இந்த தகவலை அங்கு தெரிவித்தார்.

ஆசிரியர் ஒருவர் இடமாறுதல் பெறுவதற்காக சம்பந்தப்பட்ட பிரதிப் பணிப்பாளரை சந்திக்கச் சென்ற போது இரண்டு ஆடுகளை இலஞ்சமாக கோரியநிலையில் அவர் அதனை வழங்கிய நிலையில் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாகவும் குழுக் கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.

சம்பவம் தொடர்பில் முழுமையான விசாரணைகளை மேற்கொண்டு குறித்த அதிகாரிக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறு கல்வி அமைச்சருக்கு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.

 

(Visited 16 times, 1 visits today)

TJenitha

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்

You cannot copy content of this page

Skip to content