ஆசியா

ஜப்பானில் அகதிகள் மசோதா தொடர்பில் எம்.பிக்கள் இடையே கைகலப்பு

ஜப்பான் பொதுவாக அமைதிக்கும் கட்டுப்பாடுக்கும் பெயர் பெற்ற நாடு. ஆனால் கடந்த வியாழன் அன்று, சர்ச்சைக்குரிய அகதிகள் மசோதா திருத்த சட்டம் ஜப்பான் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றபட்டபோது கைகலப்பு ஏற்பட்டது. ஆளும் கட்சியினருக்கும் எதிர்க்கட்சியினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

இந்த மசோதா, ஆளும் லிபரல் டெமாக்ரடிக் கட்சி மற்றும் இரண்டு எதிர்க்கட்சிகளான கட்சிகள் ஆகியவற்றால் ஆதரிக்கப்பட்டது.இருப்பினும், ஜப்பானின் அரசியலமைப்பு ஜனநாயகக் கட்சி மற்றும் ஜப்பானிய கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவை சட்டத்தை கடுமையாக எதிர்த்தன.

இந்நிலையில் ஜப்பான் நாடாளுமன்றத்தில் சர்ச்சைக்குரிய அகதிகள் மசோதா திருத்த சட்டம் நிறைவேற்றபட்டது.இந்த மசோதா அகதிகளின் உரிமைகளைப் போதுமான அளவில் பாதுகாக்கவும், குடியேற்ற வசதிகளுக்குள் நிலைமைகளை மேம்படுத்தவும் தவறிவிட்டது என்று எதிர்கட்சியினர் குற்றம்சாட்டினர்.

ஜப்பானிய கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் மசோதாவை வாபஸ் பெறக் கோரியும், விரிவான விவாத நடத்தக்கோரியும் நாடாளுமன்றத்தை முடக்கினர்.

(Visited 13 times, 1 visits today)

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்

You cannot copy content of this page

Skip to content