வட அமெரிக்கா

டொரன்டோவில் மூன்று பாடசாலைகளுக்கு விடுக்கப்பட்ட வெடுகுண்டு அச்சுறுத்தல்

கனடாவின் டொரன்டோ நகரில் அமைந்துள்ள மூன்று பாடசாலைகளில் வெடிகுண்டு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.இந்த மூன்று பாடசாலைகளையும் பொலிஸார் சோதனைக்கு உட்படுத்தியுள்ளனர்.இதன்போது குறித்த பாடசாலைகளில் எவ்வித குண்டு அச்சுறுத்தல்களும் கிடையாது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வெடிகுண்டு தொடர்பிலான தகவல் கிடைக்கப்பெற்றதும் குறித்த பாடசாலைகளில் இருந்து மாணவர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.

பாடசாலை தொடர்பிலான அச்சுறுத்தல்கள் குறித்து கூடுதல் கவனம் செலுத்தப்படுவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.இவ்வாறான அச்சுறுத்தல்களை கருத்தில் கொள்ளாதிருக்க முடியாது எனவும் அவர்கள் சுட்டிக்காட்டி உள்ளனர்.

இதன் காரணமாகவே குறித்த மூன்று பாடசாலைகளிலும் தீவிர சோதனை நடத்தப்பட்டது என குறிப்பிட்டுள்ளனர்.நம்பகமான தகவலா இல்லையா என்பதை விட இவ்வாறான சந்தர்ப்பங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படுவது முதன்மையானது என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

(Visited 7 times, 1 visits today)
Avatar

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி வட அமெரிக்கா

கனடாவில் வீட்டில் இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை!

கனடாவில் ஆயுத உற்பத்தியில் ஈடுபட்ட நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். நோவா ஸ்கோட்டியாவின் மீகர்ஸ் கிரான்ட் என்னும் பகுதியின் வீடொன்றில் இந்த இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை
செய்தி வட அமெரிக்கா

அறுவைசிகிச்சை முடித்த பின் தெரிய வந்த உண்மை… கதறி அழுத தந்தை!

அமெரிக்காவைச் சேர்ந்த இளம்பெண் தன் தந்தைக்கே தெரியாமல், ரகசியமாக அவருக்குச் சிறுநீரக தானம் செய்துள்ள சம்பவத்தால், நெகிழ்ந்து போன தந்தையின் வீடியோ இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. அமெரிக்காவின்

You cannot copy content of this page

Skip to content